Posts

Showing posts from February, 2017

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு.

ஹஜ்ரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வமிசத்தைச் சார்ந்த இமாமுல் முஸ்லிமீன் அபூ அப்தில்லாஹ் அஹ்மது இப்னு ஹன்பல் அவர்களின் தந்தை பெயர் முஹம்மது அவர் தந்தை ஹன்பல் அவர் தந்தை பிலால் அவர் தந்தை அஸத் அவர் தந்தை இத்ரீஸ். இவர்களுடைய தந்தை முஹம்மது அரசுப் படையில் ஒரு சாதாரணப் போர்வீராக வேலை செய்தார். இமாம் அவர்கள் தாயின் வயிற்றிலிருக்கும் போதே இவர்களுடைய தாயாரும், தகப்பனாரும் மர்வ் என்ற ஊரிலிருந்து பக்தாதில் குடியேறினார்கள். அங்கே ஹிஜ்ரி 164 ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 (கி.பி. 780 நவம்பர்) ல் இமாம் அவர்கள் பிறந்தார்கள். இவர்களின் இரண்டு வயதில் தந்தையாரை இழந்தார்கள். அன்னையார் மிகவும் கஷ்டப்பட்டு இவர்களை வளர்த்தார்கள். பக்தாதிலேயே கல்வி பயிலவும் இயன்றவரை ஏற்பாடு செய்தார்கள். குடும்பம்: இமாம் அவர்களுக்கு பல புத்திரர்கள் இருந்துள்ளனர். இமாம் அவர்கள் காலம் ஆகும் போது இரண்டு வயதிலும், ஐம்பது நாளிலும் கூட பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாரிடமே கல்வி கற்று மேதைகளான இரு புதல்வர்கள் இருந்தனர். அவர்களில் மூத்தவரான முஹம்மது சாலிஹ் இஸ்பஹானில் நீதிபதியாக பதவி வகித்தா...

இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு

இமாம் அவர்களின் இயற் பெயர் முஹம்மது. இடுகுறிப் பெயர் அபூ அப்துல்லாஹ். பட்டப் பெயர் நாஸிருல் ஹதீது. எனினும் அவர்களுடைய பாட்டனாரின் பாட்டனார் பெயரான ஷாபியீ என்பதே அவர்களுடைய உலகம் போற்றும் பெயராக நிலைத்து விட்டது. நபிபெருமானாரின் முன்னறிவிப்பு: குறைஷி குலத்தைச் சேர்ந்த ஆலிம் ஒருவர் பூமியின் பல பாகங்களிலும் அறிவை-மார்க்க ஞானத்தை நிரப்புவார்‘ என்று எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள். இது இமாம் ஷாபியீதான் என்பது அஹ்மது இப்னு ஹன்பல் போன்ற பல இமாம்களுடைய கருத்தாகும். வமிசவழி: அரேபியாவிலுள்ள உயரிய குலமான குறைஷி குலத்தை சார்ந்தவர்கள். முஹம்மது பின் இத்ரீஸ் பின் அப்பாஸ் பின் உதுமான் பின் ஷாபியீ பின் ஸாயிப் பின் உபைதா பின் அப்து பின் ஹாஷிம் பின் அப்துல் முத்தலிப் பின் அப்த மனாப் ஹாஷிமி. இந்த வகையில் இவர்களுடைய பரம்பரை நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய குடும்பத்தோடு போய் சேருகிறது. இந்த வரிசையிலுள்ள ஸாயிப் என்பவர் பத்ரு போர்க்களத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகப் போரிட்டு முஸ்லிம்களால் கைது செய்யப்பட்டு, பின்னர் முஸ்லிமாகி நபிபெருமான...

இமாம் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு.

அண்மையில் ஒரு காலம் வரும். அப்போது மக்கள் கலாஞான வேட்கையால் உந்தப்பட்டுத் தங்கள் ஒட்டகங்களை(ப்பல திசைகளிலும்) ஓட்டுவார்கள். எனவே, (அப்போது அவர்களுக்கு) மதீனாவின் ஒரு கலாஞானியை விட வேறு யாரும் பெரிய மேதையாக கிடைக்க மாட்டார்கள் என்று எம்பெருமானார் அருளியுள்ளதாக ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஹதீதில் குறிப்பிட்டபடி மதீனாவின் கலாஞானி இமாம் மாலிக் அவர்களே என்பது உலமாக்களின் கருத்தாகும். இமாம் அவர்களின் குடும்பம் யமன் பகுதியில் வாழ்ந்தவர்கள். இஸ்லாம் தோன்றிய பின்னர் மதீனாவில் வந்து குடியேறினர். முழுக்க முழுக்க அரபி மரபைச் சார்ந்தவர்கள். தோற்றப் பொலிவு: உயரமான உருவமும், சிகப்பும் வெண்மையும் கலந்த நிறமும், அகன்ற நெற்றியும், பெரிய கண்களும், எடுப்பான மூக்கும் உடையவர்கள். அவர்களுடைய தாடி நீண்டிருந்தது. அளவோடு வளர்த்த மீசையிருந்தது. தலைமுடி குறைவாகவே இருந்தது. விலையுயர்ந்த ஆடைகளையே அணிவார்கள். உயர்தரமான அத்தர்களையும் அதிகமாக பூசிக் கொள்வார்கள். அவர்கள் நீண்ட குஞ்சம் விட்டு தலைப்பாகை கட்டுவார்கள். அந்த குஞ்சத்தை வலப்பக்கம் அல்லது இடப்பக்கத்...

மத்ஹபிற்குரிய நான்கு முத்துக்களின் சரித்திர சுருக்கம்.

இமாம் அபூஹனீபா.ரலியல்லாஹ அன்ஹு பிக்ஹின் ஆரம்பம்: ஹதீதுகளின் அடிப்படையில் தனி மனிதனுடையவும், சமுதாயத்துடையவும் நெறிமறைக்கான மார்க்கத்தின் ஏவல்,விலக்கல்களையு...