அற்புதங்கள் நிறைந்த ஆஷுரா தினம்
♣ அரபி அகராதியில் ” عاشوراء ” என்பதற்க்கு:-
ஆஷூரா – عَاشُورَاءَ என்ற அரபிச் சொல்லுக்கு ‘பத்தாவது’ என்று பொருளாகும். இதனடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் 10 – ம் நாள் ஆஷூரா ஆகும்.
ஆஷூரா அன்று நடந்த சம்பவங்களில் சில...
بِعشر كرامات. الأول: مُوسَى عَلَيْهِ السَّلَام، فَإِنَّهُ نصر فِيهِ، وفلق الْبَحْر لَهُ، وغرق فِرْعَوْن وَجُنُوده. الثَّانِي: نوح عَلَيْهِ السَّلَام اسْتَوَت سفينته على الجودي فِيهِ. الثَّالِث: يُونُس، عَلَيْهِ السَّلَام، أنجي فِيهِ من بطن الْحُوت. الرَّابِع: فِيهِ تَابَ الله على آدم عَلَيْهِ السَّلَام، قَالَه عِكْرِمَة. الْخَامِس: يُوسُف عَلَيْهِ السَّلَام، فَإِنَّهُ أخرج من الْجب فِيهِ. السَّادِس: عِيسَى عَلَيْهِ السَّلَام، فَإِنَّهُ ولد فِيهِ، وَفِيه رفع. السَّابِع: دَاوُد، عَلَيْهِ السَّلَام، فِيهِ تَابَ الله عَلَيْهِ. الثَّامِن: إِبْرَاهِيم، عَلَيْهِ السَّلَام، ولد فِيهِ. التَّاسِع: يَعْقُوب، عَلَيْهِ السَّلَام، فِيهِ رد بَصَره. ذكر بَعضهم من الْعشْرَة: إِدْرِيس، عَلَيْهِ السَّلَام، فَإِنَّهُ رفع إِلَى مَكَان فِي السَّمَاء، وَأَيوب، عَلَيْهِ السَّلَام، فِيهِ كشف الله ضره، وَسليمَان عَلَيْهِ السَّلَام، فِيهِ أعطي الْملك (عمدة القاري شرح صحيح البخاري ، ١٦٧/١١)
عاشوراء; هو اليوم العاشر من شهر مُحَرَّم في التقويم الهجري، ويسمى عند المسلمين بيوم عاشوراء وهو اليوم الذي نجّىٰ الله فيهموسى من فرعون ويصادف اليوم الذي قتل فيه الحسين بن علي حفيد النبي محمد في معركة كربلاء، لذلك يعدّه الشيعة يوم عزاء وحزن. كما وقعت العديد من الأحداث التاريخية الأخرى في نفس اليوم. ويعدّ يوم عاشوراء عطلة رسمية في بعض الدول مثل إيران،باكستان، لبنان، البحرين، الهند والعراق والجزائر. يعدّ صيام يوم عاشوراء سُنة عند أهل السنة والجماعة. என்பதாகும்.
அன்புள்ளவர்களே! முஹர்றம் பத்தாம் நாள் ஆஷுரா தினம் அதிவிசேடங்களை உள்ளடக்கிய மா தினமாகும்.
قاﻝ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ ﻓﻴﻤﺎ ﺃﻗﺴﻢ ﺑﻪ: {ﻭاﻟﻔﺠﺮ ﻭﻟﻴﺎﻝ ﻋﺸﺮ} (اﻟﻔﺠﺮ:2 )
228 – ﺃﺧﺒﺮﻧﺎ ﺃﺑﻮ ﻧﺼﺮ ﺑﻦ ﻗﺘﺎﺩﺓ، ﺃﺧﺒﺮﻧﺎ ﺃﺑﻮ ﻣﻨﺼﻮﺭ اﻟﻨﻀﺮﻭﻱ، ﺣﺪﺛﻨﺎ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﻧﺠﺪﺓ، ﺣﺪﺛﻨﺎ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﻣﻨﺼﻮﺭ، ﺣﺪﺛﻨﺎ ﻧﻮﺡ ﺑﻦ ﻗﻴﺲ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺜﻤﺎﻥ ﺑﻦ ﻣﺤﺼﻦ، ﺃﻥ اﺑﻦ ﻋﺒﺎﺱ، ﻛﺎﻥ ﻳﻘﻮﻝ ﻓﻲ ﻭاﻟﻔﺠﺮ ﻭﻟﻴﺎﻝ ﻋﺸﺮ. (اﻟﻔﺠﺮ:1) ﻗﺎﻝ: اﻟﻔﺠﺮ ﻫﻮ اﻟﻤﺤﺮﻡ ﻓﺠﺮ اﻟﺴﻨﺔ.
العرف الشذى شرح الترمذي للكشميري – (2 / 43)
قوله : ( ولا تقوم الساعة ) ورد في حديث قوي : أن قيام القيامة يكون يوم عاشوراء ، عاشر المحرم .
****
عمدة القاري شرح صحيح البخاري – (17 / 135)
النوع الثالث لم سمي اليوم العاشر عاشوراء اختلفوا فيه فقيل لأنه عاشر المحرم وهذا ظاهر وقيل لأن الله تعالى أكرم فيه عشرة من الأنبياء عليهم الصلاة والسلام بعشر كرامات الأول موسى عليه السلام فإنه نصر فيه وفلق البحر له وغرق فرعون وجنوده الثاني نوح عليه السلام استوت سفينته على الجودي فيه الثالث يونس عليه السلام
أنجي فيه من بطن الحوت الرابع فيه تاب الله على آدم عليه السلام قاله عكرمة الخامس يوسف عليه السلام فإنه أخرج من الجب فيه السادس عيسى عليه السلام فإنه ولد فيه وفيه رفع السابع داود عليه السلام فيه تاب الله عليه الثامن إبراهيم عليه السلام ولد فيه التاسع يعقوب عليه السلام فيه رد بصره العاشر نبينا محمد – صلى الله عليه وسلم – فيه غفر له ما تقدم من ذنبه وما تأخر
هكذا ذكروا عشرة من الأنبياء عليهم الصلاة والسلام قلت ذكر بعضهم من العشرة إدريس عليه السلام فإنه رفع إلى مكان في السماء وأيوب عليه السلام فيه كشف الله ضره وسليمان عليه السلام فيه أعطي الملك
ஆதம்- ஹவ்வா அலைஹிமிஸ்ஸாம் ஆகியோர் படைக்கப்பட்டதும் இந்நாளில்தான், அன்றுதான் நபீ ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் மன்னித்தான், இந்நாளில்தான். அவ்விருவரும் சுவர்க்கம் சென்றதும் இந்நாளில்தான்.
அன்றுதான் நபீ நூஹ் (அலை) அவர்களுடைய கப்பல் தூபான் வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றப்பட்டு ஜூதி மலையில் தரை தட்டியது.
அன்றுதான் நபீ மூஸா (அலை); நபீ ஈஸா (அலை) பிறந்தார்கள்.
அன்றுதான் சர்வாதிகாரி நும்ரூதால் நெருப்புக்கிடங்கில் எரியப்பட்ட நபீ (இப்றாஹிம்) அலை காப்பாற்றப்பட்டார்கள்.
யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளிவந்ததும், அன்றுதான் நபீ யூனுஸ் (அலை) அவர்களின் சமூகத்தை விட்டு வேதனை நீக்கப்பட்டது.
அன்றுதான் நபீ ஐயூப் (அலை) அவர்களின் துன்பம் நீங்கியது.
அன்றுதான் நபீ யஃகூப் (அலை) அவர்கள் தனது மகன் யூசுப் (அலை) அவர்களை இழந்ததால் தேய்ந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.
அன்று பாழ்கிணற்றில் எறியப்பட்ட நபீ யூசுப் (அலை) அதிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
அன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பமாக்கப்பட்டது.
அன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்தது.
அன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியில் உள்ளவர்களுக்கு இறங்கியது.
தூபான் வெள்ளத்தின் பின் பூமியில் முதன் முதலாக சமையல் செய்யப்பட்டது. இதை நூஹ் நபீ அவர்களே செய்தார்கள்.
அன்றுதான் சுலைமான் நபி அவர்களுக்கு முழு உலக ஆட்சியும் வழங்கப்பட்டது.
அன்றுதான் நபீ ஸக்கரிய்யா (அலை) அவர்களுக்கு நபீ யஹ்யா (அலை) அவர்கள் பிறந்தார்கள்.
இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்ததும் அவர்களுக்கு ‘கலீல்’ என்னும் பட்டம் இறைவனால் சூட்டப்பட்டதும், அவர்கள் நம்ரூத் மூட்டிய நெருப்பிலிருந்து விடுதலையானதும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இறைஞ்சுதலை இறைவன் ஏற்றுக் கொண்டதும்,
அன்றுதான் பிர்அவ்னும் அவனதும் சூனியக்காரர்களும் தோற்கடிக்கப்பட்டனர்.
அன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான்
அன்றுதான் நபீ பேரர் ஹுசைன் (ரளி) அஹ்லுல்பைத் என்றழைக்கப்படுவோரில் அநேகரும் கொலை செய்யப்பட்டனர்.
இது மட்டுமல்லாமல் இறுதி நாள் (கியாமத்) இந்த ஆஷூராவுடைய ஒரு வெள்ளிக் கிழமையில் தான் வரும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ وَفِيهِ أُخْرِجَ مِنْهَا وَلاَ تَقُومُ السَّاعَةُ إِلاَّ فِي يَوْمِ الْجُمُعَةِ)) (صحيح مسلم)
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 7. ஜும்ஆ
♣ அல்லாஹ் [ﷻ] கூறுகின்றான்:- قال الله تعالى Allah says in the Qur’an:
قوله تعالي : وَالْفَجْرِ* وَلَيَالٍ عَشْرٍ (89:2
பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
மஆரி:.புல் குர்ஆன் என்ற குர்ஆனுடைய விரிவுரை நூலின் ஆசிரியர் மு:.ப்தீ ஷ:.பீ சாஹிப் அவர்கள்” முத்தான மூன்று பத்து நாட்கள்” என்று துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களையும், முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்களையும், ரமலான் மாதத்தின் முதல் பத்து நாட்களையும், குறிப்பிடுகிறார்கள். காரணம் وليال عشر என்பதற்கு விளக்கமாக இந்த மூன்று பத்து நாட்களையும் குர்ஆனுடைய விரிவுரையாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
(ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அவர்களைத் தொட்டும் துல் ஹஜ்ஜூடைய முதல் பத்து நாள் என்றும், ரமளானுடைய முதல் பத்து நாள் என்றும் இரு வேறு ரிவாயத்துகள் வந்துள்ளது. ஹஜ்ரத் அபூ ஜஅ:.பர் இப்னு ஜரீர் ரஹ் அவர்களைத் தொட்டும் முஹர்ரம் உடைய பத்து நாட்கள் என்றும் வந்துள்ளது. (நூல்: த:.ப்ஸீர் இப்னு கசீர்)
மற்றொரு காரணம் இந்த மூன்றிலும் பத்தாவது நாள் பெருநாளாக கொண்டாடப் படுகிறது. ரமலானிலும், துல்ஹஜ்ஜிலும் நாம் கொண்டாடும் இரு பெருநாளோடு ஆஷூரா நாளிலும் நாம் நோன்பு வைத்து சிறப்பிக்கிறோம்.
அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம் மாதம்:-
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل“ ((رواه مسلم)).
நபி ﷺ அவர்களிடம் “கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை எது? ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி ﷺ அவர்கள், “கடமையான தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, நடுநிசியில் தொழுவதாகும். ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதநோன்பாகும்” என்று விடையளித்தார்கள். முஸ்லிம் (2158)
♣ ஆஷூரா நோன்பின் சிறப்புகள்:-[ باب فضل صوم عاشوراء ]
நபி ﷺ அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.
كَانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ، وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الكَعْبَةُ [ص:149]، فَلَمَّا فَرَضَ اللَّهُ رَمَضَانَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ، وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ
ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள். புகாரி 1592
குறிப்பு : மேல் கூறப்பட்ட ஹதீதுகளிலிருந்து விளங்கக்கிடைக்கும் விடயம், ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பு நோற்பது அவசியமான ஒன்றாக இருந்தது. ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் அவசியம் என்பதுதான் எடுபட்டதே தவிர அது நோற்பது அதிக நன்மையை எதிர்பார்க்கக் கூடிய பாவங்களை போக்கக்கூடிய சுன்னத் என்பது எடுபடவில்லை, நபி ﷺ அவர்கள் ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷுரா நோன்பை விட்டுவிட்டார்கள் என்பதின் கருத்து, அது அவசியம் என்பதைத் தவிர சுன்னத்து என்பதையல்ல. அது இதுவரையும் சுன்னத்தாகவே இருக்கின்றது என இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பத்ஹுல்பாரி என்னும் தனது நூலில் குறிப்பிடுகின்றார்கள்
அறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி ﷺ அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி ﷺ அவர்கள், நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள். முஸ்லிம் 1901
மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
[ஆஷூரா நோன்பு ஏன்?]
ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில் தெளிவாகவே வந்துள்ளது.
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمَّا قَدِمَ المَدِينَةَ، وَجَدَهُمْ يَصُومُونَ يَوْمًا، يَعْنِي عَاشُورَاءَ، فَقَالُوا: هَذَا يَوْمٌ عَظِيمٌ، وَهُوَ يَوْمٌ نَجَّى اللَّهُ فِيهِ مُوسَى، وَأَغْرَقَ آلَ فِرْعَوْنَ، فَصَامَ مُوسَى شُكْرًا لِلَّهِ، فَقَالَ «أَنَا أَوْلَى بِمُوسَى مِنْهُمْ» فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ
நபி ﷺ அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். “இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். “இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்” என்று யூதர்கள் கூறினர். நபி ﷺ அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள். புகாரி 3397
நான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தினர் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.
حِينَ صَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا: يَا رَسُولَ اللهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ» قَالَ: فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ، حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
நபி ﷺ அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள், “இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் நபிصلى الله عليه وسلم அவர்கள் மரணித்துவிட்டார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி), முஸ்லிம்)
مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلَّا هَذَا اليَوْمَ، يَوْمَ عَاشُورَاءَ، وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ
ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை. [ புகாரி 2006]
صيام يوم عاشوراء احسب على الله ان يكفر السنة التى قبله. (مسلم- 1163
அபூகதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ” நபி ﷺ அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், ” கடந்த ஒரு வருட பாவங்களுக்கு அது பரிகாரமாகும்” என்று கூறினார்கள். (முஸ்லிம்)
ஆஷூரா நன்மைகள்.
َ عَنِ النُّعْمَانِ بْنِ سَعْدٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى عَلِيٍّ يَسْأَلُهُ عَنْ شَهْرٍ يَصُومُهُ، فَقَالَ لَهُ عَلِيٌّ: مَا سَأَلَنِي أَحَدٌ عَنْ هَذَا بَعْدَ إِذْ سَمِعْتُ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ: أَيُّ شَهْرٍ يَصُومُهُ مِنَ السَّنَةِ؟ فَأَمَرَهُ بِصِيَامِ الْمُحَرَّمِ وَقَالَ: ((إِنَّ فِيهِ يَوْماً تَابَ اللَّهُ عَلَى قَوْمٍ وَيَتُوبُ فِيهِ عَلَى قَوْمٍ)). [سنن الدارمي
ஹஜ்ரத் அலீ ரலி அவர்களிடம் ஒரு மனிதர் வந்து நோன்பு நோற்க உகந்த மாதம் எது என வினவினார். அதற்கு அலி ரலி அவர்கள் இது சம்பந்தமாக நபி ﷺ அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டு அதற்கு அவர்கள் பதிலளித்ததை நான் செவியுற்ற பின்பு யாரும் என்னிடம் இதுவரை கேட்கவில்லை (நீங்கள் தான் முதலில் கேட்கிறீர்கள்) நபி ﷺ அவர்களிடம் வருடத்தில் நோன்பு நோற்பதற்கு தகுதியான மாதம் எது? என அந்த மனிதர் கேட்க அவருக்கு முஹர்ரம் மாதத்தில் நோன்பிருக்கும் படி நபியவர்கள் கட்டளையிட்டார்கள் மேலும் “அந்த மாதத்தில் தான் அல்லாஹ் ஒரு கூட்டத்தினரின் பிழையை பொறுத்தான். இன்னும் ஒரு கூட்டத்தினரின் பிழையை பொறுத்துக் கொள்ளவிருக்கிறான்” என்றும் நபிகள் ﷺ அவர்கள் கூறினார்கள்.
عن ابن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم ” من وسع علي عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته” قال سفيان انا قد جربناه فوجدناه كذالك.
மேலும் ஆஷூராவுடைய தினத்தில் யார் தன் குடும்பத்தினருக்கு விசாலமாக செலவு செய்வாரோ அவருக்கு வருடம் முழுவதும் அல்லாஹ் பொருளாதாரத்தை விசாலப் படுத்தி வைப்பான். என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
முஹர்ரம் பிறந்தவுடன் இரண்டு நோன்புக்கு தயாராகி விடு!
· عَنْ الْحَكَمِ بْنِ الْأَعْرَجِ قَالَ انْتَهَيْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَهُوَ مُتَوَسِّدٌ رِدَاءَهُ فِي زَمْزَمَ فَقُلْتُ لَهُ أَخْبِرْنِي عَنْ صَوْمِ عَاشُورَاءَ فَقَالَ إِذَا رَأَيْتَ هِلَالَ الْمُحَرَّمِ فَاعْدُدْ وَأَصْبِحْ يَوْمَ التَّاسِعِ صَائِمًا قُلْتُ هَكَذَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ قَالَ نَعَمْ – مسلم
2087. அல்ஹகம் பின் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ”ஸம்ஸம்” கிணற்றுக்கருகில் தமது மேல்துண்டைத் தலையணையாக வைத்துச் சாய்ந்திருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். ”ஆஷூரா நோன்பு பற்றி எனக்குச் சொல்லுங்கள்!” என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ”முஹர்ரம் மாதத்தின் (முதல்) பிறையை நீர் கண்டதும் (அன்றிலிருந்து நாட்களை) எண்ணிக்கொள்வீராக! ஒன்பதாவது நாள் காலையில் நீர் நோன்பாளியாக இருப்பீராக!” என்று சொன்னார்கள். ”இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் இந்த (ஆஷூரா) நோன்பை நோற்றார்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு, ”ஆம்” என்று அவர்கள் விடையளித்தார்கள். [ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13.]
சஹாபாக்களின் ஆர்வம், குழந்தைகளும் நோன்பு.
· فعن الربيّع بنت معوذ قالت أرسل النبي صلى الله عليه وسلم غداة عاشوراء إلى قرى الأنصار: ” من أصبح مفطراً فليتم بقية يومه، ومن أصبح صائماً فليصم” قالت: فكنا نصومه بعد ونصوم صبياننا ونجعل لهم اللعبة من العهن، فإذا بكى أحدهم على الطعام أعطيناه ذاك حتى يكون عند الإفطار. البخاري:1960.
ருபய்யிவு பின்து முஅவ்வித் என்ற ஸஹாபிப் பெண்மணி அறிவிக்கிறார்கள். நபி ஸல் அவர்கள் ஆஷூரா தினத்தின் காலைப் பொழுதிலே அன்சாரிகளின் கிராமத்திற்கு ஆள் அனுப்பி “யார் காலையில் நோன்பு நோற்காத நிலையில் எழுந்தாரோ அவர் மீதமுள்ள பகல் நேரம் முழுவதும் நோன்பு நோற்றவற்றைப் போல ஆகியிருக்கட்டும். யார் காலையில் நோன்பு நோற்றிருந்த நிலையில் எழுந்தாரோ அவர் நோன்பிருக்கட்டும் என்று அறிவிக்கச் செய்தார்கள். அதற்குப் பிறகு நாங்கள் ஆஷூராவுடைய தினத்தில் நோன்பு நோற்பவர்களாகவும் எங்களுடைய சிறு பிள்ளைகளை நோன்பிருக்கச் செய்பவர்களாகவும் ஆகியிருந்தோம். மேலும் நாங்கள் உரோமத்தில் விளையாட்டுப் பொருட்களை செய்து வைத்துக் கொண்டு பசியால் அழுகும் குழந்தைகளுக்கு அதைத் தருவோம் இவ்வாறே நோன்பு திறக்கும் நேரம் வரை…..ஆகியிருக்கும். ( நூல்- புகாரி)
யூதர்களுக்கு மாறு செய்வோம்:-
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மதீனா நகருக்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது மதீனாவில் இருந்த யூதர்கள் ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்கக் கண்டார்கள். நீங்கள் ஏன் இந்த நாளில் நோன்பு நோற்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஹஜ்ரத் மூஸா அலை அவர்களையும், அவர் தம் உம்மத்தினரான பனீ இஸ்ரவேலர்களையும், :.பிர்அவ்னிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய தினம் எனவே அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டாக நாங்கள் இந்நாளில் நோன்பிருக்கிறோம் என்று சொன்ன சமயம் உங்களை விட மூஸா நபியை பின்பற்ற நாங்கள் மிகத் தகுதி வாய்ந்தவர்கள் எனக் கூறி நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்கச் சொல்லி அதில் யூதர்களுக்கு மாறு செய்வதற்காக முஹர்ரம் உடைய ஒன்பதாம் நாளையும் சேர்த்து இரண்டு நாட்களுக்கு நோன்பிருக்க கட்டளையிட்டார்கள்.
عَنِ ابْنِ عَبَّاسٍ- رَضِيَ اللَّهُ عَنْهُمَا- أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ الْمَدِينَةَ فَوَجَدَ الْيَهُودَ صِيَامًا يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((مَا هَذَا الْيَوْمُ الَّذِي تَصُومُونَهُ)). فَقَالُوا هَذَا يَوْمٌ عَظِيمٌ أَنْجَى اللَّهُ فِيهِ مُوسَى وَقَوْمَهُ وَغَرَّقَ فِرْعَوْنَ وَقَوْمَهُ فَصَامَهُ مُوسَى شُكْرًا فَنَحْنُ نَصُومُهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((فَنَحْنُ أَحَقُّ وَأَوْلَى بِمُوسَى مِنْكُمْ)). فَصَامَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَرَ بِصِيَامِهِ. (صحيح البخاري)
நபி ﷺ அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். “இது என்ன நாள்?“ என்று கேட்டார்கள். யூதர்கள் “இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்“ என்று கூறினார்கள். நபி ﷺ அவர்கள், “உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்“ என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30.
«2722» وَحَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ أَنَّهُ سَمِعَ أَبَا غَطَفَانَ بْنَ طَرِيفٍ الْمُرِّيَّ يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ- رَضِيَ اللَّهُ عَنْهُمَا- يَقُولُ حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ- إِنْ شَاءَ اللَّهُ- صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ)). قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. (صحيح مسلم)
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், ”அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், ”இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் இறந்துவிட்டார்கள். [ஸஹீஹ் முஸ்லிம்)
முஹர்ரம் 9-ம் நாள் நோன்பு வைக்க தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்பட்டால் முஹர்ரம் 10/11-ம் நாள் நோன்பு நோற்பது கூடும். ஏனெனில் யூதர்களுக்கு மாறு செய்வதற்காக வேண்டித்தான் ஒன்பதாம் நாளையும் சேர்த்துக் கொள்வது சுன்னத் என்றார்கள். எனவே 9-ம் நாள் தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்பட்டால் அந்த மாறு செய்வதை 10/11-ம் நாளிலும் செய்யலாம் “எதிர்வரும் வருடம் நான் இருந்தால் ஒன்பதையும் சேர்த்து நோற்பேன்” என்ற ஹதீதை ஆதாரமாக வைத்து ஒன்பதாம் நாளையும் பத்தாம் நாளையும் நோன்பு நோற்பதே மிகச் சிறந்த முறையாகும்
நபி ﷺ அவர்கள், ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காவிட்டாலும் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதால், நாம் ஒன்பது, பத்து ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.
இரண்டு நாள் தொடர்ந்து நோன்பு வைக்க வேண்டும். உதாரணம் [ 9, 10 அல்லது 10, 11] ஒரு நாள் மட்டும் நோன்பு வைப்பது மக்ருஹ் ஆகும்.
முஹர்ரம் மாதமும் அது தரும் பாடமும்:-
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் உயிரோடு இருந்து முஹர்ரம் 10 அன்று மட்டும் நோன்பு வைத்திருந்தாலும்; அவர்களின் எண்ணத்திற்கியைந்து 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பு வைக்கும் முஸ்லிம் சமூகம் அதன் பின்னணியில் உள்ள நபி ﷺ அவர்களின் உறுதியான சமுதாய சிந்தனையைக் குறித்து ஆழமாகச் சிந்திப்பதில்லை. நபி ﷺ அவர்கள், “அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் 9 அன்றும் நோன்பு வைப்பேன்” என்று ஏன் கூறினார்கள்? அதற்கு நபி ﷺ அவர்களின் வாழ்வில் விரவிக் கிடக்கும் பல்வேறு நிகழ்வுகள் தெளிவான பதிலைத் தருகின்றன.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْكٰفِرِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ ؕ اَ تُرِيْدُوْنَ اَنْ تَجْعَلُوْا لِلّٰهِ عَلَيْكُمْ سُلْطٰنًا مُّبِيْنًا
முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; 4:144.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْيَهُوْدَ وَالنَّصٰرٰۤى اَوْلِيَآءَ ؔۘ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍؕ وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ
முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். 5:51.
யூத சமுதாயம் என்பது, உலகில் பல சமூகங்களை நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் எண்ணிக்கையை வைத்து மிகவும் அதிகமான நபிமார்களைப் பெற்றுக் கொண்ட சமுதாயமாகும். எனினும் தங்களுக்கு அனுப்பப்பட்ட பல நபிகளை நிராகரித்தது மட்டுமன்றி அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபிகளுள் அதிமானோரைக் கொடூரமாகக் கொலையும் செய்தவர்கள் யூதர்களாவர். இதனால் இறைவனின் கடும் சினத்திற்குரியவர்களாகி இறைவனால் சபிக்கப்பட்ட கூட்டமாக, இறைவனின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் கூட்டமாக அவர்கள் இருக்கின்றனர். இந்தக் காரணத்தினால் எப்பொழுதுமே தம்முடைய செயல்களில் எதுவும் யூதர்களுக்கு ஒப்பாக எவ்விஷயத்திலும் இருந்து விடக்கூடாது என்பதில் நபி ﷺ அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டனர். அதோடு தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும்படி வலியுறுத்தவும் செய்தனர். இதற்கு உதாரணமாகப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். அவற்றில் ஒன்றுதான் இந்த ஆஷூரா 9ஆம் நாள் நோன்பும். எவ்விஷயத்திலும் யூதர்களின் செயலுக்கு, தான் ஒப்பாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய நபி ﷺ அவர்கள் நன்மைகள் செய்வதிலும் நன்றி செலுத்துவதிலும் அவர்களைவிட மேலதிகமாக இருக்கும் முகமாக ஆஷூரா 9 – அன்றும் நோன்பு வைக்க விழைந்தார்கள். இவ்வாறு தமது ஒவ்வொரு அசைவிலும் மாற்றாரின் கலாச்சாரத்தைப் பின்பற்றிவிடக்கூடாது என்பதில் நபி ﷺ அவர்கள் கவனமாக இருந்ததன் காரணம், இஸ்லாமியக் கலாச்சாரம் எவ்விதத்திலும் மற்ற கலாச்சாரங்களோடு ஒன்றி அழிந்து விடக்கூடாது; தனித்தன்மையும் திகழ வேண்டும் என்று கருதியேயாகும்.
عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “ خَالِفُوا الْمُشْرِكِينَ، وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ ”.
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். புகாரி 5892
கர்பலா:-
இற்றைக்கு 1400 – ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சோக நிகழ்வு அது. நீதியும் அநீதியும் சத்தியமும் அசத்தியமும் மோதிக் கொண்ட நாள் அது.மனச்சாட்சிகளை உருகவைக்கும் அந்த நிகழ்வுதான் கர்பலா நிகழ்வு. ஹிஜ்ரி61ம் ஆண்டு அண்ணல் நபி ﷺ அவர்களின் பேரர் இமாம் ஹூசைன்(ரலி) அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பனீ உமையா கூட்டத்தினரால் கர்பலா எனும் பாலைவனத்தில் மிகபரிதாபகரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
நபியவர்களினதும், தோழர்களினதும் அளப்பெரிய தியாகங்களுக்கும் அயராத உழைப்பிற்கு மத்தியில்; வளர்த்தெடுக்கப்பட்ட புனித இஸ்லாம்,உமையாக்களினால் மாசுபடுத்தப்பட்டது.
குர்ஆனின்; விளக்கங்களும் நபியவர்களின் சுன்னாவும் அக்கொடியவர்களின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் சாதகமாக வியாக்கியானம் செய்யப்பட்டன.
அநீதிகளும் அனாச்சாரங்களும் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றப்பட்டன. இஸ்லாமிய நல்லொழுக்கங்களும் அதன் பெருமான விழுமியங்களும் சிதைக்கப்பட்டு சீரழிக்கப்பட்டன. நபியவர்களின் மார்க்கம் அழிக்கப்படும் அந்த அபாயகர நிலையை கண்டு அதனைப்பாதுகாக்கும் முழுநோக்குடன் இமாம் ஹூசைன் (ரலி) அவர்கள் கர்பலா நோக்கி புறப்பட்டார்கள். அவர்கள் தனது பயனத்தின் நோக்கம் பற்றிக் கூறுகையில் “நான் சமூகத்தில் குளப்பத்தை ஏற்படுத்த இப்பயனத்தை மேற்கொள்ளவில்லை. எனது பாட்டனாரினது மார்க்கத்தில் சீர்திருத்தத்தை மேற்கொண்டு நன்மையை ஏவி தீமையைத்தடுக்கவே இதனை செய்கிறேன்” எனக் கூறினார்கள். நபியவர்களின் மார்க்கம் யஸீதினால் குளிதோன்றி புதைக்கப்படுவதை சகித்துக் கொள்ளாத இமாம் ஹூசைன் அவர்கள் தனது குடும்பத்தாருடனும் தனது போராட்டத்திற்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்த வாக்கு மீறாத தோழர்களுடனும் கர்பலாவுக்கு வருகை தந்து அநியாயக்காரர்களுடன் போராடி தனதுயிரையும் தனது குடும்பம் மற்றும் தோழர்களின் உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையிலே தியாகம் செய்தார்கள்.
நபி ﷺ அவர்களின் பேரப்பிள்ளையான ஹுஸைன் (ரலி) அவர்களின் மரணம் (கொலை) யஸீத் பின் முஆவியா என்பவரால் நடத்தப்படுகின்றது. யஸீத் பின் முஆவியா தனி மனிதராக நின்று இந்த காரியத்தில் ஈடுபடவில்லை. அந்ந சம்பவம் நடக்கும் போது சம்பவம் நடந்த கர்பலா பகுதியில் யஸீத் பின் முஆவியா என்பவரே ஆளுனராக இருந்தார். அவருடைய ஆளுமைப் பகுதிகளுக்கு எதிராகவும் அவரது அதிகாரத்துக்கு எதிராகவும் நடந்தேறிய குழப்பங்களிலேயே ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்படுகிறார்கள். (முஹர்ரம் மாதம் 10 நாள் இந்த சம்பவம் நடக்கின்றது)
நபி ﷺ அவர்களின் அன்புக்கும் அளவுகடந்த நேசத்துக்கும் உரிய பேரரான இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களும், பெண்கள் சிறுவர்கள் அடங்கிய அவர்களது உறவினர்களும் உமையா ஆட்சியாளனான யசீதினால் கர்பலாத் திடலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, ஈட்டி முனையில் சிரசுகள் குத்தி உயர்த்தப்பட்டு ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோரமான நிகழ்வை எதிர்கொண்ட கசப்பான அனுபவம் இந்த முஹர்ரம் மாதத்துக்கு உண்டு.வரலாற்றிலே ஒரு திருப்புமுனையாக அமைந்து, குறிப்பிட்டதொரு சகாப்தத்தையே உருவாக்கிய கர்பலா நிகழ்வில் பின்னிப் பிணைந்து காணப்படும் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களின் வாழ்க்கைத் தடங்கள் மிகுந்த அனுதாபத்திற்குரியனவாகும்.
இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள், சிறந்த சிந்தனையுடையோராயும் துணிச்சல் மிக்கோராயும் துன்பங்களையும் ஆபத்துகளையும் எதிர்நோக்கும் வல்லமை பெற்றோராயும் விளங்கினார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உயிரையே இழக்க நேரிட்டாலும் அசைக்க முடியாத மனவுறுதியோடு எதையும் தாங்கும் மனத்திண்மை படைத்தோராய்த் திகழ்ந்தார்கள். இஸ்லாமியக் கொள்கைகளை, கோட்பாடுகளைக் காப்பாற்றிக் கொள்வதிலே அன்னார் காட்டிய வீரமும் மனவுறுதியும் சரியான தீர்மானங்களும் சிலாகிக்கத்தக்கவை.
வெறும் அரசியல் நோக்கிற்காக அல்லாமல், தூர்ந்து செல்லும் இஸ்லாமியத்தைப் பாதுகாக்கும் உயர் இலட்சியத்துடன் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள், இந்நிகழ்வில் பங்கேற்றார்கள். ஆட்சியாளர்களை சீர்திருத்தம் செய்வதற்கு சமாதான முயற்சியைப் பயன்படுத்த முனைந்தார்கள். ஆனாலும்,நிராயுதபாணியாக நின்ற அவர்களை, உமையாக்கள் கொடூரமாகக் கொன்றனர். தமது ஆட்சிக்கு எதிரான, அல்லது தமது ஆட்சியை விரும்பாத சக்திகளைக்களையும் உமையாக்களின் திட்டத்திற்கு இமாம் ஹுஸைனும் பலியாகிப் போனார்கள்.
இமாம் ஹுஸைன் (ரளி) அவர்களின் சிறப்புகள்.
சுவனத்து இளைஞர்களின் தலைவர்.
மணம்தரும் நறு மலர்.
ஹுஸைன் என்னிலிருந்தும் நான் ஹுஸைன் யிலிருந்தும் இருக்கின்றோம்.
ஹுசைனை யார் நேசிப்பாரோ அவரை அல்லாஹ் நேசிப்பான்.
யார் என்னையும், இந்த இருவரையும், இவர்களின் தந்தை, மற்றும் தாயையும் யார் நேசிப்பரோ அவரும் நானும் சுவனத்தில் ஒரே இடத்தில் இருப்போம்.
யா அல்லாஹ் இவர்களை நான் நேசிக்கின்றேன், நீயும் நேசிப்பாயாக, யார் இவர்களை நேசிக்கின்றாரோ அவரை நானும் நேசிக்கின்றேன், நீயும் நேசிப்பாயாக.
எனக்கு பின்னால் இரண்டை விட்டு செல்கின்றான். அதை பின்பற்றி நடக்கும் காலம் எல்லாம் வழி தவற மாட்டீர்கள். 1. இறை வேதம் 2. எனது குடும்பத்தவர்கள். என்னிடம் ஹவுளுள் கவுசரில் என்னிடம் சேர்க்கும் வரை இவர்கள் உங்களை விட்டு இவர்கள் பிரிய மாட்டார்கள். இப்படி கூறிக்கொண்டே செல்லலாம். நேரமும் காலமும் பத்தாது.
மரணம் பற்றிய முன்னறிவிப்பு தந்த நபியவர்கள்:-
அண்ணலாரை சந்திக்க ஒரு நாள் சென்றிருந்தேன் அண்ணலாரின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. நான் பதறிப்போய் என்னவானது அண்ணலாரை யாராவது தங்களுக்கு சினமூட்டி விட்டார்களா கண்களில் நீர் கசிகிறதே என வினவினேன்.அதற்கு அண்ணலார் அதெல்லாம் ஒன்றுமில்லை சற்று நேரத்திற்கு முன்பாக ஜிப்ரயீல் அலை அவர்கள் வருகை தந்தார் ஃபுராத் நதிக்கரையில் இமாம் ஹுசைன் (ரழி) அவர்கள் கொல்லப்படுவார் என்னும் தகவலை தெரிவித்தார்.அத்தோடு நில்லாமல் அந்நிலத்து மண்ணை வேண்டுமானால் நுகர்ந்து பார்க்கிறீர்களா என்று கேட்டார் சொன்னவர் ஒரு கைப்பிடி மண்ணை எனக்கு கொடுக்கவும் செய்தார் அதைக் கண்டவுடன் என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றார்கள்.
முத்தான முஹர்ரம் பத்தாம் நாள்:-
***************************************
[قول النبي صلي الله عليه وسلم : وصيام يوم عاشوراء أني احتسب علي الله ان يكفر السنة التي قبله (روي في الجامع الصغير
இஸ்லாமிய மார்க்கத்தின் தனித்துவமே ஒரு வணக்கத்தை செய்து முடித்ததும் அடுத்த வணக்கத்தை நினைவூட்டி எல்லா நேரங்களிலும் நிலைகளிலும் அல்லாஹ்வின் தொடர்பில் அடியார்களை நிலைத்திருக்கச் செய்வதாகும்.
ஒரு ஹஜ்ஜூடைய காலம் முடிந்த மறு கணமே இஸ்லாமிய வருடத்தின் துவக்க மாதமான கண்ணியத்திற்குரிய முஹர்ரம் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களும் நபிகள் நாயகம் ஸல் அவர்களால் சிறப்பித்து கூறப்பட்டதாக அமைந்திருக்கிறது. அதிலும் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் “ஆஷூரா தினம்” நோன்பு நோற்பது உள்ளிட்ட பல வணக்கங்களையும் , பல வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.
ஆஷூரா ஈமானிய நாட்களில் ஒரு சிறந்த நாள்.
அச்சத்தின் விளிம்பில் மூஸா நபியவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.
فَلَمَّا تَرَاءا الْجَمْعَانِ قَالَ أَصْحَـابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ) [الشعراء:61
அல்லாஹ்வின் உதவிக்கு சில தனிச்சிறப்புக்கள் உண்டு.
வெற்றிக்கான காரணிகளை நாம் கற்பனை கூட செய்ய முடியாது.
முழுமையான வெற்றி. அதன் பிறகு வேறு கவலை இருக்காது.
யூதர்கள் காப்பாற்றப் பட்டார்கள் என்பது மட்டுமல்ல. அவர்கள் கண் முன்னிலையிலேயே பிர் அவ்னும் அவனுடைய ஆட்களும் அழிக்கப் பட்டார்கள். அதற்குப் பிறகு யூதர்கள் பயப்படத் தேவையிருக்கவில்லை.
ஏராளமான தொல்லைகள், சதிச் செயல்கள், அவமரியாதைகளால் முஸ்லிம் உலகு நிராசையின் விளிம்பில் நிற்கிற சூழ்நிலையில் ஆஷூரா வருகிறது.
சமுதாயம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் சக்திக்கு முன்னாள் எந்தச் சக்தியும் வெற்றிபெற முடியாது.
அல்லாஹ் நினைத்தால் அது நடந்தே விடும், சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் சரி ‘
وَلَيَنصُرَنَّ اللَّهُ مَنْ يَنصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ) [الحج:40].
அல்லாஹ்வின் வாக்குறுதி கிடைத்தே தீரும் என்பதில் முஃமின்களுக்கு தடுமாற்றம் கூடாது. அக்கிரமச் சக்திகளின் கை ஓங்குவது கண்டு அவர்கள் சஞ்சல மடையவும் கூடாது.
إنها سُنَّةٌ من سنن الله التي لا تتبدل ولا تتغير،
மூஸா ( அலை) வரலாறு 21 ம் நூற்றாண்டிலும் திருப்பத்தை ஏற்படுத்தும்.
ஆஷூரா தரும் முக்கிய பாடம்.
அரசியல் என்பது நீதியை நிலை நாட்டுவதற்காக, மக்களுக்கு நன்மை செய்வதற்காக அவர்களுக்கு உதவுவதற்காக அமைய வேண்டும். அப்படி அமைந்தால் சின்ன இயக்கம் கூட பெரிய அரசியல் சக்தியாக வளரும்.
யூசுப் (அலை) எகிப்தில் அடிமையாக விற்கப்பட்டார்கள். ஆனால் அவரிடம் இந்த உணர்வு இருந்ததால் தான் அவரும் அவருடைய குடும்பத்தினரும் எகிப்தின் அரசர்களாக உயர்ந்து புகழ் பூக்க வாழ்ந்தார்கள்.
அரசியல் என்பது சுயநலத்திற்கானதாக ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்டதாக மக்களை நியாயமற்ற முறையில் அடக்கியாள்வதாக இருக்குமென்றால் அந்த அரசியல் எவ்வளவு வல்லாட்சியாக இருந்தாலும் சில நாட்களில் அது அழியும். பிர் அவ்னுடைய அரசியல் இப்படித்தான் முடிவுக்கு வந்தது.
அரசியலில் ஈடுபட நினைக்கிற யாரும் மறந்து விடக்கூடாத பாடம் இது.
மக்களுக்கு இன்னும் ஒரு செய்தி இருக்கிறது; அரசியல் ரீதியாக ஒடுக்கப்படுகிற மக்கள் , கொடூரமாக ஆக்கிரமிக்கப் படுபவர்கள், தொல்லைக்கு ஆளாகிறவர்கள் ஒன்று பட்டு ஓரணியில் திரண்டால் – இன்றைக்கு அல்லது நாளை அவர்களுக்கு விடுவு கிடைக்கும். புது வாழ்வு பிறக்கும். யூதர்களுக்கு கிடைத்தது போல.
அல்லாஹ் இந்த ஆஷூரா தினத்தன்று தனது நபிமார்களுக்கும், நல்லடியார்களுக்கும் பாதுகாத்து உதவியதைப் போல நமக்கும், நம் சமுக மக்களுக்கும் எல்லா விதமான நன்மைகளையும், உதவிகளையும் செய்வானாக ஆமீன்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆஷூரா – عَاشُورَاءَ தினத்தைப் பற்றி இன்றைய ஜூமுஆ பேருரையில் நாம் தெரிந்து கொண்டோம்.
அல்லாஹூ சுப்ஹானஹூதஆலா இந்த ஆஷூரா – عَاشُورَاءَ தினத்தை உங்களுக்கும் எனக்கும் முழு உம்மத்திற்கும் வெற்றிகள் பல நிறைந்த நாளாக அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக! ஆமீன்!
ஜுமுஆ முபாரக் தகவல் மேடை
ஆஷூரா நாளின் சிறப்புகள், அன்றைய அமல்கள்
✨. ஆஷூரா இரவில் ஜம் ஜம் நீர்
ذكر ان الله عز وجل يخرق ليلة عاشوراء زمزم الى سائر المياه فمن اغتسل يومئذ أمن من المرض فى جميع السنة
(تفسير روح البيان ، ١١٢/٤)
ஆஷூரா தினத்தன்று இரவில், அல்லாஹு தஆலா உலகிலுள்ள எல்லா நீரிலும் ஜம்ஜம் நீரை ஓடச் செய்கிறான், அதனால் அன்று குளித்தால் வாழ்நாள் முழுவதும் எந்த நோயும் வராது. (நூல் : ரூஹுல் பயான், பாகம் : 4, பக்கம் : 112)
✨. குடும்பத்திற்கு தாராளமாக செலவு செய்வது
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وآله وَسَلَّمَ: «مَنْ وَسَّعَ عَلَى أَهْلِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَيْهِ سَائِرَ سَنَتِهِ البيهقي في الشعب (٣٧٩٣)
ஆஷூரா தினத்தன்று தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் தாராளமாக செலவு செய்தால் அல்லாஹ் அவருக்கு அவ்வருடம் முழுவதும் தாராளமாக இரணம் அளிப்பான். (அறிவிப்பாளர் : அபூ ஸஈத் அல்குத்ரிய்யி (ரளி), நூல் : ஷுஃபுல் ஈமான் லில் பைஹகீ, ஹதீஸ் எண் : 3793)
✨. புத்தாடை, சுர்மா
يروي أن موسى عليه السلام كان يلبس فيه الكتان ويكتحل فيه بالإثمد (لطائف المعارف لإبن رجب ، صــ : ١١١)
ஆஷூரா தினத்தன்று மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கைத்தறி ஆடை அணிந்து, “இஸ்முத்” என்ற சுர்மா இடுவார்கள். (நூல் : லதாயிஃபுல் மஆரிஃப் லி இப்னி ரஜப் , பக்கம் : 111)
✨. ஆஷூரா அன்று செய்ய வேண்டிய அமல்
فعل عشر خصال يوم عاشوراء وقد عدها بعضهم اثنتي عشرة خصلة، وهي: الصلاة، والصوم، وصلة الرحم، والصدقة والاغتسال، والاكتحال، وزيارة عالم، وعيادة مريض، ومسح رأس اليتيم، والتوسعة على العيال، وتقليم الأظفار، وقراءة سورة الإخلاص – ألف مرة (إعانة الطالبين ، ٢٦٧/٢)
1. தொழுவது (நஃபிலான வணக்கங்கள் புரிவது) 2. நோன்பு நோற்பது 3. உறவுகளுடன் சேர்ந்திருப்பது 4. சதகா – தர்மம் செய்வது 5. குளிப்பது 6. சுர்மா இடுவது 7. உலமாக்களை சந்திப்பது 8. நோயாளியை நலம் விசாரிப்பது 9. அனாதையின் தலையை அன்புடன் தடவுவது 10. குடும்பத்தினருக்கு தாராளமாக செலவு செய்வது 11. நகம் வெட்டுவது 12. 1000 முறை “ஸூரத்துல் இக்லாஸ் – குல்ஹுவல்லாஹு அஹத்” ஸூராவை ஓதுவது (நூல் : இஆனத்துத் தாலிபீன், பாகம் : 2, பக்கம் : 267)
✍ இன்னும் சொல்ல வேண்டியது நிறைவாய் உள்ளது நேரத்தின் நலனை கருதி முடித்துக் கொள்கிறேன் வ ஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
****** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين *******
Comments
Post a Comment