மிஃராஜின் மேண்மை
بسم الله الحمن الرحيم
سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ (17:1)
عن أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلَاتُهُ فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ وصححه الألباني في " صحيح سنن الترمذي "
முன்னுரை
**************
இறைவனைக் கண்குளிரக் காணுவது பேரின்பமாகும்.
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوحَىٰ إِلَيَّ أَنَّمَا إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ ۖ فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا (110)
. (நபியே!) நீர் சொல்வீராக "நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக."
அந்த பேரின்பத்தை பெறுவதற்கு மனிதப் புனிதர்களாகிய நபிமார்கள் கடுமையாக முயற்சித்தார்கள்.
قال الحسن بسري : «إذا تجلى لأهل الجنة نسوا كل نعيم الجنة
சுவனவாசிகளுக்கு அல்லாஹ்வின் தரிசனம் கிடைத்தால் அவர்கள் சுவனத்தின் அனைத்து இன்பங்களையும் மறந்து விடுவார்கள் என ஹஸன் பஸரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
மூஸா நபி ( அலை) அவர்கள் இறைவனிடம் அந்த பேரின்பத்தை நேரடியாகவே கேட்டார்கள்.
அச்சம்பவம் பற்றி திருக்குர்ஆன் விளக்குகிறது
وَلَمَّا جَآءَ مُوْسٰى لِمِيْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ قَالَ رَبِّ اَرِنِىْۤ اَنْظُرْ اِلَيْكَ ؕ قَالَ لَنْ تَرٰٮنِىْ وَلٰـكِنِ انْظُرْ اِلَى الْجَـبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰٮنِىْ ۚ فَلَمَّا تَجَلّٰى رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰى صَعِقًا ۚ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَيْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِيْنَ
وَلَمَّا جَآءَ مُوْسٰى لِمِيْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ
நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்;
قَالَ رَبِّ اَرِنِىْۤ اَنْظُرْ اِلَيْكَ ؕ
அப்போது மூஸா: “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார்.
قَالَ لَنْ تَرٰٮنِىْ وَلٰـكِنِ انْظُرْ اِلَى الْجَـبَلِ
அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும்.
( قال ) الله تعالى ( لن تراني ) وليس لبشر أن يطيق النظر إلي في الدنيا من نظر إلي في الدنيا مات ،
فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰٮنِىْ ۚ
அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான்.
ۚ فَلَمَّا تَجَلّٰى رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا
ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்;
وَّخَرَّ مُوْسٰى صَعِقًا ۚ
அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார்.
قوله - عز وجل - : ( وخر موسى صعقا ) قال ابن عباس والحسن : مغشيا عليه . وقال قتادة : ميتا
فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَيْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِيْنَ
அவர் தெளிவடைந்ததும்,
“(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 7:143)
இப்ராஹீம் நபி
இப்ராஹீம் நபியவர்கள் மூஸா நபியவர்களின் நிலைக்கு சற்று வேறுபட்டு ஒளிவு மறைவாக அந்த பேரின்பத்தை இறைவனிடம் வேண்டி நின்றார்கள்.
அச்சம்பவம் பற்றி திருக்குர்ஆன் விளக்குகிறது.
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى ؕ قَالَ اَوَلَمْ تُؤْمِنْؕ قَالَ بَلٰى وَلٰـكِنْ لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْؕ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَاْتِيْنَكَ سَعْيًا ؕ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى
இன்னும், இப்ராஹீம்: “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரியபோது,
قَالَ اَوَلَمْ تُؤْمِنْؕ
அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்;
قَالَ بَلٰى وَلٰـكِنْ لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْؕ
“மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார்
قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا
“(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்;
ثُمَّ ادْعُهُنَّ يَاْتِيْنَكَ سَعْيًا ؕ
அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்;
ؕ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்) கூறினான்.
(அல்குர்ஆன் : 2:260)
உண்மையில் இறைவன் உயிர்பித்துக் காட்டும் அதிசயத்தை இப்ராஹீம் ( அலை) காண விரும்பவில்லை. அந்த சாக்கில் தன் முகம் காணவே விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொண்ட இறைவன் அவர்களுக்கு தன் முகம் காட்டாது போக்கு காட்டுகிறான். நான்கு பறவைகளைப்
பிடித்து அறுத்து அந்த அதிசயத்தை நீரே செய்து கொள்வீராக! என்று ஆணையிட்டு ஒதுங்கிக் கொள்கிறான்.
அந்த இறைவனைக் கானும் பேரின்பத்தைப் பெறுவதில்
நபிகள் நாயகம்( ஸல்) அவர்கள் மட்டுமே வெற்றி கண்டார்கள்.
.
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நபிமார்களின் நாயகர் என்பதையும்,
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின்
வாழ்விலும்,
இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் மிஃராஜ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.
அடியானுக்கும், அல்லாஹ்வுக்குமிடையிலான நெருக்கத்தின் எல்லையையும் அன்நெருக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் மிஃராஜ் விளக்குகிறது.
ஆன்மீகப் பயணத்தின்
யதார்த்தமான விளக்கமாகவும்,
ஆன்மாவின் ஆற்றலின் வெளிப்பாடாகவும்
மிஃராஜ் நிகழ்வு அமைகிறது.
மிஃராஜ் பயணம் நபி( ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு ரஜப் மாதம் பிறை 27 ல் நடந்ததாக பிரபல்யமான கருத்தாக கூறப்படுகிறது.( ஆதாரம்: محمد الرسول اللله)
மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸ் வரை சென்ற பயணத்திற்கு இஸ்ரா என்றும்
பைத்துல் முகத்தஸிலிருந்து ஏழு வானங்களையும் கடந்து சென்றதற்கு மிஃராஜ் என்றும் கூறப்படும்.
............................................................
மிஃராஜ் நிகழ்வின் சுருக்கம் ;-
நபி [ஸல்] அவர்கள் அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களின் மகளான உம்முஹானி [ரலி] அவர்களின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது ..
அவர்கள் எழுப்பப்பட்டு ஜம்ஜம் கிணற்றுக்கு அருகில் அழைத்து வரப்படுகிறார்கள்.
அங்கே அவர்களது நெஞ்சு பிழக்கப்பட்டு அதிலிருந்து அவர்களது இதயம் எடுக்கப்படுகிறது.அது ஜம்ஜம் நீரால் கழுகப்பட்டு ஞானத்தால் நிறப்பப்படுகிறது.
பின்பு அங்கிருந்து ஃபலஸ்தீனிலுள்ள பைத்துல் முகத்தஸுக்கு வருகிறார்கள்.
அங்கே கூடியிருக்கிற அனைத்து நபிமார்களுக்கும் முன்னின்று தொழுகை நடத்துகிறார்கள்.
தொழுகை முடிந்த பிறகு ஒரு பாத்திரத்தில் மதுவும்,மறு பாத்திரத்தில் பாலும் கொண்டு வரப்படுகிறது.இவற்றில் எது வேண்டும் என்று கேட்ட போது பாலைத் தேர்ந்தெடுத்தார்கள்.
பின்பு அங்கிருந்து ஏழு வானங்களைக் கடந்து செல்கிறார்கள்.
அங்கே எட்டு நபிமார்களை காணுகிறார்கள்.
அதன் பிறகு சித்ரதுல் முன்தஹாவைக்
கடந்து,
பைத்துல் மஃமூரைக் கடந்தார்கள். சுவனத்தையும்,நரகத்தையும் கண்டார்கள்.
இறுதியாக இறைவனை சந்தித்து தொழுகையை பரிசாகப் பெற்று வந்தார்கள்.
இந்நிகழ்வு அண்ணல் நபி ஸல் வாழ்வில் நடந்த பேரற்புதம்.
உலகில் வேறு எவருக்கும் வழங்கப்படாத உயர்நத அந்தஸ்தை பெற்றார்கள்.
ஒளியின் வேகம்
ஒரு வினாடிக்கு 86282 மைல் ஆகும்.
இந்த வேகமுள்ள ஒளி நமக்கு அருகில் இருக்கும் நட்சத்திரத்திலிருந்து பூமிக்கு வர சுமார் நாளரை வருடமாகும் என்று அறிவியல் கூறுகிறது.
ஆனால் நபி [ஸல்] அவர்கள்
அந்த நட்சத்திரம் மட்டுமல்ல எல்லா நட்சத்திரங்களையும் கடந்து ஏழு வானங்களையும் கடந்து
யாரும் கடக்க முடியாத சித்ரத்துல் முன்தஹாவையும் கடந்து அல்லாஹ்வையும் தரிசித்து வந்தது....
ஒர் இரவின் சிறு பகுதி என்பது
ஆச்சர்யத்தின் உச்சம் என்பதை நாம் அறிய வேண்டும்
ஆனால் இஸ்லாம் அதை மாபெரும் அற்புதமாக முன்வைக்கிறது.
" سبحان الذي أسرى بعبده ليلاً من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير " [ الإسراء 1 ] .
“(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, நாம் சுற்றுப்புறச் சூழலைப் பாக்கியம் பொருந்தியதாக ஆக்கிய அந்த மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் அழைத்துச் சென்றவன் தூய்மையானவன். நமது அத்தாட்சிகளிலிருந்து அவருக்கு நாம் காண்பிக்கவே (இவ்வாறே செய்தோம்) நிச்சயமாக அவன் செவியுறுபவன் பார்ப்பவன்.” (17:1)
இங்கு இரு பயணங்கள் நடைபெற்றுள்ளது.ஒன்று இஸ்ரா.இதைப்பற்றியே மேல்கூறிய வசனம் பேசுகிறது.
இன்னொரு பயணம் மிஃராஜ். இதுகுறித்து சூரா நஜ்மின் துவக்கத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
وَالنَّجْمِ إِذَا هَوَىٰ
விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ
2.
உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.
3.وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
4.إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى
அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.
5.عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ
மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரயீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
6.ذُو مِرَّةٍ فَاسْتَوَى
(அவர்) மிக்க உறுதியானவர், பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.
7.وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَى
அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
8. ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.
9.فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ
(வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.
10.فَأَوْحَىٰ إِلَىٰ عَبْدِهِ مَا أَوْحَى
அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.
11.مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَىٰ
(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.
.................................................................
12. أَفَتُمَارُونَهُ عَلَىٰ مَا يَرَى
ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?
13.وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَىٰ
அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரயீல்) இறங்கக் கண்டார்.
14.عِندَ سِدْرَةِ الْمُنتَهَىٰ
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.
15.عِندَهَا جَنَّةُ الْمَأْوَىٰ
அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.
16.إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَىٰ
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,
17.مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَى
(அவருடைய) பார்வை விலகவுமில்லை, அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை.
18.لَقَدْ رَأَىٰ مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَىٰ (1
திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.
கனவா? அல்லது நனவா?
********************************
மிஃராஜை ஜீரணித்துக்கொள்ள முடியாத ஒருசிலர்கள் அது கனவுதான்.என்று கூறுகிறார்கள்.
மிஃராஜ் கனவல்ல என்று நிறுபிக்கும் ஆதாரங்கள் நூற்றுக்கணக்கில் உண்டு
1.கனவாக இருந்தால்
அது ஒருபெரும் அற்புதமாக இருக்காது.
காரணம் கனவில் இதுபோன்ற நிகழ்வை கானுவது நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்கு கூட சாத்தியம் தான்.
2. காபிர்களிடம் நபி ( ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்று வந்த செய்தியை சொன்னபோது அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை
கிண்டல் செய்தார்கள்
பல கேள்விகள் கேட்டார்கள் என்று ஹதீஸில் காண முடிகிறது.
2.அது கனவாக இருந்திருந்தால் அதை மக்கா காஃபிர்கள் இவ்வளவு கடுமையாக மறுத்தி ருக்கமாட்டார்கள்
.மற்றும் ஈமான் கொண்ட சிலர்கள் மீண்டும் முர்தத்தாகி இருக்கமாட்டா ர்கள்.
أنه لما رجع إلى مكة من ليلته أخبر بمسراه أم هانىء بنت أبي طالب أخت علي رضي الله عنه وأنه يريد أن يخرج إلى قومه ويخبرهم بذلك لأنه ما أحب أن يكتم قدرة الله وما هو دليل على علو مقامه فتعلقت بردائه أم هانىء وقالت: أنشدك الله يا ابن عم ألا تحدث بها قريشا فيكذبك من صدقك فضرب بيده على ردائه فانتزعه منها، قالت: وسطع نور عند فؤاده كاد يخطف بصري فخررت ساجدة فلما رفعت رأسي فإذا هو قد خرج، قال: فقلت لجاريتي نبعة وكانت حبشية: اتبعيه وانظري ماذا يقول، فلما رجعت أخبرتني أن رسول الله انتهى إلى نفر من قريش في الحطيم وفيهم مطعم بن عدي وأبو جهل بن هشام فأخبرهم بمسراه.
ولما قص رسول الله خبر الإسراء على جمع من قريش أعظموا ذلك الإسراء وصار بعضهم يصفق وبعضهم يضع يده على رأسه تعجبا - فلو كان الإسراء رؤيا منامية لما كانت مستغربة ولما أحدثت تلك الضجة وكذبه المسلمون اللهم إلا من كان منهم قوي العقيدة ثابت الإيمان - قال مطعم بن عدي: إن أمرك قبل اليوم كان أمرا يسيرا غير قولك اليوم، هو يشهد أنك كاذب، نحن نضرب أكباد الإبل إلى بيت المقدس مصعدا شهرا ومنحدرا شهرا، أتزعم أنك أتيته في ليلة واحدة؟ واللات والعزى لا أصدقك وما كان هذا الذي تقول قط، فقال مطعم: يا محمد صف لنا بيت المقدس، فقال أبو بكر رضي الله عنه: صف لي يا رسول الله فإني قد جئته، فجاءه جبريل بصورته ومثاله فجعل يقول باب منه في موضع كذا وباب منه في موضع كذا، وأبو بكر رضي الله عنه يقول: أشهد أنك رسول الله حتى أتى على أوصافه.
وهذه هي الأحاديث الواردة في «صحيح البخاري» الخاصة بالإسراء مشروحة في الهامش شرحا موجزا نقلا عن القسطلاني:
மிஃராஜ் பயணத்தை முடித்த நபி ஸல் அவர்கள் மக்கா திரும்பியபோது, முதலாவதாக அச்செய்தியை குறித்து அபூ தாலிப் அவர்களின் மகள் உம்முஹானீ ரலி அவர்களிடம் கூறினார்கள்.
وأنه يريد أن يخرج إلى قومه ويخبرهم بذلك لأنه ما أحب أن يكتم قدرة الله
நான் அல்லாஹ்வின் வல்லமையை மறைக்க விரும்பவில்லை,எனவே இதை மக்களிடம் சொல்லப்போகிறேன் என்றார்கள்.
وقالت
أنشدك الله يا ابن عم ألا تحدث بها قريشا فيكذبك من صدقك فضرب بيده على ردائه فانتزعه منها،
அப்போது உம்முஹானீ ரலி அவர்கள் -என் சச்சாவின் மகனாரே! நீங்கள் இதைப்பற்றி குரைஷிகளிடம் சொல்லத்தான் வேண்டுமா?
فيكذبك من صدقك
உங்களை உண்மைப்படுத்திவர்கள் கூட பொய்யாக்கிவிடுவார்களே! என்று அவர்களின் துண்டைபிடித்து தடுத்து நிறுத்தினார்கள்.
அதைப்பற்றி உம்மு ஹானீ ரலி அவர்கள்
قالت: وسطع نور عند فؤاده كاد يخطف بصري فخررت ساجدة
நான் தடுத்தபோது என் பக்கம் வேகமாக திரும்பிய பெருமானாரின் கல்பிலிருந்து ஒரு ஒளி என் பார்வையை மயக்கியது,
உடனே நான் ஸஜ்தாவில் விழுந்துவிட்டேன்.
மயக்கம் தெளிந்து நான் எழுந்தபோது நாயகம் அங்கு இல்லை.
உடனே என் வேலைக்கார பெண்ணிடம், நபி ஸல் அவர்களை பின் தொடர்ந்து செல்,அங்கு நடக்கும் செய்தியை என்னிடம் கொண்டுவா என்று கூறி அனுப்பினேன்.
குறைஷிகளின் ஒரு கூட்டம் ஹதீமில் அமர்ந்திருந்தனர்.அதில் அபூ ஜஹ்ல்,முத்யிம் போன்ற தலைவர்களும் இருந்தனர்.
அங்கு சென்ற நபி ஸல் அவர்கள் தன் மிஃராஜ் நிகழ்வை துணிச்சலுடன் கூறியது தான் தாமதம்.
அங்கிருந்தவர்கள் திகைத்துப்போய்
விட்டனர்.
சிலர்கள் தங்களின் தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டனர்.
உண்மையிம் மிஃராஜ் ஒரு கனவாக மட்டும் இருந்திருந்தால் இதை இவ்வளவு பெரிய விஷயமாக மக்கா காஃபிர்கள் எடுத்திருக்கமாட்டார்கள் என்பதை சிந்திக்க வேண்டும்.
ஈமான் பழுதுபட்டவர்களெல்லாம் இதில் தடம் புரண்டுபோய்விட்டனர்.
எதிரிகளின் தலைவர்களில் ஒருவரான முத்யிம் இப்னு அதிய் நபி ஸல் அவர்களிடம் வந்து இன்றைக்கு நீர் சொல்லியிருக்கும் இந்த விஷயம் நீர் பொய்யர் என்பதற்கு போதுமான சாட்சியாகும்.ஏனெனில் ஒரு ஒட்டகப்பயணியால் மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸை அடைய ஒரு மாத காலம் தேவைப்படும்.ஆனால் நீர் ஒரே இரவில் சென்றுவந்துவிட்டதாக கூறுகிறீர்.
பைத்துல் முகத்தஸை பற்றி எங்களுக்கு கூறுங்கள் என்றார்.
இதுவரை பைத்துல் முகத்தஸிற்குச் செல்லாத நபி ( ஸல்) அவர்களிடம் அப்பள்ளியைப் பற்றி குரைஷிகள் கேள்வி கேட்டார்கள்
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنِ ابْنِ شِهَابٍ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ((لَمَّا كَذَّبَنِي قُرَيْشٌ قُمْتُ فِي الْحِجْرِ، فَجَلاَ اللَّهُ لِي بَيْتَ الْمَقْدِسِ، فَطَفِقْتُ أُخْبِرُهُمْ عَنْ آيَاتِهِ وَأَنَا أَنْظُرُ إِلَيْهِ)). صحيح البخاري
[طرفه 4710، تحفة 3151]
3886. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் இரவின் சிறு பகுதியில் கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ் வரை சென்றதாகச் சொன்ன சமயம்) என்னை குறைஷிகள் நம்ப மறுத்தபோது நான் கஅபாவின் “ஹிஜ்ர்“ என்னும் (வளைந்த) பகுதியில் நின்றேன். அல்லாஹ் எனக்கு பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். அப்போது அதைப் பார்த்தபடியே நான் அவர்களுக்கு அதன் அடையாளங்களை விவரிக்கலானேன். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி
ஒருவர் புதிதாக ஒரு இடத்திற்கு கொஞ்ச நேரம் சென்ற சமயத்தில் அதன் அனைத்து அங்க அடயாளங்களையும் தெரிந்துகொள்ள முடியாது.
என்றாலும் குரைஷிகள் கேட்ட கேள்விக்கு பதி்ல் சொல்லும் தருணத்தில் இறைவன் பைத்துல் முகத்தஸயே நபியவர்களுக்கு நேரடியாக காண்பித்தான்
காபீர்களில் சிலர் அபூபக்கர் ரலியிடம் உங்கள் நண்பர் முஹம்மத் ( ஸல்) அவர்கள் ஒரே இரவில் பைத்துல் முகத்தஸ் சென்று வந்ததாக கூறுகிறார் அதுபற்றி தாங்கள் கருத்தென்னவென்று கேட்டபோது இதுவென்ன இதைவிட தூரமான இடத்திற்கு சென்று வந்தேனென்று அவர் கூறினாலும் அதை உண்மை படுத்துவேன் என்றார்கள்.இந்த நிகழ்வை முன்னிட்டே சித்தீக் ( உண்மையாளர்) என்ற பெயர் அவர்களுக்கு வந்தது.
3. நபி( ஸல்) அவர்கள் உடலுடன்தான் மிஃராஜ் சென்றார்கள் என்பதற்கான ஆதாரங்களில் இதுவும் ஒன்று.
அபூசுஃப்யான் இஸ்லாத்தை ஏற்கும் முன்பு ஹிர்கல் மன்னரிடம் நபியவர்களைப் பற்றி தவறாக எடு்த்துக்கூற முயன்ற போது நடந்த உறையாடல்
قال ابو سفيان قلت : أيها الملك ، ألا أخبرك خبرا تعرف به أنه قد كذب . قال : وما هو ؟ قال : قلت إنه يزعم لنا أنه خرج من أرضنا أرض الحرم في ليلة ، فجاء مسجدكم هذا مسجد إيلياء ، ورجع إلينا تلك الليلة قبل الصباح . قال : وبطريق إيلياء عند رأسقيصر ، فقال بطريق إيلياء : قد علمت تلك الليلة .
قال : فنظر إليه قيصر . وقال : وما علمك بهذا ؟ قال : إني كنت لا أنام ليلة حتى أغلق أبواب المسجد . فلما كانت تلك الليلة أغلقت الأبواب كلها غير باب واحد [ ص: 7 ] غلبني ، فاستعنت عليه بعمالي ومن يحضرني كلهم فغلبنا ، فلم نستطع أن نحركه كأنما نزاول به جبلا ، فدعوت إليه النجاجرة فنظروا إليه فقالوا : إن هذا الباب سقط عليه النجاف والبنيان ولا نستطيع أن نحركه ، حتى نصبح فننظر من أين أتى . قال : فرجعت وتركت البابين مفتوحين . فلما أصبحت غدوت عليهما فإذا المجر الذي في زاوية المسجد مثقوب . وإذا فيه أثر مربط الدابة . قال : فقلت لأصحابي : ما حبس هذا الباب الليلة إلا على نبي وقد صلى الليلة في مسجدنا ( ابن كثير)
ஹிர்கல் மன்னரிடம் அபூசுப்யான்
நபி( ஸல்) அவர்களை பொய்ப்படுத்துவதற்காக பின் வருமாறு கூறினார்.
அந்த முஹம்மத் ஒரே இரவில் எங்களுடைய ஊரில் இருந்து புரப்பட்டு உங்களுடைய இந்த மஸ்ஜிதுக்கு வந்து விட்டு அதே இரவில் மீண்டும் எங்களுடைய ஊருக்கு திரும்பியதாக பொய் சொல்கிறார்.அதை நம்புகிறீர்கலா? என்று கேட்க.
உடனே அருகில் இருந்த காவலாலி அந்த இரவைப் பற்றி எனக்கு ஒரு முக்கியமான விஷயம் தெரியும் என்று கூற உடனே ஹிர்கல் மன்னர் அந்த காவலாளியிடம் உனக்கு என்ன தெரியும் சொல். என்றார்.
அப்போது அந்த காவலாளி நான் எப்போதும் நம் மஸ்ஜிதுடைய பிரதான வாசலை மூடாமல் தூங்க மாட்டேன்.ஆனால் குறிப்பிட்ட அந்த இரவில் வழக்கம் போல மற்ற எல்லாக் கதவுகளையும் மூடி விட்டு பிரதான கதவை மூட முயன்றேன். என்னால் முடியவில்லை.
என்னுடைய உதவியாளர்களை அழைத்தேன்.அவர்கள் எல்லோரும் சேர்ந்து முயற்சித்தும் அவ்கலளால் நகர்த்தவே முடியவில்லை.பெரிய மலை போன்று கனமாக இருந்தது. பின்பு நான்,ஆசாரிகளை அழைத்து அவர்களும் முயற்சித்தும் பலனில்லை.
பின்பு அவர்கள் என்னிடம் இந்த மரத்தின் ஒரு பகுதி வீங்கி துருத்திக் கொண்டிருக்கிறது.காலை வரை போராடினாலும் எங்களால் முடியாது என்று கூறிச் சென்று விட்டார்கள்.
நானும் அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டேன் காலையில் வந்து பார்த்த போதுதான் மஸ்ஜிதின் ஓரத்தில் வாகனத்தைக் கட்டி வைக்கும் பெரிய கல்லும் அதில் வாகனத்தை கட்டி வைத்த அடையாளத்தையும் பார்த்தேன்.
அப்போது நான் நண்பர்களிடம் நிச்சயமாக நேற்று இரவு ஒரு நபியின் வருகைக்காகத்தான் இந்த கதவை மூட முடியாத நிலை உருவாகியுள்ளது. அந்த நபி நம்முடைய இந்த மஸ்ஜிதில் வந்து தொழுது விட்டுச் சென்றுள்ளார் என்று அப்போதே நான் கூறினேன் என்றார்.
4.
முத்இம் இப்னு அதி என்பவன்
நபி( ஸல்) அவர்களை கேலி செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தில் இவ்வாறு கேள்வி கேட்டான்.
தாங்கள் பைத்துல் முகத்தஸ் செல்லும் வழியில் என்னுடைய காணாமல் போன ஒட்டகங்களை கண்டீரா? என்றான்.
அதற்கு நபியவர்கள் ஆம் இன்ன இடத்தில் அந்த ஒட்டகைகள் மேய்ந்து கொண்டிருக்கின்றது என்றார்கள். அவ்வாரே அந்த ஒட்டகைகளை தேடிச்சென்றவன் நபியவர்கள் சொன்ன அதே இடத்தில் ஒட்டகைகளை பெற்றுக் கொண்டான்.
5.இந்த பயணம் கனவாக இருந்தால் இதில் நபியின் நெஞ்சு பிளக்கப்பட்ட அடையாளம் எப்படி இருக்கும்?
عَنْ أَنَسٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَلْعَبُ مَعَ الصِّبْيَانِ
நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
فَأَتَاهُ آتٍ فَأَخَذَهُ فَشَقَّ صَدْرَهُ فَاسْتَخْرَجَ مِنْهُ عَلَقَةً فَرَمَى بِهَا
அப்போது ஒருவர் வந்தார்.நாயகத்தை பிடித்தார்.அவர்களின் நெஞ்சைப்பிழந்தார்.
அதிலிருந்து ஒரு சதைத்துண்டை எடுத்து வெளியே வீசிவிட்டு..
وَقَالَ هَذِهِ نَصِيبُ الشَّيْطَانِ مِنْكَ ثُمَّ غَسَلَهُ فِي طَشْتٍ مِنْ ذَهَبٍ مِنْ مَاءِ زَمْزَمَ ثُمَّ لَأَمَهُ
,இதுதான் உங்களை ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாகும் என்று கூறினார்.
பின்னர் தங்கக்கோப்பையில் ஸம்ஸம் நீரை கொண்டுவந்து நாயகம் ஸல் லல்லாஹு அலைஹி அவர்களின் இருதயத்தை கழுகி அதை மீண்டும் உள்ளே வைத்து சேர்த்துவி ட்டார்கள்.
قَالَ أَنَسٌ فَلَقَدْ كُنَّا نَرَى أَثَرَ الْمَخِيطِ فِي صَدْرِهِ
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் நெஞ்சில் தைக்கப்பட்ட அடையாளத்தை பார்த்தோம்
என்று இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பளர் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.
அஹ்மத்:11771
மிஃராஜ் பயணத்திற்கான காரணங்கள்
**********************************************
قوله تعالي: لنريه من اياتنا ( بني اسرائيل 1)
உலகில் புதிதாக பதவி ஏற்ற பிரதமர் நாட்டின் பல பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலமைகளை தெறிந்து கொள்வது வளக்கம்.
அதேபோல நபி( ஸல்) அவர்களை ஈருலகிற்கும் நபியாக ஆக்கியிருக்கும் இறைவன் வாணுலகிலுல்ல தன் குத்ரத்துக்களையும் தன் ஹபீபுக்கு காட்ட விரும்புகின்றான் எனவே தான் لنريه من اياتنا என்று கூறுகின்றான்.
மறுமை நாள் உண்டு சொர்கம் உண்டு நரகமுண்டு என்றெல்லாம் கூறும்பொழுது அதைப் பார்த்தவர்கள் யாரவது உண்டா ?
ஏன் நபிமார்களாவது பார்த்திருக்கிறார்களா?
குறைந்த பட்சம் நபிமார்களின் தலைவராவது பார்த்திருக்கின்றாரா?
என்ற கேள்விக்கு விடையாகவும் இப்பயணம் அமைந்துள்ளது.
காரணம் 2 ;- தனது எல்லா அத்தாட்சிகளையும் நபியவர்களுக்கு காண்பித்து உலகத்தில் நிறைவானவர்கள் அவர்கள் தான் என்பதை உலகிற்கு சொல்வதற்காக அல்லாஹ் இந்நிகழ்வை ஏற்பாடு செய்தான்.
இதைக் குறித்துத் தான் அல்லாஹுத்தஆலா கூறுகிறான் ;-
لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا
لَقَدْ رَأَى مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَى
وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ
கவலை நீக்கம்
*****************
நபி( ஸல்) அவர்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்த அவர்களின் மனைவி கதீஜா ( ரலி) அவர்களும் நபயவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களும் மரணமாகி விட்ட தருணத்தில் நபி( ஸல்) அவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள் எதிரிகளின் மூலம் தொல்லைகளும் அதிகமானது இந்த சமயத்தில் தன் ஹபீப் ( ஸல்) அவர்களை வானுலகிற்கு அழைத்து தன்னை நேரடியாக காணக்கூடிய பாக்கியத்தை தந்து அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று இறைவன் நாடியும் இப்பயணத்தை அமைத்துத் தந்தான்
புனிதப் பயணம் பற்றி பூமான்நபியின் விளக்கம்
*******************************************************
صحيح البخاريُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ مَالِكِ بْنِ صَعْصَعَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَهُمْ عَنْ لَيْلَةَ أُسْرِيَ بِهِ: ((بَيْنَمَا أَنَا فِي الْحَطِيمِ- وَرُبَّمَا قَالَ فِي الْحِجْرِ- مُضْطَجِعًا، إِذْ أَتَانِي آتٍ فَقَدَّ- قَالَ وَسَمِعْتُهُ يَقُولُ فَشَقَّ- مَا بَيْنَ هَذِهِ إِلَى هَذِهِ- فَقُلْتُ لِلْجَارُودِ وَهْوَ إِلَى جَنْبِي مَا يَعْنِي بِهِ قَالَ مِنْ ثُغْرَةِ نَحْرِهِ إِلَى شِعْرَتِهِ، وَسَمِعْتُهُ يَقُولُ مِنْ قَصِّهِ إِلَى شِعْرَتِهِ- فَاسْتَخْرَجَ قَلْبِي، ثُمَّ أُتِيتُ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مَمْلُوءَةٍ إِيمَانًا، فَغُسِلَ قَلْبِي ثُمَّ حُشِيَ، ُ
3887. அனஸ் பின் மாலிக் ரலி அவர்கள் கூறினார்கள். நான் (இறையில்லாம் கஅபா அருகில்) ஹத்தீமில்... அல்லது ஹிஜ்ரில்... படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் ஒருவர் (வானவர் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார். அறிவிப்பாளர்களில் ஒருவரான அனஸ்(ரலி), “இங்கிருந்து இது வரையில் அவர் பிளந்தார்” என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறினார்கள். அறிவிப்பாளர் கத்தாதா(ரஹ்) கூறினார்: நான் என்னருகிலிருந்து (அனஸ்(ரலி) அவர்களின் நண்பர்) ஜாரூத்(ரஹ்) அவர்களிடம், “அனஸ்(ரலி), “இங்கிருந்து, இது வரையில்... என்று எதைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்?“ என்று கேட்டேன். அதற்கு ஜாரூத்(ரஹ்), “நபி(ஸல்) அவர்களின் நெஞ்சின் காறை யெலும்பிலிருந்து அடிவயிறு வரை... அல்லது நெஞ்சின் ஆரம்பத்திலிருந்து அடிவயிறு வரை... என்ற கருத்தில் அனஸ்(ரலி) கூறினார்” என்று பதிலளித்தார்கள். பிறகு அ(ந்த வான)வர் (ஜீப்ரீல்) என்னுடைய இதயத்தை வெளியிலெடுத்தார். பிறகு, இறை நம்பிக்கையால் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது, என்னுடைய இதயம் கழுவப்பட்டு, (அதில்) அந்த இறை நம்பிக்கை நிரப்பட்டது. பிறகு பழையபடி மீண்டும் (என்னுடைய இதயம், மூடி) வைக்கப்பட்டது.
Comments
Post a Comment