முஃமின்களுக்கு இறைவனின் வாக்குறுதி...

وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا

وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ 

فقال يا أيها الناس ألا إن ربكم واحد وإن أباكم واحد

 ألا لا فضل لعربي على أعجمي ولا لعجمي على عربي

 ولا لأحمر على أسود ولا أسود على أحمر

 إلا بالتقوى அஹ்மத்...

முஸ்லிம்களாகிய நாம் ஷரீஅத்தை  நமது வாழ்வியல் திட்டமாக வைத்திருக்கிறோம்.

உலகில் எங்கு வாழ்ந்தாலும் சரி.

சிறு நீர் கழிப்பதிலிருந்து சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்வது வரை

தேவையான ஒவ்வொரு விசயத்திலும் ஷரீ அத் நமக்கு வழிகாட்டுகிறது.

.இதைச் செய்யலாம் இதைச் செய்யக் கூடாது என்று 

ஷரீயத்தின்     ஓவ்வெ ாறு சட்டமும் நமக்கு

அறிவுரை கூறிகின்றது...

இதனால் மிகத் தெளிவான

ஒரு வாழ்க்கை முறையை

தலைறை தலைமுறையாக நாம் அனுபவித்து வருகிறோம்.

எனவே தான் எந்த  ஒரு முஸ்லிமுக்கும்

சலனப்படுவதற்கான சூழ்நிலைகளே எழுவதில்லை.  

·         பெண்கள் மருதாணி போட்டுக்கொள்ளலாம்.

· ஆண்கள் பெண்களைப்போல

ஆடையணியக் கூடாது.

அணிகலன்கள்கூடாது.

·         வெள்ளியில் ஆண்கள்மோதிரம்

அணிந்து கொள்ளலாமே தவிர பிராஸ்லட் செயின் அணிந்து

கொள்ளக்கூடாது.

·         டாட்டூ கூடாது.

·         ஒயின் கலக்கப்பட்ட கேக் கூடாது.

·         ஓட்டுக்கு காசுவாங்க கூடாது.

·         காசு கொடுத்து

ஓட்டு வாங்கக்கூடாது.

·         இலஞ்சம் கூடாது.

·         அறுக்கப் பட்டதை தான் சாப்பிட வேண்டும்.
தானாக செத்த்தை சாப்பிடக் கூடாது.

·         போதை தரும் எதுவும் அனுமதிக்கப்பட்டதில்லை

இந்தப் பட்டியலின் தொடரில் பல லட்சக்கணகான சட்டங்கள் அடங்கியுள்ளன.

உலகிலுள்ள எந்த சட்ட அமைப்பிலும் இத்தகைய நுனுக்கமான வழிகாட்டுதல்கள் கிடையாது.

உலகின் அனைத்து மூலைகளிலும் ...
அங்குள்ள சூழ்நிலை  climate..
 எவ்வளவு எதிரானதாக இருந்தாலும்
ஷரீ ஆத்  பின்பற்றப்படுகிறது

எல்லா கால கட்டத்திற்கும்,
அனைத்து சூழ்நிலைக்கும்,
அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்று....
அனைவருக்கும் பொருந்தக்கூடிய, பின்பற்ற தகுந்த

நீதமான ஒரு மார்க்கத்தையும்,
அதற்கு தகுந்த சட்டத்தையும் தான் அல்லாஹு தஆலா நமக்கு வழங்கி இருக்கின்றான்.

அல்லாஹ் தனது அருள் மறையில் :

وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏

எவர்கள், அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக்கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள்தான்! (5:45)

இதன் அடிப்படையில் தான்
ஒவ்வொரு முஸ்லிமும்
குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
இஸ்லாமிய சட்டக்கலையில் தேர்ச்சி பெற்ற இமாம்களால் தொகுக்கப்பட்ட இஸ்லாமிய பிக்ஹ் சட்டத்தை தான் ...
உலகில் வாழும் பல
கே ா டிகக்கணக்கான மக்களும் பின்பற்றி வருகின்றனர்.

.......

ஆனால் இன்றைய நம் நிலை........

.......

இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள்

எந்த வகையிலாவது இஸ்லாமை சிறுமைப் படுத்திவிட வேண்டும்...

இஸ்லாமியர்களின் பலம் குன்றச் செய்துவிடவேண்டும்...

என  பல
  முயற்சிகள் செய்து கொண்டே இருக்கின்றனர். 

يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

 فولي وجهك شطر المسجد الحرام....

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில்

கிப்லா மாற்றப் பட்டதை யூதர்கள் பெரிய பிரச்சனையாக்கினர்.

கிப்லா மாற்றம்...

அல்லாஹ் ஒரு குறிப்பிட்ட திசையில் இல்லை.
எந்த்த திசையிலும்  அல்லாஹ் இருக்கிறான்.

 

அதனால் பைத்துல் முகத்தஸை நோக்கினாலும்
கஃபாவை நோக்கினாலும் எந்த
தவறேதும் இல்லை.

அல்லாஹ் வின் உத்தரவிற்கு கட்டுப்படுகிறோமா என்பதே முக்கியம்

என அல்லாஹ் தெளிவு படுத்தினான்.

பிரச்சனையை உண்டு பண்ணியவர்களை அல்லாஹ் முட்டாள்கள் என விமர்சித்தான்.

 

திருக்குர் ஆனின் உள்ள
கடுமையான விமர்சன்ங்களில்
மிகச் சிலவற்றில்  இதுவும் ஒன்று 

سَيَقُولُ السُّفَهَاءُ مِنَ النَّاسِ مَا وَلَّاهُمْ عَن قِبْلَتِهِمُ الَّتِي كَانُوا عَلَيْهَا ۚ قُل لِّلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ۚ يَهْدِي مَن يَشَاءُ إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ (142

سَيَقُولُ السُّفَهَاءُ مِنَ النَّاسِ

மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்; "

مَا وَلَّاهُمْ عَن قِبْلَتِهِمُ الَّتِي كَانُوا عَلَيْهَا ۚ 

(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது?" என்று.

 

قُل لِّلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ

(நபியே!) நீர் கூறும்; "கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை,

يَهْدِي مَن يَشَاءُ إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ (142

தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்" என்று.

.......................................................................

இடைக்காலத்தில் நபி (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்ததையும்
யுத்தங்கள் செய்த்தையும் கிருத்துவர்கள் பிரச்சனையாக்கினர்.

ஜிஸியா வரி விதிப்பை
இந்துக்கள் பெரிய பிரச்சனையாக்கினர்.

 எத்தனை பிரட்சனைகள் எழுந்த பே ாதும்....
எதார்த்தத்தில்
இஸ்லாமிய நடைமுறையில்
எந்தக் குறையும் இல்லை.

..................................................

....................................................................

இது பே ான்று தான்..இன்றும்

ஷரீஆவைப் பற்றி புரிந்து கொள்ளாமல் பலரும் அது பற்றி பேச முற்படுகின்றனர்

ஷரீஆ என்பது இஸ்லாமிய  மார்கத்தின் நம்பிக்கையோடு பிணைந்த ஒரு சட்டத் தொகுப்பு

الشريعة :  هي الطريقة الموضوعة بوضع الهي

அது தெய்வீகமானது.

 இஸ்லாமின் கொள்கை கோட்பாடுகளைப் போலவே
ஷரீஆ எனும் சட்ட அமைப்பும் இறைவனால் அமைக்கப்பட்டதாகும்.

இஸ்லாமியர்கள் மிக எச்சரிக்கையாக இருக்கும் காலம் இது...

ஷரீஆ வை கை விடு என்று கூறுவது

ஏற்றிருக்கும் மார்கத்தை
 கைவிடு என்று சொல்வதற்கு சமமானது.

.....................................................................

நம்முடைய நாட்டில் தற்போதை மத்திய அரசாங்கம்
இந்த நோக்கில் முஸ்லிம்களை இழுத்துச் செல்லும் முயற்சியில்..

முதல் கட்டமாக ..

  பாபர் மஸ்ஜி் இடிப்பு...

 குர்பானியை முடக்குவதற்காக..
பசுவதை தடை சட்டம்..

பாங்கெ ாலியை முடக்க  பள்ளிவாசல்களில்   குளாய்களை அகற்றியது..

பெ ாது  சிவில் சட்டம்.

முத்தலாக் தடை சட்டம்..

இன்று  ஹஜ் மானியம் ரத்து...

அவசர கதியில்  சட்டம்
கொண்டுவரப்பட்டு
மற்றவர்கள் கூறும் எந்த  கருத்தையும்,
திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ளாமல்

முத்தலாக் தடை சட்டம்..

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு தவறாக
பயன்படுத்திக் கொண்டு விட்டது.

உச்ச நீதிமன்றம் முத்தலாக்கை ( invalid) இன்வாலிட் செல்லாது என்று கூறியதே தவிர ( illegal)

. இல்லீகல் சட்ட்த்திற்கு புறம்பானது என்று கூற வில்லை

ஆனால் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் முத்தலாக்கை ( invalid )
இன்வாலிட செல்லாது
என்பதோடு
( Illegal) 
இல்லீகல் சட்ட்த்திற்கு புறம்பானது என்றும் கூறுகிறது.  

முத்தலாக்...

முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைச் சட்டம் ஒன்றை இயற்றியிருக்கிறது.

இதன் மூலம்
இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கும் மட்டுமல்ல
சமூக நீதியாளர்களுக்கும்
சட்ட அறிஞர்களுக்குமே கூட
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது எதை காட்டுகின்றது என்றால்...
மத்தியில் ஆளும் அரசுக்கு
அதிகப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் கிடைத்துள்ளதன் விசத்தன்மை

வெளிப்படத் தொடங்கியுள்ளது 

அதன்
மிக முக்கிய அடையாளங்கள் தான் இவைகள்....

ஒரு உதாரணம்...

நாயுக்கு வெறி பிடிக்கிற போது 
அதன் வாயும் நாக்கும் கோரமாக அலை பாயும் என்பார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.

அதே போன்று
  அரசுக்கு
அதிகார வெறி பிடித்திருப்பதன் அடையாளத்தை,

அதிகார போதை தலைக்கேறி எதையும் பொருட்படுத்தாமல் நடப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது....

..................................................................

இதற்கும் குர்ஆனில் அல்லாஹ்..
உதாரணம்...

எகிப்திய மன்ன்ன் பிர் அவ்னுக்கு அதிகார போதை தலைக் கேறி
இருந்த சந்தர்ப்பத்தில் தான்

 

எந்த வித நியாயமும் இல்லாமல்
யூத சமூகத்தில் பிறக்கிற ஆண் குழந்தைகள் அனைவரையும் கொல்லுவதற்கு உத்தரவிட்டான்.

திருக்குர் ஆன் அந்த
அக்கிரம
ஆட்டத்தை படம் பிடிக்கிறது..

وَإِذْ نَجَّيْنَاكُم مِّنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ

உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்)

 يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ

ஆண் குழந்தைகளை கொன்றார்கள்.
தங்களது தேவைகளுக்காக பெண் குழுந்தைகளை விட்டு வைத்தார்கள்.

 ۚ وَفِي ذَٰلِكُم بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ 

அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு சோதனை இருந்தது.

............................................................

எந்த சத்தியத்திற்கும் அப்பாற்பட்ட
ஒரு நீதியை தங்களது செயல்களுக்கு  ஃபிர்அவ்னின் கூட்டத்தார்
கற்பித்துக் கொண்டார்கள்...

தற்போதைய மத்திய அரசாங்கமும் இந்த
பிர் அவ்னிய
கொடுங்கோன்மையை தான்
கையில் எடுத்திருக்கிறது.
டிஸம்பர்  28 ம் தேதி
நாடாளுமன்ற மக்களவையில் அரசு நிறைவேற்றியுள்ள

முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைப் பாதுகாப்புச் சட்டம் என்ன சொல்கிறது 

 அதில் முஸ்லிம் சமுதாயத்திற்கெதிரான 

பிர் அவ்னிய குணத்தின்
மொத்த அம்சமும் வெளிப்படுவதை நாம் பார்க்கலாம்.

·         முத்தலாக் செல்லாது

·         அது சட்டவிரோதமானது.

·         முத்தலாக் விடுகிற கணவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை

·         ஜாமீன் கிடைக்காது.

·         இதற்கு நீதிபதி விரும்புகிற அபராதம் விதிக்கலாம்

·         மனைவிக்கு அவள் வாழும் காலம் வரை ஜீவனாம்சம் வழங்கவேண்டும்

·         குழந்தைகளுக்கும் பராமரிப்புச் செலவு வழங்க வேண்டும்

·         குழந்தைகள் மனைவியிடமே ஒப்படைக்கப்படுவார்கள்.

இந்தச் சட்டங்களை பிர் அவ்னிய கொடுங்கோன்மை என்று ஏன் சொல்கிறோம் தெரியுமா ?

இந்தச் சட்டங்களில் எந்த ஒரு அம்சமும் பெண்களை காப்பதற்காக கொண்டு வரப் பட்டவை அல்ல....

என்பதை நாம் உணரவேண்டும்...

............

இந்த

சட்டத்தில் எந்த அறிவார்த்தமான அணுகுமுறையும் (லாஜிக் )இல்லை என்பதை சட்ட வல்லுனர்களே ஒப்புக் கொள்கிறார்கள் .

முத்தலாக் செல்லாது என்று சொல்லி விட்ட பிறகு

கணவனுக்கு சிறைத் தண்டனை எதற்கு ?

முத்தலாக் நிகழாது என்றால் கணவன் மனைவியாக இருவரும் தொடர்கிறார்கள் என்று தானே பொருள்

பிறகு கணவனை சிறைக்கு அனுப்புவது எதற்காக!

இந்தச் சட்டம் பெண்களுக்கு எதிரானது என பெண்ணுரிமை பேசும் அமைப்புக்களோ குரல் எழுப்பு கின்றன,

கணவனை சிறைக்கு அனுப்பி விட்டால் தொடரும் திருமண பந்தத்தில் குடும்பத்தை யார் கவனிப்பது. ?

சிறையிலிருக்கிற கணவன் எப்படி செலவுத் தொகை கொடுப்பான்,

எப்படி அவனால் பிள்ளைகளை பராமரிக்க முடியும்.

முஸ்லிம்களையும் இஸ்லாமையும் இழிவு படுத்துவதற்காகவும் ,

முஸ்லிம்களிடையே அச்சத்தை வளர்ப்பதற்காகவும்

 அவர்களை உரிமைகளற்றவர்களாகவும் ஆக்குவதற்காகவே

கொண்டுவரப்பட்டவை யாகும்

ஏனெனில் 3 ஆண்டு சிறைத்தண்டனை என்பது

 ஒரு சிவில் வழக்கில் கற்பனை கூட செய்ய இயலாதத்து.

............................................................................

 ஒரு சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக எப்படி மாற்ற முடியும்.

ஒரு கணவன் மனைவியை  விவாகரத்துச்  செய்தான்

அதை  தண்டனைக் குரிய குற்றம்

என்று சொல்ல என்ன இருக்கிறது.

விவாகரத்து ஒரு கிரிமினல் குற்றமல்ல.

முத்தலாக் என்பது என்பது என்ன ?

 

அது ஒரு உடனடி தலாக்.

மாற்று வழிகளுக்கு இடமளிக்காதது.

அதே நேரத்தில் பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு முழுமையாக விடுதலையை தரக் கூடியது.

  

இது குற்றம் என்றால்

இதை விட பெரிய குற்றம்

மனைவியை கை  விட்டுச் செல்வது.

அவளுடன் சேர்ந்தும் வாழாமல் இன்னொருவருடன் சேரவும் முடியாமல் விட்டு விடுவது அல்லவா ?

இத்றகு கடும் தண்டனை இருக்கிறதா ?  

இதை கடும் தண்டனைக்குரிய குற்றம் என் அரசு அறிவிக்குமானால்

நம்முடைய பிரதமர் தான் முதல் குற்றவாளியாக இருப்பார்,

...........................................................................

குடும்பம் சம்பந்தப்பட்ட 

வன்முறைச் செயல்கள் எதற்கும் இவ்வளவு கடுமையான தண்டனை கிடையாது.

எந்த அடிப்படையில் மத்திய அரசு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது ? 

இது இன்னும் கூட பெரும் வழக்கறிஞர்களுக்கும்

சட்ட வல்லுனர்களுக்கும்

புரியாத புதிராக இருக்கிறது,

....................................................................

இந்திய நாட்டில்..

எதற்கெல்லாம்

மூன்று வருட சிறை தன்டனை செக்சன்கள்

செக்சன் 148

கலவரக் காரகளுக்கும்,

அபாயகரமான ஆயுதங்களை வைத்திருப்போருக்கும்

மூன்றாண்டு சிறைத்தண்டனையையும் அபராத்த்தையும் அளிக்கிறது.

செக்சன் 153 A

இன மோதல்களை தூண்டுவோருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கிறது.,

செக்சன் 237

சட்ட விரோதமாக

நாணயப் பரிவர்த்த்தனையில் ஈடுபடுவோருக்கு  கல்லநே ாட்டு

மூன்றாண்டு தண்டனை வழங்குகிறது.

செக்சன் 295 A 

மத உணர்வுகளுக்கு எதிராக திட்ட மிட்ட செயல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை வழங்குகிறது,

இந்த செக்சனில் தான் ஷரீயத்திற்கு எதிராக சட்டம்  கெ ாண்டுவர நினைப்பவர்களுக்கு  தன்டனை வழங்க வேண்டும்...

இந்த குற்றங்கள் எதுவும் மூன்று மாதங்கள் காத்திராமல் ஒரே தடவையில் தலாக் விட்டவருடன்

 ஒப்பிடத் தகுந்த்து அல்ல.

மிக கடுமையான சில குற்றச் செயல்களுக்கே கூட மூன்றாண்டு சிறை தண்டனை கிடையாது.

ஆனால்  எப்போதாது தவறிழைத்து விடுகிற முஸ்லிம் ஆண்களுக்கு இந்த தண்டனை என்பது

 

தான் தோன்றித்தனமான தண்டனையாகும்.

 

பெருத்தமற்றதாகும்

 சட்டமீறலுமாகும்.

சுருக்கமா கூறினாள்....

; உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்லாத விசயங்களை

அதன் பெயரைச் சொல்லியே அபத்தமாக

 மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

  

இவைகளை வைத்து

மத்திய அரசு முஸ்லிம்களை குறி வைத்து விட்ட்தாக நினைக்கிறது.

உண்மையில்

இந்திய ஜனநாயகத்தையும் நாடாளுமன்றத்தின் பாரம்பரியத்தையும் தகர்த்திருக்கிறது.

நாட்டுக்கு நன்மை செய்கிற

நலத் திட்டங்களை செயல் படுத்துவதில் பல வகையிலும் தோற்று விட்ட அரசு

 திட்டங்கள் தோற்றுப் போனதை மறைப்பதற்காக

  மத விரோத மனப்பான்மையை நாட்டில் ஏற்படுத்துவதற்காக

இந்தச் சட்ட்த்தை கொண்டு வந்துள்ளது,

முஸ்லிம்களுடை ய கருத்து தெளிவானது ‘’

அரசியல் சாசனம்

அங்கீகாரம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக

உச்ச நீதிமன்றமோ பாராளுமன்றமோ எந்த ஒரு சட்ட்த்தை  கொண்டு வந்தாலும் சரி....

முஸ்லிம் சமூகத்தை யோ

இஸ்லாமிய மார்க்கத்தையே ா

இழிவு படுத்துகிற வகையில் நடந்து கொண்டாலும் சரி.....

அவற்றை முஸ்லிம்கள் நிராகரிப்பார்களே தவிர

ஒரு போதும் தமது ஷரீஅத்தை விட்டுத்

தர மாட்டார்கள்.

...........................................................

நாட்டு  விடுதலைக்காக  போராடுவதில் முஸ்லிம்கள் முன்னணியில் இருந்தார்கள். .

இன்னும்  சொல்வதானால் சுதந்திரப்  போராட்டம்  என்பது  அடிமை இந்தியாவில் முஸ்லிம்களால்
தான் முன்னெடுத்துச்  செல்லப் பட்டது  என்றுசொன்னால்  அது மிகையாது.

நாட்டு விடுதலைக்காக போராடுவது என்பது முஸ்லிம்களைப் பொருத்த வரை தேசப்பற்றாக மட்டும் இல்லாமல் அது இஸ்லாமிய சமய வழிகாட்டுதலாகவும் இருந்தது

.முஸ்லிம்கள் தான் ஆங்கிலேயாரிடம்ஆட்சியை பறிகொடுத்திருந்தனார் அதனால் தான் தீரத்தோடு  போராடினார்கள் என்று பலரும்  சொல்வது வாடிக்கை.

ஆனால், விடுதலைப் போரில் முஸ்லிம்கள் தீவிரமாக  ஈடுபட   பிரதானகாரணம்   

இஸ்லாம்  ஆகும்.

لا اله الا الله
லாயிலாக இலாஹ இல்லல்லாஹ் –எனும் கலிமா.

மனிதன்  மனிதனுக்கு  தலை வணங்கிச்கிடப்பதை  தடை செய்கிறது. இஸ்லாம்..

  தனி மனிதனின் 

சுய மரியாதையை மீட்டெடுத்து  அவனுக்கு  சுதந்திர மனிதனுக்குரிய  கம்பீரத்தை வழங்கியது.  இஸ்லாம்.

அடிமைத் தனத்திலிருந்து 

விடுதலை பெற போராடுவதும் 

ஆதிக்க வெறியர்களின் கொட்டத்திற்கு முடிவுகட்டுவதும் 

நபிமார்களின் வழிமுறையாக இருந்ததது என்பதை திருக்குர் ஆன் பல இடங்களில்

சுட்டிக்காட்டுகிறது....

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 

தனது கடைசி ஹஜ்ஜின் போது

  இனம் நிறம்மொழி தேசம் என்ற எந்தஅடிப்படையிலும் மனிதனை மனிதன்அடிமைப்படுத்த முடியாது என்று பிரகடணத்தை வெளியிட்டார்கள்.

فقال يا أيها الناس ألا إن ربكم واحد وإن أباكم واحد

 ألا لا فضل لعربي على أعجمي ولا لعجمي على عربي

 ولا لأحمر على أسود ولا أسود على أحمر

 إلا بالتقوى

(அஹ்மது:22391)

.....................................................................

 ஷரீ அத்தின் சட்டத்தை –  ஒன்றை - மறுப்பதோ வெறுப்பதே ஈமானைப் பறிகொடுக்கிற குற்றமாக ஆகும்.

வேடிக்கை விளையாட்டு அலட்சிய மனப்பாங்கு இதில் எந்த விதத்திலும் ஷரீஅத்தை

 எதிர்த்தோ மறுத்தோ நாம் பேசி விடக்கூடாது,

பெருமானாரின் தீர்ப்பை ஏற்காமல்

தன்னிடம் தீர்ப்புக் கேட்டு வந்தவரை

உமர்(ரலி) தன்னுடைய வாளால்

தீர்த்துக்கட்டினார்கள், 

இது பற்றி அவரது உறவினர்கள்

கலிமா சொன்ன ஒருவரை எப்படிக் கொல்லலாம் என சர்ச்சையை

கிளப்பிய போது –

அல்லாஹ் சொன்னவார்த்தையை நாம் என்றும் நினைவில்நிறுத்த வேண்டும்,

{فَلا وَرَبِّكَ لا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لا يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا} [النساء:65].

உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய திருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.

நம்முடைய நாட்டில் ஷரீ ஆ வுக்கு

எதிரான அநீதியான குரல்கள்

அடக்குமுறை தீர்ப்புக்கள் மூலம்

வலுப்பெறுவது போல தோன்றலாம்.

முஸ்லிம்களிடம் ஷரீ அத் எங்களது

உயிர் எனும் உணர்வு இருக்கும்

வரை,

தமது ஒவ்வொரு காரியத்திலும்

ஷரீ அத்தின்அடிப்படையில்

தீர்வு காணும் வரை

எந்தபிர் அவ்னிய அரசுகளாலும்

ஷரீ த்தை அசைத்து பார்க்க கூட முடியாது,

.............................................................................

முஃமின்களுக்கு.

இறைவனின் வாக்குறுதி...

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا

وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ 

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்

Comments

Popular posts from this blog

வட்டி இஸ்லாத்தின் பார்வையில்

குர்ஆன்,ஹதீஸ் ஔியில் 70 பெரும் பாவங்கள்.

இஸ்லாமிய உயர்வுக்கு வாலிபர்களின் பங்கு!