சமூக நலன் காப்போம்..
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
الحمدُ للهِ وَلِيِّ كُلِّ نعمةٍ ، وَصَلَّى اللهُ عَلَى رَسُولِهِ مُحَمَّدٍ نَبِيِّ الرَّحْمةِ ،وعَلَى آلِهِ وأصْحابِهِ خِيَارِ الأمَّةِ
وسَلَّمَ تَسليماً كَثيراً
உலக மக்கள் அனைவராலும் போற்றப்படக்கூடிய ஒரே மார்க்கம்,
நம் இஸ்லாமிய மார்க்கம் தான்.
அண்ணலாரின்
ன்வாழ்க்கை நெறியை பார்த்து வியந்து அதில் பல ஆராய்ச்சிகளை செய்து,
அதில் வியந்து
அண்ணலாரை போற்றி புகழ்ந்து இஸ்லாத்தை தழுவிய
பல அறிஞர்களின் வரலாறுகள் பல உண்டு.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்
கற்றுத்தந்த வழிமுறைகள் அனைத்துமே இவ்வுலகில்
ஒற்றுமையுடன் வாழும்
அழகிய வாழ்கையை
கற்றுத்தரக்கூடியது
வலியுறுத்தக் கூடியது..
குடும்பத்துடன் இணங்கி வாழ வேண்டும்,
அண்டை வீட்டாருடன் இணைந்து வாழ வேண்டும்,
ஒருவருக்கொருவர் உதவிசெய்து வாழ வேண்டும்,
சொந்தங்களுடன் சேர்ந்து வாழவேண்டும்,
முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்,
வாழும் நாட்டின் மேல் பற்றுடன் வாழவேண்டும்,
பிற மத சகோதரர்களுக்கும் உதவிசெய்து வாழ வேண்டும் .
என்று எண்ணற்ற போதனைகளை நமக்கு வழங்கி
அதையே வாழ்ந்து காண்பித்திருக்கின்றார்கள்.
சமுதாயத்தின் சிறப்பு :
அல்லாஹு தஆலா தன் அருள்மறையில் சொல்லும்போது :
كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِؕ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَڪَانَ خَيْرًا لَّهُمْؕ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள்.
تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِؕ
(ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கின்றீர்கள்.
وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَڪَانَ خَيْرًا لَّهُمْؕ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ
(இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் நம்பிக்கை கொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்ட வர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும் பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (3:110.
என்று கூறி காட்டுகின்றான்.
...........................................................
மார்க்கம் நமக்கு கற்று தரும் பாடம்
நாம் வாழும் இந்த வாழ்க்கையில் நம்முடைய நலனை மட்டும் பார்த்து சுயநலனுக்காக வாழாமல்
, பிறரின் நலனையும் பேண வேண்டும்.
சுயநலத்தோடு செயல்படாமல் பொது நலத்தோடு சமூக அக்கறையோடு செயல்படுவதே..
நபிகளாரை பின்பற்றுவதன் முதல் அடி.
நபி ஸல் அவர்கள்
இஸ்லாத்தை பிறருக்கு எடுத்துச் சொன்னதே அதனடிப்படையில்தான்.
وروى أحمد والدارمي والطبراني من حديث أبي جمعة قال: «قال أبو عبيدة:
يا رسول الله، أأحد خير منا؟ أسلمنا معك، وجاهدنا معك.
قال: قوم يكونون من بعدكم يؤمنون بي ولم يروني»
وإسناده حسن وقد صححه الحاكم.
........................................................................
பெருமானார்(ஸல்) அவர்கள்
மதீனாவில் ஏற்படுத்திய சகோதரத்துவத்தின் தாக்கம்..
கொடூரமான குணங்களுடன் வாழ்ந்து வந்த அந்த சஹாபாக்களை...
இந்த மார்க்கத்திற்காக எதையும் இழக்க தாயார் படுத்தியது
மேலும் அதை கண்டு அல்லாஹ்வும் ஆசிரியப்பட்டான் மேலும் அவர்கள் விஷயத்தில் ஆயத்தும் இறக்கப்பட்டது ..
, நூல்: புகாரி 3798
عن
أبي هُرَيرة قال: أتى رجل رسول الله صلى الله عليه وسلم
فقال: يا رسول الله، أصابني الجهدُ، فأرسل إلى نسائه فلم يجد عندهن شيئًا، فقال النبي صلى الله عليه وسلم: "ألا رجل يُضَيّفُ هذا الليلة، رحمه الله؟". فقام رجل من الأنصار فقال: أنا يا رسول الله. فذهب إلى أهله فقال لامرأته: ضَيفُ رسول الله صلى الله عليه وسلم لا تَدّخريه شيئًا. فقالت: والله ما عندي إلا قوتُ الصبية. قال: فإذا أراد الصبيةُ العَشَاء فنوّميهم وتعالى فأطفئي السراج ونَطوي بطوننا الليلة. ففعلَت، ثم غدا الرجل على رسول الله صلى الله عليه وسلم، فقال: "لقد عجب الله، عز وجل -أو: ضحك-من فلان وفلانة". وأنزل الله عز وجل: { وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ }
ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி எவஸல்லம் அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காக) தமது மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள்.
فأرسل إلى نسائه فلم يجد عندهن شيئًا،
அப்போது அவர்கள், “எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று பதிலளித்தனர்.
فقال النبي صلى الله عليه وسلم: "ألا رجل يُضَيّفُ هذا الليلة، رحمه الله؟". فقام رجل من الأنصار فقال: أنا يا رسول الله. فذهب إلى أهله
ஆகவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இவரை சேர்த்துக் கொள்பவர் யார்?” அல்லது “இவருக்கு விருந்தளிப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “நான் (விருந்தளிக்கின்றேன்)” என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு தமது மனைவியிடம் சென்றார்.
فقال لامرأته: ضَيفُ رسول الله صلى الله عليه وسلم لا تَدّخريه شيئًا.
“அல்லாஹ்வின் தூதருடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து” என்று (தம் மனைவியிடம்) கூறினார்.
فقالت: والله ما عندي إلا قوتُ الصبية.
அதற்கு அவருடைய மனைவி, “நம்மிடம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று கூறினார்.
அதற்கு அந்த அன்சாரித் தோழர், “உன் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு” என்று கூறினார்.
அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார்.
பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று விளக்கை அணைத்து விட்டார்.
பிறகு (இருக்கும் உணவை விருந்தாளியை உண்ணச் செய்து விட்டு) அவரும் அவரது மனைவியும் உண்பது போல் அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள்.
பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர்.
காலையானதும் அந்த அன்சாரித் தோழர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றார்.
، ثم غدا الرجل على رسول الله صلى الله عليه وسلم، فقال: "لقد عجب الله، عز وجل -أو: ضحك-من فلان وفلانة". وأنزل الله عز وجل:
{ وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ }
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு சிரித்துக் கொண்டான்” அல்லது “வியப்படைந்தான்” என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்,
وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِن قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ
இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு, அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள், அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்,
وَلَايَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِّمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ۚ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
.
“தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (பிறருக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்”
எனும்(59:9) வசனத்தை அருளினான்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3798
.................................................................
சமுதாய நலனை காப்பதில் முக்கியத்துவம்
செலுத்துவதில் சஹாபாக்கள்....
ஹஜ்ரத் உமர் ரலி அவர்கள் தான் மரண நேரத்திலும் தன் சகோதரருக்கு வழிகாட்டினார்கள் :
وَجَاءَ رَجُلٌ شَابٌّ فَقَالَ أَبْشِرْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ بِبُشْرَى اللَّهِ لَكَ مِنْ صُحْبَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدَمٍ فِي الْإِسْلَامِ مَا قَدْ عَلِمْتَ ثُمَّ وَلِيتَ فَعَدَلْتَ ثُمَّ شَهَادَةٌ قَالَ وَدِدْتُ أَنَّ ذَلِكَ كَفَافٌ لَا عَلَيَّ وَلَا لِي فَلَمَّا أَدْبَرَ إِذَا إِزَارُهُ يَمَسُّ الْأَرْضَ قَالَ رُدُّوا عَلَيَّ الْغُلَامَ قَالَ يَا ابْنَ أَخِي ارْفَعْ ثَوْبَكَ فَإِنَّهُ أَبْقَى لِثَوْبِكَ وَأَتْقَى لِرَبِّكَ
பஜ்ரு தொழுகையை இமாமாக நின்று தொழவைத்துக்கொண்டிருந்த நீதியின் திரு உருவமான ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்கள் .
அபூலுஃலு என்பனால் விஷம் தேய்த்த கத்தியினால் குத்தப்பட்டு தன் வீட்டில் வேதனையின் உச்சத்திலும் மரணத்தின் விளிம்பிலும் இருந்த நிலையில் கூட
தன்னை நலம் விசாரிக்க வந்த வாலிபரின் கீழாடை கரண்டைக்கால் கீழ் இருப்பதை கண்டு..
அவர்திரும்ப செல்லும்போது அந்நேரத்திலும் சப்தமிட்டு அவரை அழைக்க முடியாமல் அருகிலுல்லவர்களின் துணை கொண்டு அழைத்து அவரிடம் சொன்னார்கள்
قَالَ يَا ابْنَ أَخِي ارْفَعْ ثَوْبَكَ فَإِنَّهُ أَبْقَى لِثَوْبِكَ وَأَتْقَى لِرَبِّكَ
சகோதர மகனே உன் ஆடையை உயர்த்திக்கொள் அது உன் ஆடைக்கு மிகுந்த சுகாதரத்தை தருவதுடன்
உன் இறைவனிடம் உனக்கு இறையச்சமிகுந்தவன் என்ற பெயரையும் தரும் என்றார்கள்.
நூல்: புகாரி
..........................................................................
..
இஸ்லாம் முஸ்லிம்களிடம் இரண்டு அம்சங்களை எதிர்பார்க்கிறதுது,
وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ
وَمَا أَنَا مِنْ الْمُشْرِكِينَ
அவர்கள் முஸ்லிம்களாக நடக்க வேண்டும்
அவர்களிடம் முஷ்ரிகின் அம்சங்கள் இருக்க கூடாது.
......................................................................
முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
ஒரு உன்னதமான உயர்வான - இறைவனுக்கு முற்றிலும் அடிபணிகின்ற ஒரு தூய சமூகத்தை உருவாக்க நினைத்தார்கள்.
அந்த சமூகத்தில் பிற மதங்களின் அர்த்தமற்ற
இறை விருப்பத்திற்கு மாறான கோட்பாடுகள் அனைத்திலிருந்தும் தன்னுடைய சமுதாயம் வேறுபட்டு
நிற்க வேண்டும் என்று விரும்பினார்கள் வலியுறுத்தினார்கள்...
عن المسور بن مخرمة رضي الله عنهما، أن رسول الله صلى الله عليه وسلم قال: هدينا مخالف لهديهم يعني: المشركين.- حاكم
வணக்க வழிபாடுகளில் தொடங்கி ..
தாடி மீசை வைப்பதில் தொடர்ந்து ஆடை அணிவது வரை
அனைத்து விச்யங்களிலும் முஷ்ரிகின் அடையாங்களை விட்டு விலகி இருக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும்..
என வலியுறுத்தினார்கள். நபி ஸல் அவர்கள்...
ஆனால்..
இன்றைய இஸ்லாமியர்களின்..
மாற்றார்கள் போன்று
பட்டாசு வெடிப்பப்து – வாணவேடிக்கைகள் செய்வது..
ஆடை அலங்காரம் செய்வது..
உதாரணமாக நிறைய விசயங்களை சுட்டிக் காட்ட முடியும்..
மாற்றுமத கலாச்சாரம்
அவர்களது கொண்டாட்டம்.
அது அவர்களின் வணக்கம்...
உலகில் சிலை வணக்கம் எங்கு
இருக்கிறதோ அங்கெல்லாம்
இந்தகேலிக்கூத்துக்கள்
நடந்ததும்-
நடப்பதும் வாடிக்கை.
ஆபாசம், ஆட்டம் பாட்டம்,
தேவையன்றி சப்தமெழுப்புதல்.
இசைக்கருவிகள்
வாணவேடிக்கைகள் செய்தல்
பணத்தை ஒரு பயனும் இல்லாத
வழிகளில் செலவழித்தல்
இவை அனைத்தும்
சிலை வணக்கத்தின்
ஒரு பகுதியே!
عن ابن عباس في قوله "وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية" قال كانت قريش تطوف بالبيت عراة تصفر وتصفق والمكاء الصفير والتصدية التصفيق.
ஜாஹிலிய்யாக் காலத்தில்
மக்காவாசிகள் தவாபு செய்கிற
போது சீட்டியடிக்கிற பழக்கமும்
கைதட்டுகிற பழக்கமும்
கொண்டிருந்தனர்,
வீணான வழிகளில் காசு பணத்தை விரயம் செய்தனர்,
அதைத்தான் அல்லாஹ் அன்பால்
அத்தியாயத்தில் 35 36 வசன்ங்களில் கண்டிக்கிறான்.
وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ إِلَّا مُكَاءً وَتَصْدِيَةً فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ(35
அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்;) "நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்" (என்று).
)إِنَّ الَّذِينَ كَفَرُوا يُنْفِقُونَ أَمْوَالَهُمْ لِيَصُدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ
. நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்;
فَسَيُنفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُونَ
(இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் - முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்;
பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்;
وَالَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ يُحْشَرُونَ36
(இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.
இஸ்லாமிய பெருநாட்களில்
இஸ்லாமிய ஏகத்துவ தத்துவமும்..
சகோதரத்துவ கோட்பாடும்.
அமைதி மார்க்கத்தின்
அடையாளங்களும்
மிளிர்வதைப் போலவே
பிற
சமூகத்தினரின் விசேச நாட்களில்
அவர்களுடைய தத்துவங்களும்
கோட்பாடுகளும் வெளிப்படுகின்றதா என்பதை சிந்திக்கின்ற யாரும் அறிந்து
கொள்ளலாம்.
சென்ற பண்டிகையும் அப்படித்தான்.
மாற்றுமதத்தின் கற்பனையான
பொய்யான கோட்பாடுகளையும்
அசமஞ்சத்தனமான
தத்துவங்களை பிரதிபலிக்கிறது.
திருக்குர் ஆண் சொல்வது போல
எந்த ஆதரமும் இன்றி செய்யப்படும் இது போன்ற நடவடிக்கைகள்
சிலை வணக்கத்திற்கு மக்களை தூண்டும் சைத்தான்
அழகுபடுத்திக் காட்டும் நடவடிக்கைகளாகும்.
இத்த்தகைய நிலையை
கண்டு மனதில் வெருப்பு கொள்வதும் விலகி நிற்பதும் ஈமானிய குணமாகும்.
நமது ஈமான தூய்மையானதாக இருக்க வேண்டும்.
முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சேர்ந்து வாழ வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது .
ஒற்றுமையை சரியாக கடைபிடிக்கவும்,
சகோதரதுவத்துடன் சமுதாயத்தில் வாழவும் பெருமானார் ஸல் அவர்கள் நமக்கு கற்று தந்து இருக்கின்றார்கள்.
1.தொழுகையின் ஸப்புகளை சரி செய்ய சொல்லி கொடுக்கும் போது அத்தோடு சமுக ஒற்றுமையையும் சேர்த்தே சொன்னார்கள் :
عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلَاةِ وَيَقُولُ اسْتَوُوا وَلَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ لِيَلِنِي مِنْكُمْ أُولُو الْأَحْلَامِ وَالنُّهَى ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ قَالَ أَبُو مَسْعُودٍ فَأَنْتُمْ الْيَوْمَ أَشَدُّ اخْتِلَافًا
2.முஸாபஹா செய்ய சொல்லிகொடுக்கும் போது
قالَ النَّبِيُّ صلى الله عليه وسلّم: «تَصَافَحُوا فَإنَّ المُصَافَحَةَ تَذْهَبُ بِالشَّحْنَاءِ
3.சலாம் சொல்வதை கற்று கொடுத்தார்கள்
قال رسول الله صلى الله عليه وسلم : " لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أو لا أدلكم على شيء إذا فعلمتموه تحاببتم ؟ أفشوا السلام بينكم " رواه مسلم
இந்த மூன்று செயல்களையும் பெருமானார் செய்ய சொன்ன காரணத்தை உற்றுநோக்குகிற போது இவை மூன்றுமே மற்ற சகோதரர்களோடு இணக்கத்தோடு வாழுவதற்காகவே என்பது புரிகிறது.
இப்படி எல்லா வற்றிலும் சகோதரத்துவத்தையும்
பிறர் நலனையும் பேணுமாறும் வலியுறுத்துகிறது நம் மார்க்கம்.
முக்கியமாக இதனை முழுமையாக பின்பற்றி
அறியாத நபர்களுக்கு அதனை கொண்டுசேர்க்கவேண்டும்.
சமுதாயத்தை சீர்படுத்தவேண்டும்.
அதற்கு முக்கிய பொறுப்புகளை வகிக்கும் சமுதாய நலன் விரும்பிகள் மற்றும் உலமாக்கள் அதனை பொறுப்பிலெடுக்க வேண்டும்.
இன்றைய நம் நாட்டின் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் சமூக ஒற்றுமையின்மை தான்.
அதனை சரிப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு முஹல்லா மக்களும் அந்த முஹல்லாவின் பள்ளிவாசலின் கீழ் ஒன்றுபட வேண்டும்.
ஒவ்வொரு பள்ளிவாசலின் நிர்வாகமும் ஒரே. ஐக்கிய
அமைப்பின் கீழ் ஒன்றுபட வேண்டும்.
இது போன்ற காரியங்களை முன்னெடுத்து, சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்க வேண்டும்.
துவண்டு கிடைக்கும் முஸ்லீம் சமுதாயத்தை ஒன்று திரட்ட வேண்டும்.
அல்லாஹ் நமக்கு அதற்குரிய பாக்கியத்தை தந்தருவானாக.
இன்னும் இஸ்லாத்தின் எதிரிகளை விட்டும் நம் நாட்டு மக்களை பாதுகாத்தருள்வானாக!! ஆமீன் !
Comments
Post a Comment