ஹஜ் புனித பயணம்
وَلِلّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً وَمَن كَفَرَ فَإِنَّ الله غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ .. }
(97- آل عمران)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «العُمْرَةُ إِلَى العُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالحَجُّ المَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الجَنَّةُ»
இந்த ஆண்டிற்கான ஹஜ் தொடங்கிவிட்டது.
இது நான்காயிரம் ஆண்டு வரலாற்றின் ஒரு தொடர்ச்சியாகும்.
முதல் இறையில்லம்
اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும்,உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
(அல்குர்ஆன் : 3:96)
பொதுவாக ஒரு இடத்தின் சிறப்பு விளங்கினால்தான் அங்கு செல்ல வேண்டும் அமல்ச் செய்ய வேண்டும் என்கின்ற ஆசையும் ஆர்வமும் உண்டாகும்.
எனவே அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களான அங்குள்ள சிறப்பான இடங்களின் மகிமையையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்
் ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ
இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,)எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும். (அல்குர்ஆன் : 22:32)
மக்காவின் சிறப்பு
**********************
இறைத்தூதர் இப்ராஹீம் ( அலை) அவர்கள் தம் அடிமைப் பெண் ஹாஜரையும் புதல்வர் இஸ்மாயீல் ( அலை) அவர்களையும் மனித சஞ்சாரமற்ற மக்கா பாலைவனத்தில் குடியமர்த்திவிட்டு அல்லாஹ்விடம் செய்த பிரார்த்தனை
رَبَّنَاۤ اِنِّىْۤ اَسْكَنْتُ مِن
ْ ذُرِّيَّتِىْ بِوَادٍ غَيْرِ ذِىْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ رَبَّنَا لِيُقِيْمُوْا الصَّلٰوةَ
எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே,விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில்,எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்;
فَاجْعَلْ اَ فْـٮِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِىْۤ اِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ
“எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!” (அல்குர்ஆன் : 14:37)
وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ
இன்னும் நினைவு
கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்;
قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِيْلًا ثُمَّ اَضْطَرُّهٗۤ اِلٰى عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيْرُ
(அதற்கு இறைவன் கூறினான்: “(ஆம்;)யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் - அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.” (அல்குர்ஆன் : 2:126)
கஃபாவை கட்டி முடித்த நபி இப்ராஹீம் ( அலை) அவர்கள் அல்லாஹ் விடம்
ربنا تقبل منا.....
கேட்ட போது ,அல்லாஹ் கூறினான்
وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ (27)
ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).
மக்களே உங்களது இறைவன் தனக்காக ஒரு ஆலயத்தை இங்கே கட்டியிருக்கிறான்,
அதைநொக்கி பயணம் செய்து வாருங்கள் என அபீகுபைஸ் மலை மீது நின்று இபுறாகீம் நபி அழைக்க.
அந்த அழைப்பிதழை பெற்று நாங்கள் வந்து விட்டோம் என (லப்பைக்) என அப்போது சம்மதம் கூறியவர்கள் ...
இப்போது அந்த சம்மதத்தை நிறைவேற்ற பயனப்படுகிறார்கள்
சாரை சாரையாக மக்கள் உலகின் பலபாகத்திலிருந்தும் புனித
மக்கா நகரை நோக்கி பயணமாகிக்கொண்டிருக்கின்றனர்.
அல்லாஹ் தமக்கு அளித்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள உற்சாகத்தோடும் உணர்வுப் பெருக்கோடும் பயணம் செய்கிற அந்தப் புனிதப் பயணிகளை நாம் உளப்பூர்வமாக துஆ செய்து வழிஅனுப்பி வைக்க வேண்டும்..
அல்லாஹ் அவர்களது ஹஜ் உம்ராவை ஏற்றுக் கொள்வானாக! ...
அவர்களின் பயணத்தை இலேசானதாக ஆக்குவானாக!
பாதுகாப்பானதாக ஆக்குவானாக!
உடல் ஆரோக்கியத்தோடும் மன அமைதியோடும் சகல கடமைகளையும் நிறைவேற்ற அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
ஹாஜிகள் நிம்மதியாக திரும்பி வருகிற வரை அவர்களுடைய குடும்பத்தையும் தொழில் நிறுவனங்களை அல்லாஹ் பாதுகாப்பானாக!
கருணை மிக்க ரஹ்மான்
நமக்கும்ஹஜ் செய்கிற தவ்பீக்கை தந்தருள்வானாக!
.....................................
ஹஜ் என்பது பணத்தாலோ திறமையாலோ கிடைக்கிற வாய்ப்பல்ல.
அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பு.
மூன்று காரியாங்களில் அல்லாஹ் மனிதர்களை தேர்ந்தெடுத்து கொடுக்கிறான்.
1. நபித்துவம்
2. மாக்க கல்வி
3. ஹஜ்
ஹஜ்ஜுக்குப் போகிற ஹாஜி இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒன்றுக்கு பல முறை ஹஜ்ஜுக்கு செல்கிறவர்களும் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் தேர்ந்தெடுக்காமல் யாரும் ஒரு முறை கூட செல்ல முடியாது.
............................
وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ 2:196
الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால்,
فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ
ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது.
وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ
நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;.
وَتَزَوَّدُوافَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى
197. மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்;
وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ
எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.
............................................................
فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَقَامُ إِبْرَاهِيمَ
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது.
وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا
மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்;
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا )
97. . இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்.
ஆனால்,
وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ
எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கி;றான்.
1 . ஹஜ்ஜின் பிரதி பலன்கள் :
A. பாவம் நீங்கி பரிசுத்தம்.
صحيح البخاري 1773 - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «العُمْرَةُ إِلَى العُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالحَجُّ المَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الجَنَّةُ»
ஸஹீஹ் புகாரி 1773.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
...........................................
صحيح البخاري 1820 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ حَجَّ هَذَا البَيْتَ، فَلَمْ يَرْفُثْ، وَلَمْ يَفْسُقْ
ஸஹீஹ் புகாரி 1820.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், பாவமான பேச்சு செயல் எதுவும் செய்யாமல் இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர்
رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ»
அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
...........................................
# குறிப்பு :
“பாவமான பேச்சு செயல் எதுவும் செய்யாமல்”
இது மிகப் பயங்கரமான நிபந்த்தனை
. பெரும்பாலும் ஹாஜிகள் தோற்று போகும் இடம் இதுவே இது மட்டுமே.
எனவே
தங்கும் இடம் /
வாகன வசதி ..
பயண காலம் /
உணவு நேரம்
எல்லாத்திலும் கண்டிப்பாக் பிரச்சினை வரும்..
ஏனெனில் கிட்டும் பரிசு சுவர்க்கம் அல்லவா.
அதை நோகாமல் பெற முடியுமா .
குறை கூறி திட்டுவதருக்கு / பேசுவதற்கு நியாயமான பல காரணங்கள் உண்டு என்றாலும் பொறுமையோடு மௌனம்காக்க வேண்டும் .
நம்மை மீறிபொறுமை இழந்தால்
“A.சுவர்க்கம் .,B.அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார்
“ என்ற பரிசும் இழக்க நேரிடும்.
B. வறுமை ஒழியும்
......................
وفي سنن الترمذي 738
عَنْ ابْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ"تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ
ஹஜ் & உம்ரா தொடர்ந்து செய்யுங்கள் .
فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ
كَمَايَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ وَالذَّهَبِ وَالْفِضَّةِ
இரும்பின் துருவை , தங்கத்தின் அழுக்கை,வெள்ளியின் அழுக்கை நெருப்பு நீக்குவது போல் இவ்விரண்டும்(-ஹஜ்&உம்ரா) வறுமையை நீக்கும்.பாவத்தை விட்டும் பரிசுத்தப் படுத்தும்..
நூல் : திர்மிதி738 ,தப்ரானி11265 .
وَلَيْسَ لِلْحَجَّةِ الْمَبْرُورَةِ ثَوَابٌ إِلَّا الْجَنَّةُ " (*1)
وفي المعجم الكبير للطبراني 11265 عَنِ ابْنِ عَبَّاسٍ بالإختصار
........................................
# புடம்போட்ட சுத்தமான தங்கமாக மாறுவது எப்போது ?
அது பொறுமையோடு சுட்டெறிக்கும் நெருப்புக்குள்ளே சகித்து இருந்தால் தானே .
அது போல் தங்குமிடம்/உணவு/வாகனம் / பயணம்/ கால தாமதம் எந்தப் பிரச்சினை வந்தாலும் உணர்ந்து பொறுத்து கொள்ள வேண்டும்.
......................................................
ஹஜ்ஜு செய்ய பணம் ஒரு துணைக் காரணம் தான்
அல்லாஹ் தேர்ந்தெடுப்பதே முக்கியம்.
சாதாரணமான பலர் ஹஜ்ஜு கடைமை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
இவர்களெல்லாம் ஹஜ்ஜு செய்வார்கள் என்று எண்ணிப் பார்ப்பதே சிரமம்,
அத்தகையோர் ஹஜ்ஜுக்கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றித் திரும்பியிருக்கிறார்கள்.
மளையாளத்தில் பி.டி யின் ஹஜ்ஜு என்ற பெயரில் ஒரு புத்தகம் இருக்கிறது, அந்தப் புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறத்து.
அந்த நூல் சுவையானது. அந்த நூலுக்கான பின்னணி அதை விடச் சுவையானது.
பி.டி வீராண் குட்டி முஸ்லியார் ஒரு பள்ளிவாசலின் இமாம்.
மிகவும் ஏழ்மையானவர், ஹஜ்ஜை நினைத்துப் பார்ப்பதே அவரது அன்றைய வசதிக்கு சாத்தியமில்லாதது.
அந்த ஊரின் பெரும் பணக்காரர் ஒருவர் ஹஜ்ஜுக்கு செல்ல தயாராகி இருக்கிறார், வீட்டை விட்டு கிளம்புப் போது துஆ செய்வதற்காக வீராண் குட்டி முஸ்லியாரை அழைத்திருக்கிறார்.
அவர் துஆ ஓதி முடித்த போது பணக்கரருக்கு முஸ்லியாரை திருவணந்த புரம் வரை அழைத்துச் செல்லாம் என்று தோன்றியது. முஸ்லியாரிடம் நீங்கள் திருவணந்த புரம் வரை என்னோடு வந்து எனக்கு இமாமாக இருங்கள் தேவையான
துஆக்களை செய்யுங்கள் என்று கேட்டார்.
இமாம் சற்று யோசித்து விட்டு வீட்டிற்கு போய் சொல்லிக் கொண்டு இரண்டு துணியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
திருவணந்த புரத்தில் அந்தப் பணக்காரர்
உஸ்தாதே என்னோடு மும்பைக்கு வர வேண்டும் என்று கோரினார்.
அப்படியேஉஸ்தாது மும்பை வரை சென்றார்.
மும்பையில் வைத்து அந்தப் பணக்காரருக்கு உஸ்தாதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றால் என்ன ?
என்று தோன்றியது . உஸ்தாதிடம் கேட்டார். உஸ்தாதின் கண்களில் கண்ணீர் மல்கியது,
அது பாஸ்போர்ட் போன்ற சமாச்சாரங்கள் தேவையில்லாத நேரம்.
கப்பலில் இடம் கிடைப்பது மட்டுமே முக்கியமாக இருந்தது.
செல்வந்தர்
கப்பல் கம்பெணியிடம் பேசி உஸ்தாதுக்கு சீட் வாங்கினார்.
திருவணந்தபுரத்திற்கு புறப்பட்ட உஸ்தாது இறுதியில் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு திருவணந்தபுரம் திரும்பினார்.
அது சம்பந்தமான விசயங்களை புத்தகமாக் எழுதினார். அதுவே பி, டி யின் ஹஜ்ஜு என்ற பெயரில் புத்தகமாகமாக வந்து
சாகித்ய அகாதமி விருதும் பெற்றது.
ஹஜ்ஜுப்பயணம் இப்படித்தான் நினைத்துப் பார்த்த மாத்திரத்தில் பலருக்கும் வாய்த்திருக்கிறது.
எத்தனை முறை முயற்ச்சி செய்தும் சிலருக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போயிருக்கிறது.
..............................................................
தற்காலத்தில் ஹஜ்ஜுக்கான வாய்ப்பை பெற்றவர்கள் அல்லாஹ்வுக்கு அதிக நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்கள்.
முற்காலத்தில் வாழ்ந்த பேரரர்சளுக்கு கிடைக்காத வாய்ப்பு இப்போது நமக்கு சாதாரணமாக கிடைக்கிறது.
தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜஹான் தன்னுடைய வாழ்வில் ஒரு முறை கூட தொழுகையை கழாவாக விட்டதில்லை.
ஆனால் அவருக்கு ஹஜ்ஜு செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
........................................................
பண வசதி படைத்தவர்கள் அல்லாஹ்வின் அந்த வாய்ப்பை சீக்கிரமாக உறுதிப் படுத்திக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறார்கள்.
ரேஷன் கார்டு வேண்டும் என்ற அவசியத்திற்கு எப்படி முக்கியத்த்துவம் தருகிறோமோ.....
அதை விட அதிகமாக ஹஜ்ஜுக்கான விசாவை பெற்றுவிடுவதற்கு வசதிபடைத்தவர்கள் முய்றசி செய்ய வேண்டும்.
ஹஜ்ஜு கடமையான பிறகு ஹஜ்ஜு செய்யாமல் தவிர்ப்பது குறித்து நபி (ஸல்) அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளார்கள்
من أدركته فريضة الحج ولم يحج ومعه زاده وراحلته، ليس عليه أن يموت إن شاء يهودياً أو نصرانياً". رواه الترمذي
................................
.................................
ஒரு மனிதர் முஸ்லிமாகிற போது ,
ஜிஹாதில் ஷஹீதாகிற போது
அவர்செய்த முந்தைய பாவங்கள்அனைத்தும் மன்னிக்கப்படுகிறது.
அந்த வரிசையில் அடுத்ததாக ஹஜ்ஜும் இடம் பெற்றுள்ளது.
ஹஜ்ஜுக்கு நாளை மறுமையில் கிடைக்கிற பலன்.
قال صلى الله عليه وسلم:" الحج المبرور ليس له جزاء إلا الجنة " متفق عليه.
...............................................................
தவரான சிந்தனை.....
ஹஜ்ஜின் இந்தப் பலாபலன்கள் குறித்து செல்வந்தர்கள் அலட்சியம் காட்டக் கூடாது,
ஹஜ்ஜை ஒரு ஆடம்பர வணக்கமாக அவர் கருதக் கூடாது,
அத்தியாவசிய வணக்கம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,
ஹஜ்ஜுக்கு போய்விட்டு நம்மால் சீராக நடக்க முடியுமா என்று சிலர் யோசிக்கின்றனர்.
அந்த யோசனை அநாவசியமானது.
அல்லாஹ் நம்முடைய வாழ்வை சீராக்குவான் என்ற நம்பிக்கையில் ஹஜ்ஜு செய்தால்
நிச்சயமாக அதன் பலன் நமக்கு கிடைக்கும்.
வயதான பிறகு ஹஜ்ஜுக்கு சென்றால் போதும் என்றும் சிலர் நினைக்கின்றனர்.
இந்தஎண்னமும் தவறானது. ஹஜ்ஜு கடமையான உடன் நிறைவேற்றிவிட வேண்டும்.
தற்காலத்தில் மிகச் சிறப்பான போக்கு வரத்து வசதிகள் தங்கும் வசதிகள் கிடைத்த பிறகும் கூட ஹஜ்ஜு ஒரு சிரமாமான வணக்கமாகவே இப்போதும் இருக்கிறது,
எனவே இளமைப் பருவத்திலேயே ஹஜ் கடமையை நிறைவேற்றி விட வேண்டும்.
இன்னும் சொல்வதானால் ஹஜ்ஜு செய்வதற்கான சிறந்த பருவம் இளமைப் பருவமாகும்.
ஹஜ்ஜு செய்வது இலேசாகும் என்பதோடு ஹஜ்ஜுக்கு பிந்தைய நீண்ட காலம் நன்மைகள் நிரம்பியதாக ஆக வாய்ப்பு இருக்கிறது.
........................................................................
இளைஞர்கள் வாய்ப்புக்கிடைக்கிற போது தம் மனைவியரோடு ஹஜ்ஜுக்கு சென்று விட வேண்டும்,
ஒரு கணவன் மனைவிக்கு தருகிற அன்பளிப்புகளில் இதைவிடச் சிறப்பானது எது வும் இல்லை.
...............................................................
அது மட்டுமல்ல மனைவியும் ஹஜ்ஜு செய்வது நபியுடன் யுத்தத்தில் பங்கேறபதைப் போன்றது என மார்க்கத்தின் முன்னோடிகள் கூறியிருக்கிறார்கள்.
தாய் தந்தையரை ஹஜ்ஜுக்கு அழைத்துச் செய்வதைப் போன்ற உபகாரம் வேறெதுவும் இல்லை.
இதைப் போல் பெற்றோரின் பெருத்ததை வாங்குவதற்கான வழி வேறெதுவும் இல்லை.
.............பயம்...........
ஹஜ் விசயயத்தில் எந்த பயமும் பெருத்தமானது அல்ல.
ஹஜ்ஜில் பெரிய பயம் மரண பயம் தான்,
நபி (ஸ்ல்) அந்த பயத்தை விரட்டினார்கள்.
وعن جابر قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : "من مات في أحد الحرمين بعث آمنا يوم القيامة " .
மரணத்தை பற்றிய தயக்கம் கூட இருக்கலாகாது எனும் போது வேறு எந்த காரணமும் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு தடையாக கூடாது.
.............................
ஹஜ்ஜுக்குப் பிந்தைய வாழ்க்கை சிறப்பானதாகவே இருக்கும் .
ஹாஜி கேட்கும் துஆ வை ஹஜ்ஜில் மட்டுமல்ல ஹஜ்ஜிற்குப்பின் 100 நாட்கள் ஹாஜியின் துஆ வை அல்லாஹ் ஏற்பான் .
உம்ராவிற்கு பிறகு 40 நாட்கள் உம்ரா செய்தவரின் துஆ வை அல்லாஹ் ஏற்பான் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.
.............................
துஆக்கள் ஏற்கப்படுகிற ஒரு அற்புதமான வாய்ப்பை தாமதப்படுத்தலாமா ? தள்ளிப்போடலாமா ?
நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு சிறப்பான தருணத்தில் மரணத்தை தருவதற்கு அல்லாஹ் நினைத்தான்,
அதனால் அவர்கள் ஹஜ்ஜுக் கடமைய நிறைவேற்றி முடித்த 93 வது நாளில் அல்லாஹ் அண்ணாரை வபாத்தாக்கினான்.
.........................
எனவே ஹஜ்ஜு கடமையானவர்கள் உடனடியாக அந்தக் கடமையை நிறைவேற்றிட முயற்சி செய்ய வேண்டும். உறுதி ஏற்க வேண்டும்.
ஹாஜி அவருக்காக கேட்கிற துஆ மட்டும் ஏற்கப்படுவதில்லை, அவர் பிறருக்காக கேட்கிற துஆவும் ஏற்கப்படுகிறது.
. وجاء فيما أخرجه البزّار عنه صلى الله عليه وسلم: «إن الله يغفر للحاج ولمن استغفر له الحاج
........................................
ஹாஜி தன்னுடைய் பிழைபெறுக்கப்படுகிறது என்பதைஉறுதியாக நம்ப
வேண்டும்
குற்றங்களில் பெரியது எது தெரியுமா ? தன்னுடைய பிழை பெறுக்கப்படாது என ஒரு ஹாஜி நினைப்பது என்றார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்
أعظم الناس ذنبا من وقف بعرفة فظن إن الله لم يغفر له
அரபா மைதானத்தில் தங்கியிருந்தவர் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகிறது.
முஸ்தலிபாவில் இரவு தங்கியவர் சக அடியார்களுக்கு செய்த பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத்தர அல்லாஹ் பொறுப்பேற்ற்கு கொள்கிறான்,
இத்தகைய பெருமைமிக்க கடமை நிறைவேற்ற வசதியுள்ளவர்கள் தாமதிக்க கூடாது.
அதே நேரத்தில் வசதியற்றவர்களும் அல்லாஹ் நமக்கும் இந்த வாய்ப்பை தர வேண்டும் என்று நினைக்க வேண்டும், அதற்காக துஆ செய்ய வேண்டும்.
பனாரஸ் நகரில் பட்டு நெசவு செய்யும் இளம் பெண்கள் தமது தறி களுக்கு முன்னே உண்டியல்களை வைத்து ஹஜ்ஜுக்கு செல்வதற்கு காசு சேர்க்கிறார்கள் என்றார் பணாரஸ் மருத்துவக் கல்லூரியில் பயின்ற ஒரு மருத்துவர்.
இந்தோனேஷியாவில் மாப்பிள்ளை மணமகளின் தகுதியாக ஹஜ்ஜை பார்க்கிறார்கள்.
எனவே இத்தகைய பாக்கியமுள்ள ஹஜ் வாய்ப்பு நமக்கு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம்.
பி டி முஸ்லியாருக்கு ஒரு செல்வந்தரைக் கொடுத்த இறைவன் நம்க்கு துணை வருவதற்கு நம்முடைய் இஹ்லாசையும் ஆர்வத்தையும் தவிர வேறு என்ன வேண்டும்,
அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ்ஜுக்கு கடமையை உரிய நேரத்தில் நிறைவேற்ற தவ்பீக் செய்வானாக!
புனித மதினா......
2153 - "إن إبراهيم حرم بيت الله وأمنه
وإني حرمت المدينة ما بين لابتيها:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்தார்கள். நான் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கிறேன்.
لا يقلع عضاهها ولا يصاد صيدها". (م) عن جابر (صح). 2645.
அதன் முள்மரங்கள் வெட்டப்படக் கூடாது; அதன் வேட்டைப் பிராணிகள் வேட்டையாடப்படக் கூடாது. இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 15.ஹஜ்
ஹஜ்ஜை நிறைவேற்றுவது போல நாம் மதீனாவிற்கு செல்லவும் ஆசைப்பட வேண்டும். ‘
மதீனாவில் முஹம்மது ரஸூல் (ஸல்) அவர்கள் அடங்கியிருக்கிறார்கள். அவர்களை ஜியாரத் செய்ய வே மதீனாவிற்கு செல்கிறோம்.
من زار قبري وجبت له شفاعتي
رواهأبو داود : { ما من مسلم يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام
في الموطأ أن ابن عمر كان إذا دخل المسجد يقول : السلام عليك يا رسول الله السلام عليك يا أبا بكر السلام عليك يا أبت .
ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழாக்கள்என்ற பெயரில் சில குழ்ப்பவாதஅமைப்புக்கள் ஹஜ் கிளாஸ்கள் நடத்துகிறார்கள்.
ஒரு விருந்து கிடைக்கிறது என்றநினைப்பில் சில ஹாஜிகள் அங்குசென்று விடுகிறார்கள்.
ஹஜ்ஜை ப்பற்றி நிறைய தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் பல ஹாஜிகள்செல்கிறர்கள்.
அந்த ஹஜ் கிளாஸ்களில் மதீனாவிற்கு செல்லத் தேவையில்லை. நபி (ஸ்ல்_ அவர்களை ஜியாரத் செய்யத் தேவையில்லை என்று விவரமற்ற முஃமின்களின் உள்ளத்தில் நஞ்சை விதைக்கிறார்கள்.
மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசலில் தொழுவதற்காகவே மதீனாவிற்கு செல்கிறோம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள், ஹாஜியும் தலையசைத்து விட்டு வருகிறார்.
தொழுவதற்குத்தான் என்றால் மக்காவிலேயே தொழலாமே. ஒரு இலட்சம் நன்மையை விட்டு ஒரு அயிரம் நன்மையை தேடி ஏன் செல்ல வேண்டும் ?
எனவே தற்போது புதிதாக முளைத்திருக்கிற் இந்த ஹஜ் கிளாஸ் பேர்வழிகள் விசயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
மினாவில் சைத்தானை கல்லெறிவதற்கு முன்னதாக இங்கேயே இந்த சைத்தான்களை விட்டு விலகி விட வேண்டும் .
இவ்வளவு நன்மைகளும் சிறப்புக்களும் உள்ள அவ்விடங்களில் பாவங்கள் செய்தால் மற்ற இடங்களை விட தண்டனைகளும் அதிகம் என்பதை கவணத்தில் கொள்ள வேண்டும்
وَمَنْ يُّرِدْ فِيْهِ بِاِلْحَـادٍ بِظُلْمٍ نُّذِقْهُ مِنْ عَذَابٍ اَ لِيْمٍ
மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம்.
(அல்குர்ஆன் : 22:25)
அல்லாஹ் இந்த ஆண்டு ஹஜ் பயணம் செய்கிற அனைத்து ஹாஜிகளின் ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்ற்று கொள்வானாக! அவர்களது பயணத்தை இலேச்சாகி வைப்பானாக! இந்த ஆண்டு ஹஜ்ஜை பாதுகாப்பானதாக ஆக்கிவைப்பானாக! இந்த ஆண்டு வாய்ப்புக்கிடைக்காதவர்களுக்கு இனி வரும் ஆண்டுகளில் வாய்ப்பளிப்பானாக!
Comments
Post a Comment