பராஅத் இரவின் மகத்துவம்..
பராஅத்தின் மகத்துவம்..
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا
“அவனே மரணத்தையும், வாழ்வையும் ஏற்படுத்தினான்; உங்களில் யார் மிகச்சிறந்த செயல் புரியக்கூடியவர் என்றுஉங்களைச் சோதிக்கு ம்பொருட்டு!”
அல்லாஹ்வின் மகத்தான கருனையால்
ஒரு கண்ணியமான
இரவை சந்தித்து இருக்கிறோம்.
இந்த மாதமும் சரி,
இந்த இரவும் சரி அல்லாஹ்விடம் மகத்தான அந்தஸ்து பெற்றதாகும்.
மாதங்களில் ரமலானுக்குப்பின்னால் மிகவும் பாக்கியங்களையும் பயனையும் கொண்ட மாதம் ஷஃபான் மாதமாகும்.
இதைப்பற்றி நபி ஸல் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.
மற்ற மாதங்களுடன் ரஜபுக்கு இருக்கும் மரியாதை
மற்றவேதங்களுடன் குர்ஆனுக்கு இருக்கும் மரியாதையை போலவாகும்.
...................................................
மற்ற மாதங்களுடன் ஷஃபானுக்கு இருக்கும் மரியாதை ...
மற்றநபிமார்களுடன் எனக்கு இருக்கும் மரியாதையை போலவாகும்.
..............................................................
மற்ற மாதங்களுக்கும் ரமலானுக்கு உள்ள மரியாதை
மற்ற படைப்புக்களுடன் அல்லாஹ்வுக்கு இருக்கும் மரியாதையை போலவாகும்.
....................................................................
ஆரிபீன்களான் ஞானவான்கள் ஷஃபான் மாதம் தன்னுள் பொதிந்துள்ள பாக்கியங்களை பற்றி இப்படி கூறுகிறார்கள்.
ஷஃபான் ஐந்து பாக்கியங்களை தன்னுள் சுமந்து வருகிறது.
Honour கவுரவம் -شرافة
Superior உயர்வு ع-علو
நன்மை. Goodness -بر
இனக்கம் ا-الفة
பிரகாசம் ن-نور
ஆனால் இந்த மாதத்தின் கண்ணியம் குறித்து மக்களிடம் அவ்வளவு விழிப்புணச்சி இல்லை என்பதே உண்மையாகும்.
كان عمارُ - رضي الله عنه - يتهيَّأ لصوم شعبان كما يتهيَّأ لصومِ رمضانَ".
அம்மார் ரலி அவர்கள் ரமலானுக்கு தயார் ஆகுவதைப்போல ஷஃபானுக்கு தயார் ஆகுவார்கள்.
شهرُ رجب هو شهرُ الزرع، وشهرُ شعبان هو شهرُ سَقْي الزرع، وشهرُ رمضان هو شهْرُ حَصادِ الزرع،
ரஜப் விதை தூவும் மாதம்.ஷஃபான் நீர் பாய்ச்சும் மாதம்.ரமலான் அறுவடை காலம் என்று ஞானிகள் சொல்வார்கள்
இம்மாதத்தின் பதினைந்தாம் இரவு “பராஅத்” இரவு “நிஸ்பு ஷஃபான்” என்றழைக்கப்படுகின்றது.
இந்த மாதத்தின் பதினைந்தாம் நாள்இரவுக்கு பல்வேறு சிறப்புக்கள் இருப்பதை குர்ஆன் மற்றும் ஸுன்னாவின்மூலமாக
இந்தஉம்மத்தின்மேன்மக்களான ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள் மற்றும் அறிஞர் பெருமக்கள்உறுதிபடுத்தி இருக்கின்றார்கள்.
குர்ஆன், ஸுன்னாவை குறுகிய கண்ணோட்டத்தோடும்,
மழுங்கிய புத்தியோடும்பார்த்துப்பழகிய சில குறுமதியாளர் கூட்டங்கள்தாங்கள் விலகி இருப்பதோடு மாத்திரமல்லாமல்இந்த உம்மத்தின்பருந்திரளானவர்களிடையேயும்இது குறித்த சந்தேகங்களையும், புரளிகளையும் சமீப காலமாக ஏற்படுத்திவருகின்றனர்.
இந்த இரவில்தான் விதி முடிவுசெய்யப்பட்டு வானவர்களிடம்ஒப்படைக்கப்படுகின்றது.
இந்த இரவில்தான் வரும் ஓராண்டில்வாங்கப்பட வேண்டிய ரூஹ்களின்பட்டியல் மலக்குல் மவ்த்திடம்ஒப்படைக்கப் படுகின்றது.
இந்த இரவில்தான் அல்லாஹ்முதலாம்வானத்திற்கு வருகை புரிந்து வாழ்வாதாரத்திற்காக, உடல்ஆரோக்கியத்திற்காக, பாவமன்னிப்பிற்காக துஆ செய்பவர்கள் யாரும் உண்டா? எனக் கேட்கின்றான்.
இந்த இரவில்தான் பொதுமையவாடிக்குச்சென்று மண்ணறைவாசிகளுக்குமாநபி {ஸல்} பிரத்யேகமானதுஆக்களைச்செய்தார்கள்.
இந்த நாளின்இரவில் நின்றுவணக்கம்புரிவதும், பகலில்நோன்புநோற்பதும் இறைவனுக்குமிகஉகந்த செயலாகும்
எனஹதீஸில்வந்துள்ளது.
இவ்விரவின் பிற்பகுதியில் “அல்லாஹ்” தனது அடியார்களுக்கு “தஜல்லீ” வெளியாக்கி பாவமன்னிப்புக் கேட்பவர்களின் பாவங்களை மன்னிக்கின்றான்.
அருளை வேண்டுபவர்களுக்கு அருள் செய்கிறான்.
அவனை அழைப்பவர்களுக்கு பதில் கூறுகிறான்.
- கேட்டதை கொடுக்கின்றான
துன்பத்தில் துவண்டு போனவர்களின் துன்பம் களைகின்றான்,
இன்னல்களில் சிக்குண்டவர்களின் இன்னல்களை நீக்கியருள்கிறான்.
நரகிலிருந்து பலருக்கு விடுதலை வழங்குகின்றான்,
அடியார்களின் விதிகளை நிர்ணயிக்கின்றான்
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள் :
(என்னிடம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து இன்றிரவு “ஷஃபான்” மாதத்தின் பதினைந்தாம் இரவாகும். “பனூகல்ப்” கூட்டத்தவர்களின் ஆடுகளில் உள்ள முடிகளின் எண்ணிக்கையளவு நரகத்திலுள்ள பலரை அல்லாஹ் விடுதலை செய்கிறான்.
எனினும் இணைவைத்து வணங்குகின்ற “முஷ்ரிக்”,
குழப்பத்தை ஏற்படுத்துகின்ற “முனாபிக்” நயவஞ்சகன்,
உறவினரைத் துண்டித்து நடப்பவன்,
வேஸ்டி அல்லது “டவ்ஷர்” போன்றவற்றை கரண்டைக்காலின் கீழ் உடுத்துபவன்
, பெற்றோரைத் துன்புறுத்துகின்றவன்,
தொடர்ந்து மது அருந்துகின்றவன். முதலானவர்களை அல்லாஹ் பார்க்கவே மாட்டான்)மண்ணிக்கவும் மாட்டான் என்று.
அறிவிப்பு : ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள்
ஆதாரம்- பைஹகீ
இந்த இரவில் “நப்ல் முத்லக்” பொதுவான “ஸுன்னத்” அதிகமாகத் தொழுதல், “திக்ர்” செய்தல், திருக்குர்ஆன் ஓதுதல், “ஸலவாத்” சொல்லுதல், தானதர்மம் செய்தல்,
பாவமன்னிப்புக் கேட்டல், உறவினர்களைச் சந்தித்தல்
“மக்பறா” மையவாடிக்குச் சென்று மரணித்தவர்களின் ஆத்மசாந்திக்காக “துஆ” கேட்டல்,
ரொட்டி சுட்டு ஏழைகளுக்கு கொடுத்தல்,வலிமார்களின் அடகஸ் தளங்களுக்கு சென்று அவர்களை “ஸியாறத்” தரிசித்தல் என்பன அல்லாஹ்வுக்கு விருப்பமானவையாகும்.
“பராஅத்” தொடர்பாக வந்துள்ள நபீமொழிகளிற் சில “ழயீப்” பலம் குறைந்தவையாக இருந்தாலும் கூட அவை கொண்டு அமல் செய்தல் எந்த வகையிலும் பிழையாகமாட்டாது.
“ழயீப்” பலம் குறைந்த நபீமொழிகள் கொண்டு “அமல்” செய்வது தொடர்பாக அது ஆகுமென்று உலகில் தோன்றிய அறிஞர்களில் சரியானவர்கள் என்று கருதப்படுகின்ற
இமாம் நவவீ றஹ்மதுல்லாஹி அலைஹி,
இமாம்இப்னு ஹஜர் றஹ்மதுல்லாஹி அலைஹி,
இமாம்றமலீ றஹ்மதுல்லாஹி அலைஹி,
இமாம்அஹ்மத் இப்னு ஹம்பல் றஹ்மதுல்லாஹி அலைஹி,
இமாம் இப்னுல் முபாறக் றஹ்மதுல்லாஹி அலைஹி,
இமாம்இஸ்ஸுப்னு அப்திஸ் ஸலாம் ஆகியோர் கூறியுள்ளார்கள்.
எனவே கண்ணியம்வாய்ந்த பெருமக்ளேக உலகில் தோன்றிய ஆயிரத்தி நானூறு ஆண்டுகாலம் வாழ்ந்த மேதைகளின் - இமாம்களின் - புகஹாஉகளின் - சட்டவல்லுனர்களின் - அவ்லியாக்களின் - “தரீகா” உடைய ஷெய்குமார்களின் கருத்துக்களை ஏற்றுச் செயற்படுவதா?
அல்லது இன்று இரண்டு தலைமுறைகளை கூட சரியாக பூர்த்தி செய்யாத பணத்திற்காக மார்க்கதை கூறு போடும் கொள்கை உடைய வழித்தோன்றல்களின் கருத்துக்களை ஏற்று செயல்படுவதா?
என்பதை நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.
ரமலானுக்க அடுத்தபடியாக ஷஃபானில் அதிகமாக நபி ஸல் அவர்கள் நோன்பு நோற்றதாக ஹதீஸ்களில் காண முடிகிறது.
عن أسامة بن زيد - رضيَ الله عنهما - أنَّه سأل النَّبيَّ - صَلَّى الله عليه وسَلَّم - فقال: يا رسول الله، لم أركَ تصوم شهرًا منَ الشهور ما تصوم في شعبان، فقال - صَلَّى الله عليه وسَلَّم -:((ذلك شهر يغفل عنه الناس بين رجب ورمضان، وهو شهر ترفع فيه الأعمال إلى الله - تعالى - فأحب أن يُرْفعَ عملي وأنا صائم
ஏன் அதிகமாக ஷஃபானில் நோன்பு வைக்கிறீர்கள் என நபி ஸல் அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதற்கு பதில் சொன்ன நபி ஸல் அவர்கள் மூன்று காரணத்தை சொன்னார்கள்.
1.ரஜபுக்கும் ரமலானுக்கும் இடையில் வரும் இந்த மாதம் பற்றி மக்களிடம் சரியான விழிப்புணர்வு இல்லை.
இது அல்லாஹ்விடம் எத்துனை மகத்துவம் வாய்ந்த்து என்பதை மக்கள் விளங்கவில்லை.
மக்கள் கவனமின்றி பொடுபோக்காக இருக்கும் நாட்களில் கவனத்துடன் நாம் செய்யும் அமலுக்கு அல்லாஹ்விடம் அதிகமான அங்கீகாரம் உண்டு.
.......................................................................
சுவனத்தில் உங்களின் காலடி சப்தம் கேட்டேனே பிலால்!
அப்படி என்ன அமல் செய்தீர்கள் என நபி ஸல் அவர்கள் பிலால் ரலி அவர்களிடம் கேட்டபோது ...
நான் தஹிய்யதுல் ஒழுவில்(அதாவது ஒழுவின் காணிக்கை இரண்டு இரக்கஅத்) அதிக கவனத்துடன் ஈடுபட்டுவந்தேன் என்றார்கள்.
......................................................................
كان في بعض السلف، يستحبون إحياء ما بين العشائين - المغرب والعشاء - ويقولون هي ساعة غفلة
மஃரிபுக்கும் இஷாவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் இபாதத்தில் ஈடுபடுவதை ஸலப்கள் வழமையாக வைத்துள்ளார்கள்.அதற்கான காரணம் கேட்டபோது அது மக்கள் கவனமின்றி இருக்கும் நேரம் என்பார்கள்
وهو شهر ترفع فيه الأعمال إلى الله - تعالى
2.இந்த மாதத்தில் தான் மனிதர்களின் அமல்கள் அல்லாஹ்விடம் உயர்த்தப்படுகிறது.
فأحب أن يُرْفعَ عملي وأنا صائم
3.என் அமல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படும்போது நான் நோன்பாளியாக இருக்க விரும்புகிறேன் என்றார்கள்.
عن علي بن أبي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلي فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر
பராஅத் இரவில் நின்று வணக்கம் செய்யுங்கள் அதன் பகலில் நோன்பு வையுங்கள்,ஏனெனில் அன்றைய இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வந்து
1.என்னிடம் மன்னிப்பு தேடுபவர் உண்டா?
கேளுங்கள்மன்னிக்கிறேன்
2.என்னிடன் இரணம் வேண்டுபவர் உண்டா?
வேண்டுங்கள்வழங்குகிறேன்
3.நோயில் சிக்கியவர் உண்டா?நிவாரணம் அளிக்கிறேன்.
இவ்வாறுபஜ்ர் வரை அல்லாஹ் கூறுவதாக அலி ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
عَنْ عَائِشَةَ قَالَتْ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ
“அல்லாஹ் பராஅத் இரவில் முதல் வானத்தில் இறங்கி அடியார்களுடைய பாவங்களை கலபு கோத்திரத்தாரின் ஆடுகளுக்கு இருக்கும் அடர்ந்த ரோமங்களின் அளவு மன்னிக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறார்கள்.
திர்மிதி:670
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُكُمْ الْآخِرَة
கப்ர்களை ஜியாரத் செய்யுங்கள்! நிச்சயமாக அது உங்களுக்கு மறுமையை நினைவூட்டும் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னுமாஜா:1558
இந்த நாளின் இரவில் நின்று வணக்கம்புரிவதும், பகலில்நோன்புநோற்பதும் இறைவனுக்கு மிகஉகந்த செயலாகும் என ஹதீஸில்வந்துள்ளது.
மாநபி {ஸல்} அவர்கள் இந்த உம்மத்தின்அலட்சியம் குறித்து கவலைகொள்வதோடு, தாம் நபியாகஇருந்தும் அல்லாஹ்வின் திருமுன்அமல்கள்சமர்ப்பிக்கப்படுவதைபயப்படவதையும், அதற்காக விழிப்புணர்வோடு செயல்படுவதையும்இந்த உம்மத்திற்கு உணர்த்துகின்றார்கள்.
காரணம் இந்தமாதத்தின் இன்றைய பராஅத்இரவில் தான்அல்லாஹ்வின் திருமுன் மனிதசமுதாயத்தின் ஒவ்வொருவரும்ஓராண்டில் செய்த அத்துணை அமல்களும் சமர்ப்பிக்கப்படுகின்றன.
எவ்வளவு கனமான, பாரமான விஷயம், அல்லாஹ் நம் ஏடுகளை பார்க்கும்போது நம்முடைய செயல்களால் நம் மீதுஅதிருப்தி அடைந்து விட்டால் பின்னர் நம்நிலைமை என்னவாகும் என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அலட்சியமும்… ஆபத்தும்….
அலட்சியம் அதுஇறை நம்பிக்கையாளர்களின் ஈருலகவாழ்க்கையிலும் ஆபத்தை விளைவிக்கிற காரணிகளில்பிரதானமான ஒன்றாக இருப்பதாக குர்ஆன் எச்சரிக்கின்றது.
ஆம்! நரகமும், அதன் வேதனையும்
யாருக்கானது என்பதை அல்லாஹ்
அறிமுகம் செய்கிற போது “அது
அலட்சியம் செய்பவர்களுக்கானது” என்றே கூறுகின்றான்.
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ ()
“ஜின் மற்றும் மனிதவர்க்கத்தில்
பெரும்பாலோரை நரகத்திற்காகவே
நாம் படைத்திருக்கின்றோம்.
அவர்களுக்கு இதயங்கள்
இருக்கின்றன; ஆயினும் அவற்றால்
அவர்கள் சிந்தித்துணர்வதில்லை.
அவர்களுக்கு கண்கள்
இருக்கின்றன; ஆயினும் அவற்றைக்கொண்டு எதைப்பார்க்கவேண்டுமோ அவற்றை அவர்கள் பார்ப்பதில்லை.
அவர்களுக்கு செவிகள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் நல்லவைகளைக் கேட்பதில்லை. இவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள்;
ஏன்அவற்றை விடவும்அவர்கள்
கேடானவர்கள்! அவர்கள்தாம்
அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள்”. ( அல்குர்ஆன்: 7: 179 )
அல்லாஹ்வை பொறுத்தமட்டில் அவன்எப்போதும் அலட்சியமாக
இருப்பதில்லை. அலட்சியமாக
இருப்பவர்களை அவன் ஒரு போதும்
விட்டு வைப்பதும் இல்லை.
وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ ()
“பாவம் செய்கிற அநியாயக்காரர்கள் அல்லாஹ் அலட்சியமாக இருக்கின்றான் என்று எண்ணிக்கொள்ள
வேண்டாம்.
அவன் தாமதப்படுத்துவதெல்லாம்
பார்வைகள் நிலைகுத்தி நிற்கும்
மகத்தானஒரு(மறுமை) நாளுக்காகத்தான்”
( அல்குர்ஆன்: 14: 42 )
இன்று தொழலாம், நாளை தொழலாம், இந்தவாரம் ஏழைக்கு உணவளிக்கலாம், அடுத்தவாரம் உணவளிக்கலாம்,
இப்ப என்ன அவசரம் மார்க்கத்தின்
கடமைகளை காலம் கனிகிறபோது
செய்து கொள்ளலாம், என்று
இழுத்தடித்து மௌத்வரும் வரை
செய்யாமல் அலட்சியமாக
இருந்தவர்களை “ஸகர்” எனும் கொடிய நரகத்தில்
அல்லாஹ் வீழ்த்துவான் என குர்ஆன்
எச்சரிக்கின்றது.
فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ () عَنِ الْمُجْرِمِينَ () مَا سَلَكَكُمْ فِي سَقَرَ () قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ () وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ () وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ () وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ () حَتَّى أَتَانَا الْيَقِينُ
“சுவனத்தில் வீற்றிருப்பவர்கள்
குற்றவாளிகளிடம் கேட்பார்கள்
“உங்களை இந்த கொடிய
ஸகருக்கு கொண்டு வந்தது எது?
என்று.அதற்கு, அவர்கள்
“தொழக்கூடியவர்களாக, ஏழைக்கு
உணவளிக்கக் கூடியவர்களாக
நாங்கள் இருக்கவில்லை. மேலும்,
சத்தியத்திற்கெதிரான
பேச்சுக்களை
பேசுபவர்களோடு
நாங்களும் இணைந்திருந்தோம்.
மேலும், கூலி கொடுக்கப்படும்
மகத்தான இந்நாளையும்
நாங்கள் பொய்யென
உரைத்து வந்தோம்.
அந்த உறுதியான மரணம் எங்களைச்
சந்திக்கும்வரை” என்று கூறுவார்கள்.
( அல்குர்ஆன்: 74: 40 – 47 )
ஆகவே, அலட்சியம்எவ்வளவு மாபெரும்ஆபத்தானதுஎன்பதை நாம்விளங்கிக்கொள்ள இது போதுமானதாகும்.
ஆகவே, நம்செயல்பாடுகளை, அனுதினமும் சரிசெய்திட, அழகுபடுத்திக் கொள்ளபழகிக்கொள்ளவேண்டும்.
செயல்பதிவேடுகள் எதற்காக?....
வானம், பூமிமற்றும் அனைத்து
வஸ்துக்களின் மீதும் சர்வ
வல்லமைபடைத்த அல்லாஹ்
ரப்புல்ஆலமீன் அனைத்தையும்
அறிந்து வைத்திருக்கும் போது
எதற்காக மனிதர்களின் செயல்களை
பதிவுசெய்ய வேண்டும்?
ஏன்அதைதினமும் இருமுறையும்,
வாரம் இருமுறையும், ஆண்டிற்கு ஒரு
முறையும் பார்வையிட வேண்டும்?
என்று நமக்குவியப்பும், கேள்வியும்
எழலாம்.
இதோ… அதற்கானபதில்…
அல்லாஹ் மறுமையில் மரணமே
இல்லாத ஓர்வாழ்வை அமைத்து
வைத்திருக்கின்றான். அந்த
வாழ்வானது ஒன்று இன்பங்களும்,
உல்லாசமும் நிறைந்த
இனிய சுவனத்தில் இருக்கும்.
அல்லது துன்பங்களும் கொடிய
வேதனைகளும் நிறைந்த நரகத்தில்
இருக்கும்.
அல்லாஹ் மனிதசமூகத்தின் உலகவாழ்வைமறுமையின் நிரந்தரமானஇவ்விரண்டுவாழ்விற்கானபரிசோதனைத்தளமாகவேஅமைத்துள்ளான்.
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا
“அவனே மரணத்தையும், வாழ்வையும்ஏற்படுத்தினான்; உங்களில்யார் மிகச்சிறந்தசெயல் புரியக்கூடியவர்என்றுஉங்களைச் சோதிக்கும்பொருட்டு!”
( அல்குர்ஆன்: 67: 2 )
உலக வாழ்வில் அழகிய மிகச்சிறந்த
செயல்களைச் செய்தவர்களை இனிய
சுவனத்திற்கும், மோசமான, தீய
செயல்களைச் செய்தவர்களை
கொடிய நரகிற்கும் நிரந்தமாக வாழ
அல்லாஹ் அனுப்புவான்.
ஏன் நான் சுவனத்திற்கு வந்தேன்?
என்று சுவனம் செல்பவர் தெரிந்து
கொள்வதற்காகவும், ஏன் நான்
நரகத்திற்கு வந்தேன்? என்றுநரகில் புகுந்தவர் தெரிந்து
கொள்வதற்காகவும்
வேண்டி அல்லாஹ்
செய்த மகத்தான ஏற்பாடு தான் இந்தசெயல் பதிவேடாகும்.
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ () إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ () فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ () فِي جَنَّةٍ عَالِيَةٍ () قُطُوفُهَا دَانِيَةٌ () كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ ()
“அன்று தன் வலக்கரத்தில் யாருக்குச் செயல்பதிவேடு
தரப்படுகின்றதோ, அவர் கூறுவார்: “இதோ பாருங்கள்! என்செயல் பதிவேட்டைப் படியுங்கள்! நிச்சயம் என்னுடைய கணக்கை நான் சந்திப்பேன் என்றுநான்எண்ணியேயிருந்தேன்! இத்தகையவர்
மனதிற்கு கந்தவாழ்க்கையில், பழக்குலைகள் தாழ்ந்துதொங்கிக்கொண்டிருக்கும்உன்னதமானசுவனத்தில் வீற்றிருப்பார்.
அவர்களிடம் கூறப்படும்”சுவையாகஉண்ணுங்கள்! பருகுங்கள்! கடந்துசென்ற நாட்களில்நீங்கள் புரிந்தமிகச்சிறந்த செயல்களுக்குப் பகரமாக”
( அல்குர்ஆன்: 69: 19 – 24 )
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ () وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ () يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ () مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ () هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ () خُذُوهُ فَغُلُّوهُ () ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ () ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ ()
“மேலும், தன்னுடையஇடக்கரத்தில்செயல்பதிவேடு வழங்கப்படுபவர்கூறுவார்: “அந்தோ! என்னுடையசெயல்பதிவேடு எனக்குத்தரப்படாமல்இருந்திருக்கக் கூடாதா? அந்தோ! உலகத்தில் ஏற்பட்டஅந்த மரணமேஇறுதியானதாய்இருக்கக்கூடாதா? இன்று என்னுடையசெல்வம் எனக்குபயன்அளிக்கவில்லையே? என்னுடையஅதிகாரம்அனைத்தும் செயலிழந்துபோய்விட்டதே?! இத்தகையவனைநோக்கிஆணை பிறப்பிக்கப்படும்! “பிடியுங்கள்இவனை! இவனுடையகழுத்தில்விலங்கை மாட்டுங்கள்! பிறகுஇவனை எழுபது முழம்நீளமுள்ளசங்கிலியால் பிணையுங்கள்! பின்னர்இவனை நரகத்தில்வீசி எறியுங்கள்!”
( அல்குர்ஆன்: 69: 25 – 32 )
செயல்பதிவேடும்… பாவிகளின்நிலையும்…
وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا ()
“மேலும், செயல்பதிவேடு முன்னால்வைக்கப்பட்டுவிடும். ( நபியே ) அவ்வேளையில்நீர் பார்ப்பீர்! அந்நாளில்குற்றம் புரிந்தோர்தமதுசெயல் பதிவேட்டில்உள்ளவற்றைநினைத்து அஞ்சிக்கொண்டிருப்பார்கள். மேலும், அவர்கள் “அந்தோ! எங்கள் துர்பாக்யமே! இதுஎன்ன பதிவேடு! எங்கள்செயல்களில் சிறிதோ, பெரிதோஎதையும் பதியாமல்விட்டுவைக்கவில்லையே! என்றுபுலம்புவார்கள்.
தாங்கள் செய்தவைஅனைத்தும் தம்முன்னால்இருப்பதை அவர்கள்காண்பார்கள்”. ( அல்குர்ஆன்: 18: 49 )
وكُلَّ إِنْسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا () اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا ()
“மேலும், ஒவ்வொரு மனிதனின்சகுனத்தையும்நாம் அவனதுகழுத்திலேயேமாட்டிவிட்டிருக்கின்றோம். மேலும், மறுமை நாளில், செயல்பதிவேட்டை அவனுக்காகவெளிப்படுத்துவோம். அதனை அவன்திறந்தபுத்தகத்தைப் போன்றுகாண்பான்.
படித்துப்பார், உன்னுடையஇந்தசெயல்பதிவேட்டை! இன்றுஉன்னுடையகணக்கைப் பரிசீலிக்கநீயேபோதுமானவன்” என்றுசொல்லப்படும்.
( அல்குர்ஆன்: 17: 13, 14 )
இந்த செயல்பதிவேடு என்பதுஅல்லாஹ்வால்நியமிக்கப்பட்டிருக்கிறஇருவானவர்களால் எழுதப்படுகின்றது.
إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ () مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
“இரு எழுத்தர்கள்அவனுடையவலப்புறமும், இடப்புறமும்அமர்ந்துஒவ்வொன்றையும் பதிவுசெய்துகொண்டிருக்கின்றார்கள். எந்தச்சொல்லையும் அவன்சொல்வதில்லை, அதனைப் பதிவுசெய்வதற்குத்தயாராக உள்ளஒருகண்காணிப்பாளர் அவனிடத்தில்இல்லாதநிலையில்”. ( அல்குர்ஆன்: 50: 17, 18 )
عَنْ أَبِي مُوسَى الأشعري رضي الله عنه قَالَ : قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخَمْسِ كَلِمَاتٍ فَقَالَ
إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لا يَنَامُ ، وَلا يَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ ، يَخْفِضُ الْقِسْطَ وَيَرْفَعُهُ ، يُرْفَعُ إِلَيْهِ عَمَلُ اللَّيْلِ قَبْلَ عَمَلِ النَّهَارِ، وَعَمَلُ النَّهَارِ قَبْلَ عَمَلِ اللَّيْلِ
எழுதப்படுகின்ற இந்தசெயல்பதிவேடுஅன்றாடம் காலை, மாலை இருவேளைகளில்அல்லாஹ்விடம்சமர்ப்பிக்கப்படுகின்றது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( تُعْرَضُ أَعْمَالُ النَّاسِ فِي كُلِّ جُمُعَةٍ مَرَّتَيْنِ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ مُؤْمِنٍ إِلا عَبْدًا بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ فَيُقَالُ : اتْرُكُوا هَذَيْنِ حَتَّى يَفِيئَا
போதாக்குறைக்கு வாரத்தில்திங்கள்மற்றும் வியாழன்ஆகிய இருதினங்கள்அல்லாஹ்வின் திருமுன்சமர்ப்பிக்கப்படுகின்றது.
இதுவெல்லாம் தாண்டிஆண்டுக்கு ஒருமுறைபராஅத் இரவிலும்அல்லாஹ்வின்திருமுன் இந்தச்செயல்பதிவேடுசமர்ப்பிக்கப்படுகின்றது.
எனவே, நாம்நம்முடையசெயல்பாடுகளை செதுக்கவேண்டும், மிகச் சிறந்தசெயல்களையே செய்யவேண்டும்.
1. அழகியஎண்ணம்அதுசெயலையும், செயல்பதிவேட்டையும்அழகுபடுத்தும்…
عمر بن الخطاب رضي الله عنه ، قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول
إنما الأعمال بالنيّات
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள் “திண்ணமாகசெயல்களெல்லாம்எண்ணங்களைப்பொறுத்தேஅமைகின்றன”. ( நூல்: புகாரி )
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ عَنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِذَا تَحَدَّثَ عَبْدِي بِأَنْ يَعْمَلَ حَسَنَةً فَأَنَا أَكْتُبُهَا لَهُ حَسَنَةً مَا لَمْ يَعْمَلْ فَإِذَا عَمِلَهَا فَأَنَا أَكْتُبُهَا بِعَشْرِ أَمْثَالِهَا وَإِذَا تَحَدَّثَ بِأَنْ يَعْمَلَ سَيِّئَةً فَأَنَا أَغْفِرُهَا لَهُ مَا لَمْ يَعْمَلْهَا فَإِذَا عَمِلَهَا فَأَنَا أَكْتُبُهَا لَهُ بِمِثْلِهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ الْمَلَائِكَةُ رَبِّ ذَاكَ عَبْدُكَ يُرِيدُ أَنْ يَعْمَلَ سَيِّئَةً وَهُوَ أَبْصَرُ بِهِ فَقَالَ ارْقُبُوهُ فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِمِثْلِهَا وَإِنْ تَرَكَهَا فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً إِنَّمَا تَرَكَهَا مِنْ جَرَّايَ
அல்லாஹ் கூறியதாக மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ என் அடியான் ஒரு நல்ல செயலை செய்ய மனதினில் எண்ணி விட்டால் அவன் செய்யாத போதும் அதற்காக நான் அவனுக்கு ஒரு நன்மையை எழுதுகின்றேன். அவன் அதைச் செய்து விட்டால் பத்து நன்மைகளை அவனுக்கு நான் எழுதுகின்றேன்.
அதே போன்று, ஓர் அடியான் தீய செயலை செய்ய மனதில் எண்ணி, அவன் செய்யவில்லை என்றால் அவனை நான் மன்னித்து விடுகின்றேன். அவன் செய்து விட்டால் ஒரு தீமையை மட்டுமே எழுதுகின்றேன்.
இதைச் சொல்லிய அண்ணலார் தொடர்ந்து கூறினார்கள்: “தீய செயலை செய்ய நாடிய அடியான் அந்தச் செயலை செய்ய சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்தால், வானவர்கள் அல்லாஹ்விடம் “அல்லாஹ்வே! இதோ இந்த அடியான் இன்ன தீய செயலைச் செய்ய தீவிரமாக சந்தர்ப்பத்தை தேடிக்கொண்டிருக்கின்றான்” என்பார்களாம்.
அப்படியானால், அவனைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருங்கள்! கிடைத்த சந்தர்பத்தில் அவன் அந்த தீய செயலை செய்து விட்டால் அவனுக்கு ஒரு தீமையை எழுதுங்கள். அவன் விட்டு விட்டால் ஒரு நன்மையை எழுதுங்கள்! என்று அல்லாஹ் சொல்கின்றான்.
ஒரு ரிவாயத்தில்… வானவர்கள் ”அல்லாஹ்வே! அவன் மனதில் அதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருந்ததே! ஏதோ அவன் அதைச் செய்யாமல் விட்டு விட்டான் அதற்காக ஒரு நன்மையை எழுத வேண்டுமா? என்று கேட்பார்கள்.
அதற்கு, அல்லாஹ் “என் மீதான பயம் தான் அந்த தீயச் செயலில் ஈடுபடுவதில் இருந்து அவனைத் தடுத்தது. அதற்காகத் தான் அவனுக்கு நன்மையை எழுதச் சொன்னேன்” என்று கூறுவான். ( நூல்: தாரகுத்னீ, அஹ்மத் )
2. நன்மையான செயல்கள்செய்வதின் மீது ஆர்வம்இருக்கவேண்டும்…
عن أبي أمامة قال: قال رسول الله -صلى الله عليه وسلم: "أيكم أصبح اليوم صائما؟ " قال: فسكت القوم فقال أبو بكر: أنا يا رسول الله, ثم قال: "أيكم تصدق اليوم على مسكين؟ " قال: فسكت القوم فقال أبو بكر: أنا يا رسول الله فقال: "أيكم شيع اليوم جنازة؟ " فسكت القوم فقال أبو بكر: أنا يا رسول الله, وفي أخرى: "أيكم عاد اليوم مريضًا؟ " قال أبو بكر: أنا فضحك رسول الله -صلى الله عليه وسلم- فقال: "والذي بعثني بالحق, ما جمعهن رجل في اليوم إلا دخل الجنة" خرجه الملاء في سيرته.
அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நபி {ஸல்} அவர்கள் எங்களிடம், “இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் (ரலி) நான் என்று பதில் கூறினார்கள்.
இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் (ரலி) நான் என்று பதில் கூறினார்கள்.
இன்றைய தினம் ஓர் உங்களில் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் (ரலி) நான் என்று பதில் கூறினார்கள்.
இன்றைய தினம் உங்களில் ஒரு நோயாளியைச் சந்தித்து நலம் விசாரித்தவர் யார்?” என்று வினவ, அபூபக்ர் (ரலி) நான் என்று பதில் கூறினார்கள்.
அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், சிரித்தவர்களாக “என்னை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய அந்த இறைவனின் மீதாணையாக! எந்த மனிதர் நல்லறங்களான இவையனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்றார்கள். ( நூல்: முஸ்லிம் )
3. பேணுதலான வாழ்வை மேற்கொள்ள வேண்டும்….
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اسْتَحْيُوا مِنْ اللَّهِ حَقَّ الْحَيَاءِ، قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نَسْتَحْيِي وَالْحَمْدُ لِلَّهِ، قَالَ لَيْسَ ذَاكَ، وَلَكِنَّ الاسْتِحْيَاءَ مِنْ اللَّهِ حَقَّ الْحَيَاءِ: أَنْ تَحْفَظَ الرَّأْسَ وَمَا وَعَى، وَالْبَطْنَ وَمَا حَوَى، وَلْتَذْكُرْ الْمَوْتَ وَالْبِلَى وَمَنْ أَرَادَ الآخِرَةَ تَرَكَ زِينَةَ الدُّنْيَا فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ اسْتَحْيَا مِنْ اللَّهِ حَقَّ الْحَيَاءِ
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்விடத்தில் எப்படி வெட்கப்பட வேண்டுமோ அப்படி வெட்கப்படுங்கள்! என நபி {ஸல்} அவர்கள் எங்களிடம் கூறிய போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களே! அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! நாங்கள் வெட்கப்படத்தானே செய்கின்றோம்!” என்று கூறினோம்.
அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்”நீங்கள் சொல்வது போன்று அல்ல, நான் சொல்கிற வெட்கம் என்பது! “அல்லாஹ்விடத்தில் எப்படி வெட்கப்பட வேண்டுமோ அப்படி வெட்கப்படுங்கள்! என்றால் நீங்கள் தலையையும், அதைச் சுற்றியுள்ள இதர உறுப்புக்களையும் ( அல்லாஹ் தடுத்திருக்கிற, தேவையற்ற காரியங்களில் ஈடுபடுத்துவதிலிருந்து ) பாதுகாப்பதாகும்.
வயிற்றையும், வயிற்றுக்கு மேலும் வயிற்றுக்கு கீழும் இருக்கிற உறுப்புக்கள் அனைத்தையும் ( அல்லாஹ் தடுத்திருக்கிற, தேவையற்ற காரியங்களில் ஈடுபடுத்துவதிலிருந்து) பாதுகாப்பதாகும்.
மேலும், மரணத்தையும், மண்ணறை வாழ்வையும் நினைவு கூர்வதும், மறுமை வாழ்விற்காக இவ்வுலக மோகத்தை விட்டு விடுவதும் தான்” என்று பொருள் ஆகும்.
மேலும், எவர் மேற்கூறிய அம்சங்களை சரிவரச் செய்கின்றாரோ அவர் “அல்லாஹ்விடத்தில் எப்படி வெட்கப்பட வேண்டுமோ அப்படி வெட்கப்பட்டு விட்டார்” என மாநபி{ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ)
4. அல்லாஹ்வின் கட்டளைகளை சரியாகப் பேண வேண்டும்…
حدثنا أبو كامل، مظفر بن مدرك حدثنا إبراهيم بن سعد، حدثنا ابن شهاب، عن أبي الطفيل، عامر بن واثلة أن رجلا، مر على قوم فسلم عليهم فردوا عليه السلام فلما جاوزهم قال رجل منهم والله إني لأبغض هذا في الله فقال أهل المجلس بئس والله ما قلت أما والله لننبئنه قم يا فلان رجلا منهم فأخبره قال فأدركه رسولهم فأخبره بما قال فانصرف الرجل حتى أتى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله مررت بمجلس من المسلمين فيهم فلان فسلمت عليهم فردوا السلام فلما جاوزتهم أدركني رجل منهم فأخبرني أن فلانا قال والله إني لأبغض هذا الرجل في الله فادعه فسله على ما يبغضني فدعاه رسول الله صلى الله عليه وسلم فقال فسأله عما أخبره الرجل فاعترف بذلك وقال قد قلت له ذلك يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم فلم تبغضه قال أنا جاره وأنا به خابر والله ما رأيته يصلي صلاة قط إلا هذه الصلاة المكتوبة التي يصليها البر والفاجر قال الرجل سله يا رسول الله هل رآني قط أخرتها عن وقتها أو أسأت الوضوء لها أو أسأت الركوع والسجود فيها فسأله رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال لا ثم قال والله ما رأيته يصوم قط إلا هذا الشهر الذي يصومه البر والفاجر قال يا رسول الله هل رآني قط أفطرت فيه أو انتقصت من حقه شيئا فسأله رسول الله صلى الله عليه وسلم فقال لا ثم قال والله ما رأيته يعطي سائلا قط ولا رأيته ينفق من ماله شيئا في شيء من سبيل الله بخير إلا هذه الصدقة التي يؤديها البر والفاجر قال فسله يا رسول الله هل كتمت من الزكاة شيئا قط أو ماكست فيها طالبها قال فسأله رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال لا فقال له رسول الله صلى الله عليه وسلم قم إن أدري لعله خير منك
அபுத்துஃபைல் ஆமிர் இப்னு வாஸிலா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ஒரு மனிதர் கூட்டமாக அமர்ந்திருந்த சிலரைக் கடந்து சென்றிருக்கின்றார். அப்போது, அவர் அவர்களுக்கு ஸலாம் சொல்லி இருக்கின்றார். அவர்களும் அவருக்கு பதில் ஸலாம் கூறியிருக்கிறார்கள். அவர் அந்த இடத்தைக் கடந்ததும் கூட்டத்தில் இருந்த ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் மீது நான் அல்லாஹ்விற்காக கோபம் கொள்கிறேன்! என்று கூறியிருக்கின்றார்.
கூட்டத்தில் இருந்த இன்னொருவர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீர் கூறியதை நான் அவரிடம் கண்டிப்பாக சொல்வேன் என்று கூறிவிட்டு, எழுந்து இவரிடம் வந்து அவர் சொன்னதைக் கூறினார்.
இப்போது, அவர் தன்னிடம் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறியவர் யார் என்பதை அறிந்து கொண்டு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருமுன் வந்து நடந்தவற்றைக் கூறினார்.
மாநபி {ஸல்} அவர்களும் முழுமையாக கேட்டு விட்டு அந்த மனிதரை அழைத்து வரச் சொன்னார்கள். அவரும் அல்லாஹ்வின் தூதரின் சபைக்கு வந்தார்.
மாநபி {ஸல்} அவர்கள் “அவரிடம் ஏன் இவ்வாறு கூறினீர்? என்று கேட்டார்கள்.
அதற்கவர், அல்லாஹ்வின் தூதரே! நான் இவரின் அண்டை வீட்டுக்காரன் ஆவேன். இவரின் சில செயல்பாடுகள் தான் என்னை இவர் மீது கோபம் ஏற்பட வைத்தது” என்றார்.
அப்படி என்ன அவர் செய்கின்றார்? என்று மாநபி {ஸல்} அவர்கள் அவரிடம் கேட்டதற்கு “ஃபர்ளான தொழுகைகளைத் தவிர வேறெந்த தொழுகைகளையும் தொழ நான் இவரைக் கண்டதில்லை. ஃபர்ளான ரமலான் நோன்பைத் தவிர வேறெந்த நோன்பையும் நோற்க இவரை நான் பார்த்ததில்லை. கடமையான ஜகாத்தைத் தவிர வேறெந்த தர்மத்தையும் இவர் கொடுத்து நான் கண்டதில்லை. இது என்ன இதைத் தான் நல்லவர்களும், தீயவர்களும் செய்கின்றார்களே?
நல்லவர் என்றால் உபரியான தொழுகைகளும், நோன்புகளும், தர்மங்களும் நிறைவேற்ற வேண்டாமா? என்பது போல் அவரின் கேள்வி இருந்தது.
ஒவ்வொன்றிற்கும் அவர் பதில் சொன்னார்: “அல்லாஹ்வின் தூதரே! அவரிடம் கேளுங்கள்! என்றாவது தொழுகையை அதன் நேரம் தவறி நான் தொழுதிருக்கின்றேனா? அல்லது அதன் ருகூவு ஸுஜூது ஆகியவைகளில் ஏதாவது குறை வைத்திருக்கின்றேனா? என்று.
மாநபி {ஸல்} அவர்கள் அவரின் பக்கம் திரும்பி இது குறித்து என்ன நீர் சொல்கின்றீர்? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம்! அவர் சொல்வது உண்மைதான்! அல்லாஹ்வின் தூதரே! அவர் மிகச் சரியான நேரத்தில், மிகச் சரியாகவே தொழுகைகளை நிறைவேற்றுவார்.
அல்லாஹ்வின் தூதரே! அவரிடம் கேளுங்கள்! கடமையான நோன்பை என்றாவது நான் நோற்காமல் இருந்திருக்கின்றேனா? அல்லது அந்த நோன்பை முறிக்கும் ஏதாவது காரியங்களில் ஈடுபட்டிருக்கின்றேனா? என்று.
மாநபி {ஸல்} அவர்கள் அவரின் பக்கம் திரும்பி இது குறித்து என்ன நீர் சொல்கின்றீர்? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம்! அவர் சொல்வது உண்மைதான்! அல்லாஹ்வின் தூதரே! அவர் மிகச் சரியாக நோன்பு நோற்பார். நோன்பை முறிக்கும் எந்தக் காரியத்திலும் அவர் ஈடுபட்டதில்லை.
அல்லாஹ்வின் தூதரே! அவரிடம் கேளுங்கள்! கடமையான ஜகாத்தை கொடுக்காமல் இருந்திருக்கின்றேனா? அல்லது உரியவர்களைத் தேடி கொடுக்காமல் இருந்திருக்கின்றேனா? அல்லது ஜகாத் கடமையாகி அதை மறைத்திருக்கின்றேனா? என்று.
மாநபி {ஸல்} அவர்கள் அவரின் பக்கம் திரும்பி இது குறித்து என்ன நீர் சொல்கின்றீர்? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம்! அவர் சொல்வது உண்மைதான்! அல்லாஹ்வின் தூதரே! அவர் மிகச் சரியாக ஜகாத்தை நிறைவாற்றுவார் என்று பதில் கூறினார்.
அதுவரை எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “கடமையான அமல்கள் போக உபரியான அமல்களைச் செய்யும் உம்மை விட எல்லா விதத்திலும் அவரே சிறந்தவர் ஆவார்” என பதில் உரைத்தார்கள். ( நூல்: முஸ்னத் அஹ்மத் )
ஈஸால் ஸவாப் (இறந்தவர்களுக்கு நாம் செய்யும் நற்காரியம்) பலன் தருமா?
عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
وَيس قَلْبُ الْقُرْآنِ لَا يَقْرَؤُهَا رَجُلٌ يُرِيدُ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى وَالدَّارَ الْآخِرَةَ إِلَّا غُفِرَ لَهُ وَاقْرَءُوهَا عَلَى مَوْتَاكُمْ
யாஸீன் சூரா குர்ஆனின் இருதயமாகும்.அல்லாஹ்வையும் மறுமையையும் நாடி யார் அதை ஓதுவாரோ அவரின் பாவம் மன்னிக்கப்படும்.எனவே உங்களில் மரணித்தவர்களுக்காக யாஸீன் ஓதுங்கள்.என்று நபி ஸல் லல்லாஹு அலைஹி அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு மஃகல் ரலியல்லாஹு அன்ஹு
அஹ்மது:19415
عَنْ ابْنِ عَبَّاسٍ
أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ أَفَيَنْفَعُهَا إِنْ تَصَدَّقْتُ عَنْهَا فَقَالَ نَعَمْ
. رواه أبو داود.
ஒருவர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களிடம் வந்து-அல்லாஹ்வின் தூதரே!என் தாய் இறந்துவிட்டார்கள்,அவர்களுக்காக நான் தர்மம் செய்தால் அது அவர்களுக்கு பலன் தருமா?என கேட்டபோது, ஆம்! பலன் தரும் என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.நூல்:அபூதாவூது:2496
பாக்கியமான இந்த இரவை துஆவின் மூலம் அழகுபடுத்துவோம்
ஆக கண்ணியத்திற்குரிய மேன்மக்களே! அலட்சியத்தை அகற்றி, எச்சரிக்கை உணர்வோடு ஒவ்வொரு நாட்களையும் நகர்த்தி எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருமுன் சமர்ப்பிக்கப்படுகிற நம் அமல்கள் அல்லாஹ்வை மகிழ்ச்சியுறச் செய்யும் வகையிலே அமைவதற்கு நாம் முயற்சி மேற்கொள்வோம்!
அல்லாஹ் நம் எண்ணங்களை அழகாக்குவானாக! நற்செயல்கள் புரிய ஆர்வத்தை தருவானாக! பேணுதலான வாழ்க்கை வாழ தவ்ஃபீக் செய்வானாக! அவனது கடமைகளை தவறாமல் நிறைவேற்றுகிற மேன்மக்களாக நம்மை ஆக்கியருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்
Comments
Post a Comment