தமிழ் கலாச்சாரமும் இஸ்லாமும் ஷரீயத்தில் ஓர் பார்வை!!
மனித சமூகம் பூமியில்
வாழத் துவங்கிய நாள் முதற்கொண்டு
கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு
ஆகியவற்றின் வரலாறும் துவங்கிவிட்டது...
மனித சமூகத்தின் உயர்வு
தாழ்வுகளை அடையாளப்படுத்துகிற உயர்ந்த ஓர்ஆயுதம் தான் இந்த கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு என்பவைகள்.
தாழ்வுகளை அடையாளப்படுத்துகிற உயர்ந்த ஓர்ஆயுதம் தான் இந்த கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு என்பவைகள்.
ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு சமூகமும் ஏதாவதொரு கலாச்சாரத்தோடும், நாகரிகத்தோடும் பண்பாட்டோடும் வாழ்ந்து சென்றிருக்கின்றனர்.
மறவாமல் தங்களின் கலாசாரத்தையும், நாகரிகங்களையும், பண்பாடுகளையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றனர்.
அதனடிப்படையில் தமிழர்களின் 1500 கால, ஒரு வரலாற்றுக் குறிப்பின் படி கி.மு 2000 க்கும் முன்பிலிருந்து மரபாகவும், பண்பாடாகவும், தமிழர்களின் வீரத்திற்கு அடையாளமாகவும் விளங்கி வந்த ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு, மீண்டும் நடத்தப்படுவதற்காக தமிழகம் மற்றும் தமிழர்கள் வாழும் உலக நாடுகளில் போராட்டம் வலுப்பெற்று வருகின்றது.
தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு பாரம்பரியத்திற்காக போராடி வருகிறோம்.
பொங்கல் என்பது குறிப்பிட்ட ஒரு சமயத்திற்கு மட்டும் உரித்தானது அல்ல.
அது தமிழர்களான எல்லோருக்கும் உரித்தானது.
அவரவர்கள் சடங்கு சம்பர்தாயங்களுக்கு ஏற்ப கொண்டாடுகின்றனர் அவ்வளவு தான்.
எந்த ஒரு பிரதேசமும் அடையாளங்களை மீறி வாழ்வதில்லை.
வாழ்வியலின் அடிப்படையே அடையாளம் தான்.
வரலாற்றில் உலகம் முழுவதும் நடைபெற்ற,நடந்து கொண்டிருக்கிற தேசிய இனப்போராட்டங்கள் அனைத்துமே அடையாள அரசியலின் எழுச்சியே.
இந்நிலையில் உலகத்தின் அனைத்து பகுதியும் அடையாளம் மற்றும் அதனோடு இனைந்த கலாசாரம்
இவற்றோடு பிணைக்கப்பட்டிருக்கிறது.
இவற்றோடு பிணைக்கப்பட்டிருக்கிறது.
இவற்றை துறந்துவிட்டு வாழ்வது சாத்தியமல்ல.
உலகம் முழுவதும் மனித உடலமைப்பு ஒரே சீரானதாக இல்லை.
அது பிரதேசங்களுக்கு தகுந்த படி மாறுபடுகிறது.
இதன் தொடர்ச்சியில் மொழியே முதன்மை பெறுகிறது.
உலகில் உள்ள எல்லா பிரதேச மொழிகளும் அதன் மனிதர்களும் அடையாளங்களோடு தான் இயங்குகின்றனர்.
பிறக்கும் குழந்தையானது தன் ,
மதம், தெய்வம் இவற்றை அறிவதற்கு முன்பாகவே தன் மொழியை அறிந்து கொள்கிறது.
மதம், தெய்வம் இவற்றை அறிவதற்கு முன்பாகவே தன் மொழியை அறிந்து கொள்கிறது.
இந்நிலையில் தமிழ் மொழியோடு, அதன் மண்ணோடு, அது சார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளோடு இயங்கும் அனைவரும் தமிழர்களே.
பல்வேறு மக்கள் பல்வேறு காலகட்டங்களில் தங்களின் சமூக,பொருளாதார, கலாசார காரணங்களுக்காக இஸ்லாத்திற்கு மாறினார்கள்.
அது உளவியல் மாற்றமே.
அது உளவியல் மாற்றமே.
இதன் தொடர்ச்சியில் ....
மொழியால், அதன் கலாசாரத்தால் பிணைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் அனைவருமே தமிழர்கள் தான்.
மொழியால், அதன் கலாசாரத்தால் பிணைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் அனைவருமே தமிழர்கள் தான்.
பல அற்புதமான தமிழ் இலக்கியங்களை படைத்த. இஸ்லாமிய முன்ணோர்கள்..
உமறுபுலவர்,..... வள்ளல் சீதக்காதி,
சேகனா புலவர்,... குணங்குடி மஸ்தான்,
பீரப்பா,.... சதக்கதுல்லா அப்பா போன்றவர்கள் தமிழுக்கு பல அரிய தத்துவம் மற்றும் வரலாறு சார்ந்த இலக்கிய படைப்புகளை அளித்துள்ளனர்.
சேகனா புலவர்,... குணங்குடி மஸ்தான்,
பீரப்பா,.... சதக்கதுல்லா அப்பா போன்றவர்கள் தமிழுக்கு பல அரிய தத்துவம் மற்றும் வரலாறு சார்ந்த இலக்கிய படைப்புகளை அளித்துள்ளனர்.
இதில் தமிழுடன் கழந்த இஸ்லாமிய அடையாளத்தை மற்றுவதற்க்கோ..அல்லது.. துண்டித்து கொள்வதோ...அல்லது மற்றவர்களால் துண்டிக்கப்படுவதோ... அபத்தமானது.
தமிழர்களின் திருநாளான பொங்கல் சங்ககாலம் தொட்டே கொண்டாடப்பட்டு வருகிறது.
எந்த ஒரு மத அல்லது சமூகத்தின் பண்டிகைகளும் அதற்கான தகுந்த வரலாற்று காரணங்களோடும்,
முறையியலோடும் கொண்டாடப்படுவது வழக்கம்.
முறையியலோடும் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் தமிழர்களின் பொங்கல் பண்டிகையும் வரலாற்று ரீதியாக விவசாய செயல்பாடுகளோடு தொடர்புடைய ஒன்று.
தங்களின் நிலங்களில் விவசாயம் செய்துவிட்டு அதற்கான மகசூலை அவர்கள் தை முதல் நாளில் அறுவடை செய்கிறார்கள்.
. இம்மாதிரி விவசாயத்தோடு தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக விழாக்கள் நடத்தப்படும் வழக்கம்
உலகம் முழுக்கவே இருக்கின்றது.
அதன் ஒரு பகுதி தான் தமிழ்நாட்டின் பொங்கல் பண்டிகை.
உலகம் முழுக்கவே இருக்கின்றது.
அதன் ஒரு பகுதி தான் தமிழ்நாட்டின் பொங்கல் பண்டிகை.
முஸ்லிம் சமூகத்தின் எண்ட்ரி ஏன்?
தற்போது, முஸ்லிம் சமூகத்தின் முன்னால் மூன்று அம்சங்கள் கேள்விகளாக முன் வைக்கப்பட்டுள்ளது.
1. நம்முடன் அண்ணன் தம்பிகளாக, சகோதர வாஞ்சையோடு பழகியும், கொடுத்தும், வாங்கியும் வந்து கொண்டிருக்கிற தமிழ்ச்சமூகம் அதன் கலாச்சாரத்தை, அடையாளத்தை இழந்து, அதை மீட்டெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.
அதை முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாலானவர்கள் ஆதரித்து, அந்த போராட்டத்தில் தங்களையும் இணைத்து இருக்கின்றார்கள்.
இது எந்தளவு ஷரீஅத் ரீதியாக சரி?
2. இப்போது, வதை என்ற போர்வையில் ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி வழக்கு தொடர்ந்த 6 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத்தின் மூலமாக தடை உத்தரவையும்,
தொடர்ந்து இப்போது வரை நடத்த விடக்கூடாது என்பதில் முழுமூச்சாக களம் கண்டிருக்கும் ஓர் அமைப்பு தான் பீட்டாவாகும்.
தொடர்ந்து இப்போது வரை நடத்த விடக்கூடாது என்பதில் முழுமூச்சாக களம் கண்டிருக்கும் ஓர் அமைப்பு தான் பீட்டாவாகும்.
எதிர்காலத்தில், நம்முடைய குர்பானிக்கும் தடை கோரி இவர்கள் வழக்கு தொடர மாட்டார்கள் என்று எந்த உத்தரவாதம் இருக்கின்றது?
ஃபாஸிச மத்திய அரசு ஆண்டு கொண்டிருக்கிற தருணத்தில், இவர்கள் வழக்கு தொடர்ந்தால் பாபர் மசூதி வழக்கு, சிறைவாசிகள் வழக்கு, தற்போதைய பொதுசிவில் சட்டம் போன்றவற்றில் காட்டும் வேகத்தை அரசு இதிலும் காட்டும்.
சகோதர சமுதாய மக்களின் கலாச்சாரத்திற்காக குரல் கொடுக்கும் அதே வேளையில்,
பீட்டாவை நோக்கியும் நம்முடைய கண்டனக் குரல்கள் உரக்க முழங்க வேண்டும்.
3. பொதுவாக, வெகுஜன மக்களால் முஸ்லிம் சமூகத்தின் மீது ஒரு குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகின்றது.
அதாவது, ”முஸ்லிம்கள் அவர்களின் சொந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள்,
சுய நலம் நிறைந்தவர்கள்,
தங்களின் பிரச்சனைகளுக்கு மட்டுமே போராடக்கூடியவர்கள்,
தேசிய, மாநில நீரோட்டத்தின் மீதமைந்த பிரச்சனைகளின் போது அதில் கலந்து கொள்ளமாட்டார்கள்” என்று.
போராட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பு எதற்காக?
1. தற்போதைய முஸ்லிம் சமூகத்தின் போராட்ட பங்களிப்பு என்பது நன்றிக்கடன் என்ற அர்த்தத்திலும் வைத்துக் கொள்ளலாம்.
قال - صلى الله عليه وسلم -:
مَن أعطى شيئًا فوجَد، فليَجزِ به،
எவருக்கு ஒரு உபகாரம் செய்யப்பட்டதோ, அவரிடம் வசதி இருந்தால் உபகாரம் செய்தவருக்குஅவர் பகரம் செய்யட்டும்.
مَن أعطى شيئًا فوجَد، فليَجزِ به،
எவருக்கு ஒரு உபகாரம் செய்யப்பட்டதோ, அவரிடம் வசதி இருந்தால் உபகாரம் செய்தவருக்குஅவர் பகரம் செய்யட்டும்.
ومَن لم يجد، فليُثنِ به، فإنَّ أَثنى به، فقد شكَره، وإنْ كتَمه، فقد كفَره،
இல்லையாயின் இன்னார் எனக்கு உபகாரம் செய்தார் என மக்களிடம் கூறி அவருக்காக துஆ செய்யட்டும். எவர் அவ்விதம் நடந்து கொள்கின்றாரோ அவர் நன்றி செலுத்திவிட்டார். எவர் மக்களிடம் மறைத்துப் பேசுவாரோ அவர் நன்றி கொன்றவாகி விட்டார்” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்:திர்மிதீ )
இல்லையாயின் இன்னார் எனக்கு உபகாரம் செய்தார் என மக்களிடம் கூறி அவருக்காக துஆ செய்யட்டும். எவர் அவ்விதம் நடந்து கொள்கின்றாரோ அவர் நன்றி செலுத்திவிட்டார். எவர் மக்களிடம் மறைத்துப் பேசுவாரோ அவர் நன்றி கொன்றவாகி விட்டார்” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்:திர்மிதீ )
ஏனெனில், இன்னொஸன்ஸ் ஆஃப் முஸ்லிம் தொடர்பான பிரச்சனை, சமீபத்திய பொதுசிவில் சட்ட எதிர்ப்பு தொடர்பான பிரச்சனை ஆகியவைகளின் தமிச்சொந்தங்களின் குரல்கள் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக ஒலித்ததை முஸ்லிம் சமூகம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.
தமிழ்ச்சமூகத்தின் ஒரு சிலர் செய்த உபகாரத்திற்கு எப்படி ஒரு சமூகத்திற்கே பிரதி உபகாரம் செய்ய முடியும் என்று கேட்கலாம்?
மாநபி {ஸல்} அவர்கள் பத்ர் கைதிகள் விடுதலை விஷயத்தில் சமரசம் பேச வந்த மக்கத்து குறைஷித்தலைவர்களின் பிரதிநிதிகளிடம் “இப்போது முத்இம் இப்னு அதீ அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் நான் அவருக்காக கைதிகளை விடுதலை செய்திருப்பேன்” என்று மறுமொழி பகர்ந்தார்கள்.
ஆம்! முத்இம் இப்னு அதீ என்பவர், பெருமானார் {ஸல்} அவர்களும், நபித்தோழர்களும் ஊர் விலக்கம் செய்யப்பட்டார்கள் எனும் அறிவிப்புப் பலகையை கஅபாவில் இருந்து அப்புறப்படுத்தி, மாநபி {ஸல்} அவர்களுக்கும், நபித்தோழர்களுக்கும் மீண்டும் மகத்துப் பூமியில் நடமாட உதவி செய்தவர்கள். ஆகையால் தான் முத்இம் இப்னு அதீ என்ற தனியொரு மனிதருக்காக எவ்வித ஈட்டுத்தொகையும் இல்லாமல் கைதிகளை விடுவித்து இருப்பேன் என மாநபி {ஸல்} அவர்கள் முழங்கினார்கள்.
அந்தக் கைதிகள் ஒன்றும் சாதாரணமானவர்கள் அல்ல, இஸ்லாமும், முஸ்லிம்களும் இப்பூமியில் இருக்கவே கூடாது என்று சூளுரைத்தவர்கள். அத்தகையவர்களையே மாநபி {ஸல்} அவர்கள் தனியொரு நபரின் உபகாரத்திற்காக பிரதி உபகாரம் செய்ய முன்வந்தார்கள்.
2. சமநிலைச்சமுதாயம் எனும் அடைமொழிக்குச் சொந்தமான ஓர் உயரிய சமூகம் எனும் அடையாளத்தில் பங்கெடுத்துக் கொள்ளலாம்.
“மேலும், முஸ்லிம்களான உங்களை நாம் உம்மத்தன் வஸத்தன் – சமநிலை யுடையச் சமுதாயமாக ஆக்கினோம்”.
( அல்குர்ஆன்: 2: 142 )
( அல்குர்ஆன்: 2: 142 )
சமநிலையுடையச் சமுதாயம் என்பது தங்களுடைய கொள்கைக் கோட்பாடுகளில் மாற்றார்களின் எவ்வித சமரசங்களையும் ஏற்றுக் கொள்ளாமல், அதே நேரத்தில் தங்களோடு அருகில் வாழ்கிற சமூக, சமுதாய மக்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த, அவர்களின் சுக, துக்கங்களின் போது பங்கெடுக்கிற ஓர் சமூகமாகவே பங்கெடுக்கும் ஆற்றல் கொண்டது.
அந்த வகையில், நம்மோடு வாழ்கிற தமிழ்ச்சமூகம் இப்போது சிக்கலுக்கு ஆளாகியுள்ளது, இந்த தேசத்தின் அரசியல் சாசனம் வழங்கியிருக்கிற உரிமையை கலாச்சார அடையாளத்தை இழக்கும் தருணத்தில் இருப்பதாக அவர்களின் போராட்டத்தின் வாயிலாக நாம் அறிய முடிகின்றது.
இப்போது, நாம் அவர்களின் குரலுக்கு வலு சேர்க்கும் முகமாக நம்முடைய குரலை பதிவு செய்வது சமநிலைச் சமுதாயம் எனும் அடையாளத்திற்கு அழகு சேர்ப்பது போல் ஆகும்.
மாநபி {ஸல்} அவர்கள், மதீனாவிற்குள் காலெடி எடுத்து வைத்த சில நாட்பொழுதிலேயே அருகில் வசிக்கிற சிறு, சிறு குழுக்களிடையே ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டார்கள்.
அவ்வொப்பந்தத்தில் இதுவும் ஒன்று. அதாவது, ”எங்களுக்கு எதிராக யாரவது படை நடத்தி வந்தாலோ, அல்லது எங்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்தாலோ அதில் நீங்கள் பங்கெடுக்கக் கூடாது. மேலும், அவர்களுக்கு உதவி செய்யக் கூடாது. நீங்கள் எங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ள வேண்டும்.
மேலும், இதே போன்று உங்களுக்கு எதிராக எவராவது நடந்து கொண்டால் நாங்களும் மேற்சொன்ன அடிப்படையில் நடந்து கொள்வோம்” என்று.
ஆக, பல்வேறு பட்ட கலாச்சாரங்கள், பண்பாடுகள் கொண்ட சமூக மக்களோடு வாழ்கிற போது முஸ்லிம் சமூகம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற மகத்தான பாடத்தை மாநபி {ஸல்} அவர்கள் இங்கே நமக்கு போதிக்கின்றார்கள்.
இதன் அடிப்படையிலும் போராட்டத்தில் பங்கெடுக்கும் ஒரு முஸ்லிமோ, முஸ்லிம் சமூகமோ ஷரீஆவின் நீரோட்டத்தை விட்டு வெளியேறிச் சென்றிடவில்லை.
3. வருமுன் காப்போம் எனும் விழிப்புணர்வோடு இப்போராட்டத்தில் பங்கெடுப்பதாகவும் வைத்துக் கொள்ளலாம்.
மிகவும் மோசமான கொள்கைகளைக் கொண்டது தான் பீட்டா எனும் அமைப்பு, 2000 ஆண்டு பழமை வாய்ந்த, பன்னெடுங்கால வரலாற்றுச் சிறப்பைக் கொண்ட ஒரு மாநிலத்தின் பெரும்பான்மைச் சமூகத்தின் ஒரு அடையாளத்தை வெறும் ஆறு ஆண்டுகளில் சிதைக்க முற்பட்டு, அதில் நீதிமன்ற மற்றும் அரசின் துணையோடு சிறிய அளவிளான வெற்றியைப் பெற்றிருக்கிறது என்றால்….
நமக்கு முற்றிலும் எதிரான சிந்தனை கொண்ட ஃபாஸிச அரசின் துணை கொண்டு, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான தீர்ப்புக்களையே வழங்கிப் பழகிய நீதிமன்றங்களின் உதவியோடு நம்முடைய வணக்க, வழிபாடுகளில் ஒன்றான குர்பானியை தடை செய்யக் கோரவோ, அல்லது இன்னபிற வழிகளில் கெடுதல் செய்யவோ வாய்ப்பும் இருக்கிறது.
எனவே, நம்முடைய பங்களிப்பு என்பது பீட்டாவை எச்சரிப்பதோடு, நம்முடைய எதிர்கால பிரச்சனைகளின் போது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் கவனத்தை பெரும் விதமாக அமைந்து இருக்கும்.
இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்
இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதாயங்கள்தாம் உண்டு. ஒன்று இஸ்லாமிய சமுதாயம்.
இன்னொன்று ஜாஹிலிய்ய சமுதாயம்
இஸ்லாமிய சமுதாயம் என்பது அல்லாஹ் ஒருவனே என்பதை நம்பி அந்த அல்லாஹ் காட்டிய வழியில் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் அமைத்துக் கொள்கின்ற சமுதாயம்.
ஜாஹிலிய்ய சமுதாயம் என்பது இஸ்லாத்தைப் பின்பற்றாத சமுதாயம்.
் முதலில் நாகரிகம் என்பதன் பொருளைப் புரிந்து கொள்வோம்.
ஒரு சமுதாயம் இருக்கின்றது. இந்தச் சமுதாயத்தில் இறைவனே அதிகாரி. ஆட்சியாளன்.
இந்தச் சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கமும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் வழியே வாழ்கின்றன. இந்தச் சமுதாயத்தின் ஒவ்வொரு அசைவும் அந்த அல்லாஹ்வின் ஷாரீஅத் படியே அசைகின்றன. இந்தச் சமுதாயத்தில் யாருக்கு யாரும் அடிமையல்ல.
ஒவ்வொரு மனிதனும் உண்மையான முழுமையான சுதந்திரத்தைப் பெற்று வாழுகின்றான்.
ஒவ்வொருவரும் தனது திறமைகளையும் ஆற்றல்களையும் தாராளமாகப் பயன்படுத்திடும்
உரிமை அங்கே இருக்கின்றது.
இந்தச் சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கமும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் வழியே வாழ்கின்றன. இந்தச் சமுதாயத்தின் ஒவ்வொரு அசைவும் அந்த அல்லாஹ்வின் ஷாரீஅத் படியே அசைகின்றன. இந்தச் சமுதாயத்தில் யாருக்கு யாரும் அடிமையல்ல.
ஒவ்வொரு மனிதனும் உண்மையான முழுமையான சுதந்திரத்தைப் பெற்று வாழுகின்றான்.
ஒவ்வொருவரும் தனது திறமைகளையும் ஆற்றல்களையும் தாராளமாகப் பயன்படுத்திடும்
உரிமை அங்கே இருக்கின்றது.
இந்த உரிமையைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்தி விளைவிக்கும் பலன்கள் அந்தச் சமுதாயத்தின் வாழ்வுக்குப் பயன்படுகின்றது.
இப்படி முழுமையான சுதந்திரத்தோடு வாழும் ஒரு சமுதாயமே நாகரிகமான சமுதாயம். இதுவே மனித நாகரிகம். நாகரிகம் என்பதன் அடிப்படையே எல்லோருக்கும் முழுமையான விடுதலை. சுதந்திரம் என்பதன் அடிப்படையில் ஏற்படுவதே. மனித நாகரிகம் என்பதன் உயிர் மூச்சே எல்லோரும் சமம், யாருக்கும் யாரும் குறைந்தவனல்ல யாருக்கு யாரும் அடிமையல்ல என்ற அடிப்படையின்மேல் எழுப்பப்படும் பண்பாடுதான்.
இதற்கு நேர்மாறாக ஒரு சமுதாயம் இருக்கின்றது. இந்தச் சமுதாயத்தில் சில மனிதர்கள் சீமான்களாகவும் கோமான்களாகவும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்கள் தாம் சட்டங்களையும் தங்களுக்குத் தாழ்பணிபவர்கள் எப்படி வாழ வேண்டும் என்ற விதிகளையும் வகுத்துத் தருகின்றார்கள். இதே சமுதாயத்தின் இன்னொரு பிரிவினர் அடிமைகளாக வாழ்கின்றார்கள். இவர்களுக்கு இந்தச் சீமான்கள் சொன்னதைச் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்றொரு நிலை. தங்கள் திறமைகளைப் பயன்படுத்திட சுதந்திரம் வழங்கப்படவில்லை. தங்கள் ஆற்றல்களைப் பயன்படுத்தி ஆளாக முடிவதில்லை. இவர்கள் தங்கள் ஆற்றல்களையும் திறமைகளையும் அந்தக் கோமான்களின் போக வாழ்வுக்குத்தாரை வார்த்துத் தந்திட வேண்டியதிருக்கின்றது. இந்தச் சமுதாயமே நாகரிமற்ற சமுதாயம்.
இறைவனின் தூய மார்க்கத்திற்காக நம்முடைய சமூக நீதி, வாழ்வாதாரப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும் ஒருமுகப்படுத்தி ஒரே நோக்கமாக போராடினால் நமக்கான வெற்றி சமீபத்தில் இருக்கிறது. இந்த மார்க்கத்தை வலுப்படுத்தாமல் நாம் எந்த விதமான போராட்டத்தை முன்னெடுத்து சென்றாலும் அதில் தோல்வியும் காயமுமே நமக்கு மிஞ்சும்.
நாம் பார்க்கக்கூடிய உலகெங்கிலும் நடக்கும் போராட்டங்கள் வெற்றி அடையாததன் பின்னணி இது தான் தனித்தனி குழுக்களாக (24-அமைப்புகளாக) நாம் பிரிவுகளாக போராடி எந்தக் காலத்திலும் நோக்கத்தை அடைய முடியாது.
உண்மை முஃமின்களாக கருத்து வேறுபாடுகளை களைந்து இறைவனின் மார்க்கத்திற்காக உலக ஆதாயங்களை நாடாமல் யாருடைய தலைமைக்கும் கட்டுப்பட்டு ஸஹாபாக்களைப் போல மன உறுதியோடு நாம் போராடும் நாள் தான் நம் எதிரிகள் நம்மைப் பார்த்து பயப்படும் நாளாக நமது சிரமங்களில் இருந்து நாம் விடுபடும் நாளாக உலகெங்கிலும் நாம் தலைநிமிர்ந்து மார்க்கத்தை எடுத்துச் சொல்ல ஏதுவாக அமையும் .
وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ
நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன் 47:38)
மேலும் இறைவனின் கட்டளைப்படி நேரான வழியில் நடக்கும் ஒரு சமூகம் கியாமத் வரை நிலைத்திருக்கும் என்றும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
من حديث الْمُغِيرَةِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: "لَنْ يَزَالَ قَوْمٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى النَّاسِ حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ ظَاهِرُونَ". البخاري (3640)، ومسلم (1921).
என் சமூகத்தில் ஒரு கூட்டம் பிற மக்களை (மார்க்கத்தின் விஷயத்தில்) மிகைத்தவர்களாக அல்லாஹ்வின் கட்டளை (கியாமத் ) வரும் வரை நீடித்திருப்பார்கள். (நூல் :புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ் இத்தகைய கூட்டத்தில் அவன் கட்டளைப்படி நடந்து தன் மார்க்கத்தை நிலைநிறுத்திட பாடுபடும் நல்லடியார்கள் முஜாஹிதீன்களில் நம்மை தேர்ந்தெடுத்துக் கொள்வானாக!
நம் சமூக மக்களுக்காக எல்லா வகையிலும் கருத்து வேறுபாடுகள் மறந்து போராடி அவர்களுக்கு நீதியை பெற்றுத் தர நம்மை காரணியாக ஆக்குவானாக.
என்றும் மிகைத்திடும் உண்மை முஃமின்களாக நம்மையும் நமது மனைவி மக்களையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக ஆமீன்.
Comments
Post a Comment