Posts

ஆஷூரா துஆ பொருளுடன்

*ஆஷூரா துஆ பொருளுடன்.* بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم عليه اَللّٰهُمَّ يَاقَابِلَ تَوْبَةِ اٰدَمَ يَوْمَ عَاشُوْرَاء ، ஆஷூரா நாளன்று ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய தவ்பாவை ஏற்று அங்கீகரித்த நாயனே! وَياَرَافِعَ اِدْرِيْسَ اِلَى السَّمَاءِ يَوْمَ عَاشُوْرَاءَ ، ஆஷூரா நாளன்று இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வானத்தளவில் உயர்த்திய நாயனே! وَيَامُسَكِّنَ سَفِيْنَةَ نُوْحٍ عَلَى الْجُوْدِيِّ يَوْمَ عَاشُوْرَاءَ ، ஆஷூரா நாளன்று நபி நூஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய கப்பலை பாதுகாவலுடன் ஜூதி மலைக்கு மேல் நிம்மதியுடன் தரிபடுத்தி வைத்த நாயனே! وَيَامُنَجِّيَ اِبْرَاهِيْمَ مِنْ نَارِ نَمْرُوْدَ يَوْمَ عَاشُوْرَاءَ ، ஆஷூரா நாளன்று நம்ரூதுடைய நெருப்பை விட்டும் இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈடேற்றமாக்கி வைத்த நாயனே! وَيَاجَامِعَ شَمْلِ يَعْقُوْبَ يَوْمَ عَاشُوْرَاء، ஆஷூரா நாளன்று யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவர்கள் கூட்டம், குடும்பத்தினருடன் ஓன்று சேர்த்த நாயனே! وَيَاكَاشِفَ الضُّرِّ اَيُّوْبَ يَوْمَ عَاشُوْرَاءَ ، ஆஷூரா நாளன்று ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்க...

அற்புதங்கள் நிறைந்த ஆஷுரா தினம்

♣ அரபி அகராதியில் ” عاشوراء ” என்பதற்க்கு:- ஆஷூரா – عَاشُورَاءَ என்ற அரபிச் சொல்லுக்கு ‘பத்தாவது’ என்று பொருளாகும். இதனடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் 10 – ம் நாள் ஆஷூரா ஆகும். ஆஷூரா அன்று நடந்த சம்பவங்களில் சில... بِعشر كرامات. الأول: مُوسَى عَلَيْهِ السَّلَام، فَإِنَّهُ نصر فِيهِ، وفلق الْبَحْر لَهُ، وغرق فِرْعَوْن وَجُنُوده. الثَّانِي: نوح عَلَيْهِ السَّلَام اسْتَوَت سفينته على الجودي فِيهِ. الثَّالِث: يُونُس، عَلَيْهِ السَّلَام، أنجي فِيهِ من بطن الْحُوت. الرَّابِع: فِيهِ تَابَ الله على آدم عَلَيْهِ السَّلَام، قَالَه عِكْرِمَة. الْخَامِس: يُوسُف عَلَيْهِ السَّلَام، فَإِنَّهُ أخرج من الْجب فِيهِ. السَّادِس: عِيسَى عَلَيْهِ السَّلَام، فَإِنَّهُ ولد فِيهِ، وَفِيه رفع. السَّابِع: دَاوُد، عَلَيْهِ السَّلَام، فِيهِ تَابَ الله عَلَيْهِ. الثَّامِن: إِبْرَاهِيم، عَلَيْهِ السَّلَام، ولد فِيهِ. التَّاسِع: يَعْقُوب، عَلَيْهِ السَّلَام، فِيهِ رد بَصَره. ذكر بَعضهم من الْعشْرَة: إِدْرِيس، عَلَيْهِ السَّلَام، فَإِنَّهُ رفع إِلَى مَكَان فِي السَّمَاء، وَأَيوب، عَلَيْهِ السَّلَام، فِيهِ كشف الله ضره...

*மாதிஹுர்ரசூல் ஸதகத்துல்லாஹ் அப்பா ரழியல்லாஹு அன்ஹு*

நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையில் ஒரு கல்லூரி உள்ளது. அதனை சுருக்கமாகவோ செல்லமாகவோ அப்பா காலேஜ் என்று தான் அழைப்பர். அந்த அப்பா வேறு யாருமல்ல நம் ஸதகத்துல்லாஹ் அப்பாவேதான். வலிமார்களை அன்பொழுக அப்பா என்றழைக்கும் நடைமுறை நம்மிலே இருந்தாலும் கூட அப்பா என்று கூறப்பட்டால் அது ஸதகத்துல்லாஹ் அப்பா அவர்களையே குறிக்கும் என்பது நாம் குறித்து வைக்க வேண்டிய செய்தி.  காயல்பட்டணத்தில் மரைக்கார் பள்ளியில் மறைந்து வாழும் மஹான் காமில் வலி அஷ்ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர் களுக்குப் பிறந்த ஐந்து ஆண் மக்களுமே அவ்லியாக்கள் என அறியப்பட்டவர்கள். அவர்களில் மூன்றாம் மகனாக தோன்றியவர்களே இமாம் ஸதகத்துல்லாஹ் அப்பா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.  அவர்கள் பெயராலேயே ஒரு கல்லூரி இயங்கி வருவது நம் இதயங்களை இன்புறச் செய்யும் இனியசெய்தி. காயல்பட்டணத்தில் பிறந்தார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே சீர் மறைக்குர்ஆன் முழுவதையும் சிந்தையில் நிறுத்தி சிறப்புற்றார்கள்.  அதிராம்பட்டணத்தைச் சார்ந்த சின்னீனா லெப்பை ஆலிம் எனும் சீலரிடம் மேல் கவியைக் கற்றார்கள்.  மேலப்பாளையைத்தைச் சார்ந்த மர்யம் எனும் ...

குர்பானியின் சட்டங்கள்

“துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் நற்செயல்கள் மற்ற நாட்களில் செய்யப்படுகின்ற நற்செயல்களைவிட அல்லாஹுதஆலாவுக்கு மிக உவப்பானதாகும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.  (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரீ) “இறைவனுக்காக வணக்கம் புரிய துல்ஹஜ்ஜின் பத்து நாட்களைவிட சிறந்த காலம் ஏதுமில்லை. அந்நாட்களில் ஒரு நாள் நோன்பு வைப்பது வருடம் முழுவதும் நோன்பு வைத்ததற்கு நிகராகும். மேலும் அந்நாட்களில் இரவுகளில் ஓரிரவு வணக்கம் புரிவது லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்கிய தற்கு நிகராகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளி யுள்ளார்கள். (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதீ, இப்னு மாஜா). துல்ஹஜ் ஒன்பதாம் நாள் “அரஃபாவின் நோன்பு (துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாளின் நோன்பு) நான் அல்லாஹ்வின் மீது “அவன் அந்நாளின் முந் தைய ஆண்டு, பிந்தைய ஆண்டு (இரு ஆண்டின்) பாவங் களுக்கு பரிகாரமாக ஆக்குவான்” என்று ஆதரவு வைக்கி றேன்” என நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் பகன்றுள் ளார்கள்.     (அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி), நூல் : முஸ்லிம்) துல்...