*மாதிஹுர்ரசூல் ஸதகத்துல்லாஹ் அப்பா ரழியல்லாஹு அன்ஹு*
நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையில் ஒரு கல்லூரி உள்ளது. அதனை சுருக்கமாகவோ செல்லமாகவோ அப்பா காலேஜ் என்று தான் அழைப்பர். அந்த அப்பா வேறு யாருமல்ல நம் ஸதகத்துல்லாஹ் அப்பாவேதான். வலிமார்களை அன்பொழுக அப்பா என்றழைக்கும் நடைமுறை நம்மிலே இருந்தாலும் கூட அப்பா என்று கூறப்பட்டால் அது ஸதகத்துல்லாஹ் அப்பா அவர்களையே குறிக்கும் என்பது நாம் குறித்து வைக்க வேண்டிய செய்தி. காயல்பட்டணத்தில் மரைக்கார் பள்ளியில் மறைந்து வாழும் மஹான் காமில் வலி அஷ்ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர் களுக்குப் பிறந்த ஐந்து ஆண் மக்களுமே அவ்லியாக்கள் என அறியப்பட்டவர்கள். அவர்களில் மூன்றாம் மகனாக தோன்றியவர்களே இமாம் ஸதகத்துல்லாஹ் அப்பா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். அவர்கள் பெயராலேயே ஒரு கல்லூரி இயங்கி வருவது நம் இதயங்களை இன்புறச் செய்யும் இனியசெய்தி. காயல்பட்டணத்தில் பிறந்தார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே சீர் மறைக்குர்ஆன் முழுவதையும் சிந்தையில் நிறுத்தி சிறப்புற்றார்கள். அதிராம்பட்டணத்தைச் சார்ந்த சின்னீனா லெப்பை ஆலிம் எனும் சீலரிடம் மேல் கவியைக் கற்றார்கள். மேலப்பாளையைத்தைச் சார்ந்த மர்யம் எனும் ...