பத்ர் யுத்தம்
ரமளான் மாதம் பிறை 17- ல் இஸ்லாமிய முதல்போர் பத்ரு யுத்தம் . பத்ரு யுத்தம் பற்றி நாம் அனைவரும் தெரிந்திருந்தாலும் ஒவ்வொரு முஸ்லீமும் அந்த நிகழ்வை ஞாபகப்படுத்துவதன் மூலம் நம்முடைய தக்வாவை அதிகரிக்கலாம். பத்ருப்போர் ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டு (கி.பி.624) ரமளான் மாதம் 17ஆவது நான் வெள்ளிக்கிழமை நடந்தது. அது (உண்மையையும் பொய்மையையும்) பிரித்துக் காட்டிய நாள் ஆகும். அன்று இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அல்லாஹ் கண்ணியப்படுத்தினான். அந்த நாளில் இணைவைப்பை அழித்தான்.இணைவைப்புப் படையினரையும் அதன் இருப்பிடத்தையும் நிர்மூலமாக்கினான். இத்தனைக்கும் அந்நாளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை(எதிரிகளின் எண்ணிக்கையைவிடக்)குறைவாகவே இருந்தது. முஸ்லிம்கள் அன்றைய தினம் 313 பேரே இருந்தனர். அவர்களிடம் 1குதிரைகளும், 70 ஒட்டகங்களுமே இருந்தன. எஞ்சிய அனைவரும் காலாட்படையினர் ஆவர். அவர்கள் அனைவரும் தேவையான (போர்த்)தளவாடங்கள்கூட அவர்களிடம் இருக்கவில்லை. அன்று எதிரிகள் தொள்ளாயிரத்திலிருந்து ஓராயிரம்(9000-1000) பேர்வரை இருந...